குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 17, 2021

சர்வ ஞான உத்தர ஆகமத்தின் (யோகபாதம்) படி யோகசாதனைக்கான நிபந்தனைகள்

 சர்வ ஞான உத்தர ஆகமத்தின் (யோகபாதம்) படி யோகசாதனைக்கான நிபந்தனைகள்

Posted in FB : https://www.facebook.com/tsumanenthiran/posts/10158138005541589

**************************************************
சிவபெருமான் முருகனிற்கு உபதேசிக்கும் படியான இந்த ஆகமத்தின் யோக பாதம் யோக சாதகன் எப்படி யோக சாதனையைத் தொடங்க வேண்டும் என்ற வழிமுறையைச் சொல்கிறது!
இது துல்லியமான மொழிபெயர்ப்பு அல்ல, சுருக்கமாக விஷயத்தைப் புரிய பகிரப்படுகிறது.
சிவயோகத்தினை சாதிக்க விரும்பும் சாதகன் தனது மனதை புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும் சம நிலையாக வைத்திருக்கும் ஆற்றலும், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் மனம் சம நிலை இழக்காத தன்மையும், அதிக மகிழ்ச்சியோ, பயமோ, அவ நம்பிக்கையான மன நிலையைத் தோற்றுவிக்கும் சந்தர்ப்ப சூழலிற்குள் செல்லாமல் சாதகன் தொடர்ச்சியாக தனது சாதனையைத் தொடர வேண்டும்.
சாதகன் தனிமையான வீடு, புனிதம் நிறைந்த தேவாலயம், மக்கள் அதிகம் நடமாடாத நதிக்கரை, எவரும்நெருங்கமுடியாத மரங்கள் நிறைந்த காடுகள், நிசப்தமான இடம், விலங்குகள், பூச்சிகள், மனிதர்களால் தொல்லை ஏற்படாத அமைதியான இடம், அல்லது தனது சொந்த வீடு ஆகிய இடங்களில் சாதனையைத் தொடங்கலாம்!
சாதகன் தனக்குச் சொந்தமில்லாத வேறு ஒரு தனி நபரின் இடத்தில் சாதனை செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் சூரியன், வெப்பம், ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடாத இடமாகவும் இருக்க வேண்டும்.
சாதகன் தனது ஸ்னானத்தின் மூலம் உடலைச் சுத்தி செய்துகொண்டு மனச்சுத்தியுடன் விபூதி தரித்துக்கொண்டு சிவபெருமான் முன்னும் தனக்கு யோக தீக்ஷை தந்த குருவிற்கும் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றுக்கொண்டு தனது சாதனையை தினசரி தொடங்க வேண்டும்.
யோக சாதனையில் அமர்வதற்கு அனேக ஆசனங்கள் உள்ளன; இவற்றுள் சாதகன் தனக்கு வசதியான பத்மாசனம், சுவஸ்திகாசனம், அர்த்த பீட, அர்த்த சந்திர, சர்வதோபத்ர ஆசனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உடலை நிமிர்த்தி, தலை முதுகெலும்பு நேராக வைத்து, மனதில் எந்த எதிர்மறை எண்ணங்களும் இன்றி சாதனையில் அமர வேண்டும்!
குகனே (இந்த ஆகமம் முருகனிற்கு உபதேசிக்கப்பட்டது) சாதகன் தனக்குள்ளே மனதைச் செலுத்தி சாதனையை ஆரம்பிக்க வேண்டும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...