குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 10, 2020

தலைப்பு இல்லை

நாம் ஒவ்வொருவரும் மஞ்சள் வீட்டிலும் வளர்க்க வேண்டும்! இறக்குமதியை நிறுத்தியதால் நகரமெங்கும் பச்சை மஞ்சள் தாராளமாக கிடைக்கிறது. இதை வாங்கி வீட்டில் நடலாம். 

வீட்டில் வளர்க்க வேண்டும் என்று சொல்வதற்குரிய காரணம் கீழே படத்திலும், பதிவிலும் கூறப்பட்டுள்ளது.

மஞ்சள் என்ற சொல்லைக் கேட்கும் போது பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் நாலடியாரின் கல்வி அதிகாரப் பாடல் எப்போதும் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. 

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

நாலடியார் காலத்தில் மஞ்சள் அழகிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஆயுர்வேதமும், நவீன மருத்தவ ஆயுள்வேதமும் மஞ்சளை ஒரு அரிய பொருளாக கருதுகிறது. 

சித்த ஆயுர்வேதத்தில் மஞ்சளைப் பற்றி அதிகமாகச் சொல்லப்படாத இரகசியம் இது ஒரு திரிதோஷ சமனி என்பது! 

உடலில் எந்த நோயும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் சமநிலை கெடுவதால் உண்டாவது என்பதுதான் சித்த ஆயுர்வேத தத்துவம்! இதை சமப்படுத்தி விட்டால் உடலில் இருந்து நோய் மறையும் என்ற எளிய தத்துவம் தான் எமது மருத்துவ அறிவு! 

இப்படி திரிதோஷ சமநிலைக்கு அதிகமாகப் பாவிக்கப்படுவது திரிபலா என்ற கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்ந்த கலவை! ஆனால் மஞ்சள் இயல்பிலேயே தனியொரு மூலிகையாக திரிதோஷம் சமனிக்கும்! 

இப்படி திரிதோஷம் சமனிக்கும் மூலிகைகள் கற்ப மூலிகைகளுமாகும்! உடலை உறுதிபடுத்தும் மூலிகை. 

இப்படிப்பட்ட மூலிகைகளை நாமே வளர்த்து நாமே பயன்படுத்தும் போது இது ஆரோக்கியத்தை தரும்! 

கலப்படமற்ற சுத்தமான மஞ்சள் பொடி கீழ்வரும் முறைகளில் தினசரி எடுத்து வந்தால் எமது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!

கலப்படமற்ற சுத்தமான மஞ்சளைப் பெற நீங்களே மஞ்சளை வளர்த்து பதப்படுத்த வேண்டும். 

இரண்டு pinch - பெருவிரல் ஆட்காட்டி விரல் சேர்த்து அள்ளும் மஞ்சளின் அளவு அண்ணளவாக 01- 02 கிராம் 

உஷ்ண காலத்தில் பாலில் கலந்து பருகலாம்.

குளிர், மழைக்காலத்தில் அதே அளவு மிளகுப் பொடி தேனுடன் கலந்து பருகலாம்! 

எந்த உணவுப் பதார்த்தத்துடனும் குழம்பு, சாம்பார், கூட்டிலும் இந்த அளவு தினசரி சேர்த்துக் கொள்ளலாம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...