குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 05, 2020

தலைப்பு இல்லை

இன்று உலக மண் தினம் - டிசம்பர் 05

மேற்கத்தேய கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் ஒதுக்கி அதை அன்று மட்டும் நினைவு கூர்ந்து விட்டு வியாபாரத்திற்காக மற்றைய நாட்களில் இயற்கையைச் சுரண்டிக் கொண்டிருப்பது. 

மண்ணிற்கு புராணங்களில் கூறப்படும் பெயர் "அன்னப்பூரணி" அன்னம் என்றால் உணவு, பூரணி என்றால் பூரணத்துவத்தைத் தருபவள் என்று பொருள். மண் உணவிற்கான அனைத்தையும் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம். 

இயற்கையின் விதிகளைப் படிக்காமல் வெறும் பணத்திற்கும், பட்டத்திற்கும் என்று படிக்கும் மனிதன் இந்த பூமிக்கு ஒன்றும் செய்து விடமுடியாது. 

ஆரோக்கியமான உக்கல், மரஞ் செடி, கொடி நிறைந்த மண் அவை இல்லாத மண்ணை விட 20000 மடங்கு நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. இன்று மண்ணில் உயிர்கள் வாழ முடியாதபடி இரசாயனங்களைக் கொட்டுகிறோம். நீர் உட்புகுந்து நிலத்தடியில் சேமிக்க முடியாதபடி கொங்கிரீட்டினால் மூடுகிறோம். பிறகு வெள்ளம், வெள்ளம் என்று புலம்புகிறோம். 

காடுகள், மரங்கள் இருக்கும் இடத்தில் அவற்றின் மண்ணின் துளையைக் கூட்டி நீர் கீழிறங்கிச் செல்லும் பாதைகளை உருவாக்கி வைத்திருக்கும். மரங்களையும், காடுகளையும் அழித்து விட்டால் மண் நீரினால் அழித்துச் செல்லப்பட்டு, மண் இறுகி வெள்ளப் பெருக்குத்தான் ஏற்படும். 

மண்வளம் காத்தால், 

அது உணவைத் தரும்

நீரை சேமிக்கும்

நிலத்தடி நீர்வளத்தை உருவாக்கும்

குடி நீர்பிரச்சனை வராது

ஆகவே மண்வளம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திட்டத்திலும் சிந்திக்கப்படவேண்டியது! டிசம்பர் - 05 ம் திகதி மாத்திரம் சிந்திக்கப்படும் ஒரு விஷயமாக இருக்கக் கூடாது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...