இன்று உலக மண் தினம் - டிசம்பர் 05
மேற்கத்தேய கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் ஒதுக்கி அதை அன்று மட்டும் நினைவு கூர்ந்து விட்டு வியாபாரத்திற்காக மற்றைய நாட்களில் இயற்கையைச் சுரண்டிக் கொண்டிருப்பது.
மண்ணிற்கு புராணங்களில் கூறப்படும் பெயர் "அன்னப்பூரணி" அன்னம் என்றால் உணவு, பூரணி என்றால் பூரணத்துவத்தைத் தருபவள் என்று பொருள். மண் உணவிற்கான அனைத்தையும் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம்.
இயற்கையின் விதிகளைப் படிக்காமல் வெறும் பணத்திற்கும், பட்டத்திற்கும் என்று படிக்கும் மனிதன் இந்த பூமிக்கு ஒன்றும் செய்து விடமுடியாது.
ஆரோக்கியமான உக்கல், மரஞ் செடி, கொடி நிறைந்த மண் அவை இல்லாத மண்ணை விட 20000 மடங்கு நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. இன்று மண்ணில் உயிர்கள் வாழ முடியாதபடி இரசாயனங்களைக் கொட்டுகிறோம். நீர் உட்புகுந்து நிலத்தடியில் சேமிக்க முடியாதபடி கொங்கிரீட்டினால் மூடுகிறோம். பிறகு வெள்ளம், வெள்ளம் என்று புலம்புகிறோம்.
காடுகள், மரங்கள் இருக்கும் இடத்தில் அவற்றின் மண்ணின் துளையைக் கூட்டி நீர் கீழிறங்கிச் செல்லும் பாதைகளை உருவாக்கி வைத்திருக்கும். மரங்களையும், காடுகளையும் அழித்து விட்டால் மண் நீரினால் அழித்துச் செல்லப்பட்டு, மண் இறுகி வெள்ளப் பெருக்குத்தான் ஏற்படும்.
மண்வளம் காத்தால்,
அது உணவைத் தரும்
நீரை சேமிக்கும்
நிலத்தடி நீர்வளத்தை உருவாக்கும்
குடி நீர்பிரச்சனை வராது
ஆகவே மண்வளம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திட்டத்திலும் சிந்திக்கப்படவேண்டியது! டிசம்பர் - 05 ம் திகதி மாத்திரம் சிந்திக்கப்படும் ஒரு விஷயமாக இருக்கக் கூடாது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.