குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 02, 2020

தலைப்பு இல்லை

யோகத்தால் தெய்வ உருமாற்றம் பற்றி ஸ்ரீ அரவிந்தர்
ஆன்ம முன்னேற்றம் என்பது ஆரம்ப காலத்திலும் நீண்டகால சாதனையின் பின்னரும் ஒருவருக்கு துரிதமாகவும், அதிகமாகவும், அதிசக்தி வாய்ந்ததாகவும் ஏற்படுவதற்கான நிபந்தனைகள் அவனுடைய தீராத ஆர்வமும், சாதகனுடைய விடாமுயற்சியுமேயாகும். 
யோகத்தின் செயல்முறை என்பது மனித ஆன்மா தனது வெளி உலகிலிருந்து பெற்ற உணர்வினால் உருவான அகங்கார உணர்விலிருந்து திரும்பி அகமுகமாக உயர் உணர்வினை ஈர்த்து தன்னில் பிரபஞ்ச மஹா சக்தியினை பாயுமாறு மாற்றி, தெய்வ உணர்வுள்ள ஆன்மாவாக உருமாற்றும் செயல் முறையாகும். 
யோகத்தில் ஒருவன் சித்தி அடைந்துள்ளான் என்பதை அறிவதற்குரிய முதற்படி அவன் எவ்வளவு அகவயமாக திரும்புகிறான் என்பதும், எந்த ஆற்றல் அவனை அகவயமாக திருப்புகிறது என்பதுமாகும். இது சாதகனின் இருதயகமலத்தின் சாதனை மீதான ஆர்வம், இச்சாசக்தியின் ஆற்றல், மனஒருமைப்பாட்டு சக்தி, பிராணசக்தியை தனது உடலில் காத்தலும், இலட்சியத்துடன் இருத்தலும் ஆகிய காரணிகளாக இருக்கலாம். இவற்றின் மூலம் உருவாகும் ஆற்றல் ஒருவனை அகவயமாக செல்ல தூண்டும். 
இப்படி ஒரு சாதகன் தன்னில் தெய்வ சக்தியின் தொடர்பினை ஏற்படுத்தும் போது அவதானத்துடன் தன்னில் தனது ஆற்றலை மீறிய ஒரு சக்தி செயற்படுகிறது என்பதை அறிந்திருப்பதுடன், அந்த சக்தி தன் மீது ஆதிக்கம் செலுத்தி தனது ஆணவ உணர்வை கரைத்து தெய்வ உருமாற்றம் செய்வதுடன் தனது ஆற்றலின் கொள்ளளவை அதிகரிக்கிறது என்பதையும் உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்க வேண்டும். இந்த உயர் ஆற்றலை தன்னில் தெய்வ உருமாற்ற வேலை செய்வதற்கு அனுமதிப்பதுடன், தன்னை அதற்கு சமர்ப்பித்து முன்னேற்றி தனது யோகத்தின் இலக்கினை அடைய வேண்டும். 
ஒருவன் (சரணாகதியினூடாக) தனது இச்சாசக்தியின் முடிவில் இந்த உயர் சக்தியுடன் இணைந்து ஒன்றாவான். அவன் தெய்வ இச்சாசக்தியுடன் கலந்து தெய்வ உருமாற்றம் பெற்று பிரபஞ்ச சக்தியாக உருப்பெறுவான். 
The Synthesis of Yoga

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...