குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 17, 2021

பஞ்சாக்கரத் திருப்பதிகமும் திருவைந்தெழுத்து மந்திர சாதனையும்!


**************************************************************
திருவைந்தெழுத்து என்பது அனைவருக்கும் வெளிப்படை; இது ஒவ்வொரு சாதகரின் பரிபக்குவத்திற்கு ஏற்ப ஸ்தூல, சூக்ஷ்ம, அதிசூக்ஷ்ம என்று சாதகம் செய்ய வேண்டிவரும்! இது அவரவர் குரு உபதேச நெறி நிற்றல் நலம்!
இங்கு திரு ஞானசம்பந்தப்பெருமான் தனது பஞ்சாக்கரத் திருப்பதிகத்தில் திருவைந்தெழுத்தின் மகிமைபற்றிக் கூறியதை அனுபவித்தவற்றைப் பகிர்வது நோக்கம்!
ஒவ்வொரு பாடலும் பஞ்சாட்சர ஜெபத்தின் சித்தி தரும் பலனைக் கூறுகிறது.
முதல் பாடல்:
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே
இந்தப்பாடலில் திரு ஞானசம்பந்தர் தான் விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும் நெஞ்செல்லாம் திருவைந்தெழுத்தை நிரப்பி சாதனை செய்து வருகின்றேன், இந்தத் திருவைந்தெழுத்தின் மகிமை என்னவென்றால் அற்ப ஆயுள் கொண்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவிடாமல் கூற்றுவனை உதைத்த பரமாகிய சிவத்தின் ஆற்றலை எனக்குள் தருவது! ஆகவே இந்த திருவைந்தெழுத்தை செபிக்கும் எனக்கும் அந்த அருட்சக்தி கிடைக்கிறது என்கிறார்!
ஆகவே பஞ்சாட்சர ஜெப சித்தி ஆயுள் வளர்ச்சி, அற்பாயுள் நீங்குதல், சிவனருள் பெறுதல் என்பதைக் கூறுகிறார்.
இரண்டாவது பாடல்
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
எல்லாவிதமான மந்திரங்களாக விரிந்ததும் பஞ்சாட்சரம் தான்! நான் கு வேதங்களாக ரிஷிகள் திருஷ்டித்ததும் பஞ்சாட்சரத்தின் விரிவுதான்! எமக்கு கண்களுக்குத் தெரியாமல் பாதிக்கும் நுண்ணிய அபௌதீக சக்திகளை தேவர்கள் என் கிறோம், இவர்கள் இயங்குவதற்குரிய அறிவும் அவர்களுக்குள் பஞ்சாட்சர மந்திரத்தின் ஆற்றல் இருப்பதால்தால்! அக்னியை தினசரி போற்றி அந்தியில் செய்யும் சந்தியாவந்தனத்திற்குள் இருக்கும் மந்திரமும் பஞ்சாட்சரம்தான்
இந்தப்பாடல் முழு அறிவும் பஞ்சாட்சரத்தின் விரிவு என்பதைக் கூறி நிற்கிறது. இதில் இறுதி வரியில் பாவிக்கப்பட்டிருக்கும் அந்தியுள் என்ற சொல் மிக அருமையான சொற்பிரயோகம்! சந்தியாவந்தனத்திற்குள் ஒவ்வொரு வேதியனும் தேடும் அந்த புத்தியைத் தூண்டும் பேரோளி இந்த சிவம்தான் என்பதை நுண்மையாகக் கூறியிருக்கிறார்.
ஆகவே திருவைந்தெழுத்து மந்திர சாதனை எல்லா மந்திரங்களுக்கும் மூலமானது, வேதங்களின் தோற்றுவாய் சப்தமாகவும், அனைத்திற்குள்ளும் அறிவைத் தூண்டுவது, செந்தழல் யாகம் வளர்த்து சந்தியாவந்தனம் செய்வது இந்த சிவத்தினை அடைவதற்கு என்ற பொருளை இந்தப்பாடல் சுட்டி நிற்கிறது!
ஒரு சாதகன் திருவைந்தெழுத்தை முறையான உபதேசத்துடன் சாதகம் செய்துவருவானேயானால் அவனிற்கு எல்லா மந்திரங்களின் சித்திகளும், வேதங்களின் அறிவும், நுண்ணிய தேவர்களின் அருளும் கிட்டும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...