குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 17, 2021

அருணகிரி நாதரின் சிவயோக ஞானம்


************************************
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ”ஞானசத்திநிபாதா”
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
பக்தியால் நான் உன்னைப் பலகாலம் இந்த திருப்புகழால் துதித்து, சீவன் முத்தனாக பெருவாழ்வு வாழ்ந்து முக்தி அடைவதற்கு அருள்வாயே!
உத்தமமான குணங்களைக் கொண்ட சற்குண நேயா, இதில் சற்குணம் என்பது ஷட்குணம்; அன்பு, பரிவு, பாசம், கருணை என்ற ஆறுவகை நற்குணங்கள். ரத்னகிரியில் உறைந்த முருகனை அறுகுணத்தை நல்கும் சொரூபமாக அருணகிரிணாதர் பாடுகிறார்.
அடுத்த வரியில் வரும் வித்தகா ஞான சக்தி நிபாதா என்ற வரிகள் முக்கியமானவை! இன்று பலரும் தமக்கு யோக ஞான சித்தி தமது முயற்சியால் வருகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஜடயோகம் செய்பவர்கள் உடலை வளைக்கத்தெரிந்தாலே தாம் யோகிகள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஒருவன் யோகத்தில்,ஞானத்தில் சித்தியடைவது அவனில் சக்தி நிபாதம் நடைபெறுவதால். சக்தி நிபாதம் என்றால் சக்தி நன்றாகப் பதிதல் என்று அர்த்தம்! ஒரு சாதகன் தனது முயற்சியால், பயிற்சியால் உடல், மனம் ஆகிய கருவிகளைச் தினமும் சுத்தி செய்துகொள்ள இந்த சுத்தித்த உடல், மனக்கருவிகளில் பரம்பொருளின் சக்தி இறங்கிப் பதிதல் சக்தி நிபாதம் எனப்படும்.
இந்த சக்தி நிபாதம் ஒரு சாதகன் எவ்வளவு சுத்தியாக தனது அந்தகரணங்களை வைத்திருக்கிறானோ அதற்கு ஏற்ற அளவிலேயே நிகழும்.
இதற்கு தேவி காலோத்தர ஆகம உரையில் விளக்கம் தரப்படுகிறது. ஒருவன் சரியையில் நின்று பெறும் சுத்தியால் கால் பங்கும், கிரியையில் நின்று பெறும் சுத்தியால் அரைப்பங்கும், யோகத்தில் நின்று பெறும் சுத்தியால் முக்கால்பங்கும், ஞானத்தால் முழுமை சக்தி நிபாதமும் நிகழும்!
இங்கு முருகனை ஞான சக்தி நிபாதா என்று முருகன் அருளக்கூடிய நிலையைப் பற்றி விளக்குகிறார். முருகன் ஞானம் எனும் முழுமை சக்தி நிபாதத்தினைத் தரக்கூடிய வல்லமை உடையவர் என்பது இதன் பொருள்! இது பெண்பித்தராக அலைந்த அருணகிரி நாதர் எப்படி யோகியாக, ஞானியாக கணத்தில் மாறினார் என்பதற்கான விளக்கம் முருகனின் ஞான சக்தி நிபாதம் என்பதை விளக்கியுள்ளார்.
முருகனின் அருள் யோகத்திலும், ஞானத்திலும் பரிபூரண சக்தி நிபாதத்தினை அருளும்!
ௐ சரஹணபவ ௐ

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...