குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 02, 2021

தலைப்பு இல்லை

 

இன்று சித்த மருத்துவ தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!

சித்த மருத்துவத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று எண்ணும் அன்பர்களுக்கு எனது கருத்தை பதிவிட எண்ணுகிறேன்.

மூல நூற்கள் தொடர்பானது;

1) சித்த மருத்துவத்தை ஆய்விற்கு உட்படுத்தும் அளவிற்கு சித்த மருத்துவர்களுக்கு தமிழ்மொழிப் புலமை இருக்கிறதா?

2) பாடல்கள் புரிய தமிழ்மொழி அறிவிருந்தாலும் அவற்றில் மறைப்பாகக் கூறிய பரிபாஷை புரியும் ஆற்றல் இருக்கிறதா?

3) ஒவ்வொரு பட்டதாரி சித்த மருத்துவரும் மூல நூற்களை முயற்சியுடன் கற்றுக்கொண்டிருக்கிறார்களா? உத்தமராயன் எழுதிய சித்த மருத்துவாங்கச் சுருக்கத்திற்கு மேலே என்ன புரிதலை கடந்த நாற்பது ஆண்டுகளில் புதிதாக உருவாக்கியிருக்கிறோம்?

பாவனையில் இருக்கும் மருந்துகள் பற்றி,

1) கைமுறையாக பல நூறு ஆண்டுகள் பாவித்த முறைகளை அவற்றை பாவிக்கக் கூறிய நிபந்தனைகள் (பத்தியம், அனுபானம், துணை மருந்து) இவை எல்லா நிபந்தனைகளையும் கடைப்பிடித்து மருந்துகளை ஆய்வுக்குட்படுத்துகிறோமா?

2) சித்த மருத்துவத்தை சித்த மருத்துவ தத்துவ அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்த சித்த மருத்துவத்தின் மூல தத்துவத்தை அறிவியல் ரீதியில் புரிந்திருக்கிறோமா?

3) திரிபலாவை western medicine பாவிப்பதைப் போல் வெறுமனே இரண்டு மாத்திரை தினசரி காலை மாலை என்று பாவிக்கச் சொல்லிவிட்டு அது ஈரலைப் பாதிக்கிறது, வயிற்றைக் குழப்புகிறது என்று ஆய்வு முடிவு எழுதுகிறோமா? அல்லது மருந்து உண்ணும் விதியை முழுமையாக கடைப்பிடிக்கச் சொல்லி அதன் விளைவை அறிவியல் ரீதியாக ஆராய்கிறோமா?

இவை அடிப்படையாக சித்த மருத்துவத்தை முன்னேற்ற வேண்டும் என்று எண்ணும் பட்டதாரி சித்த மருத்துவர்கள் சிந்திக்க வேண்டிய கேள்விகள்!

கேள்விகள் சிந்தனைக்காக, சிந்தனை ஆய்வுகளைத் தூண்டும்! ஆய்வுகள் புது அறிவைத் தரும்! புது அறிவு புரிதலை மேம்படுத்தும்! புரிதல் மேம்பட்டால் அது மனிதனுக்குப் பயனாகும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...