குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 31, 2020

கல்யாண மித்ரன் - போற்றத்தக்க நண்பன் - ஆத்ம நண்பன்

எத்தனை பேருக்கு இப்படியான நட்பாக இருக்க ஆர்வம் இருக்கிறது? 

எத்தனை பேருக்கு இப்படியான நட்புக் கிடைத்திருக்கிறது? 

உரையாடுவோம்! 

புத்தபெருமான் ஒரு தியான சாதகனுக்கு, பிக்குவிற்கு, வாழ்க்கையில் முன்னேற வேண்டியவனுக்கு இருக்க வேண்டிய நட்பினை கல்யாண மித்திரன் என்கிறார். இதன் அர்த்தம் போற்றத்தக்க நண்பன் என்று மொழிப் பெயர்க்கப்பட்டாலும் தமிழில் ஆத்ம நண்பன் என்பது சரியான சொல்லாக இருக்கும். இத்தகைய போற்றத்தக்க/ஆத்ம நண்பன் வாய்த்தால் அவனுடைய ஆன்ம முன்னேற்றம் சிறக்கும் என்கிறார். 

திருவள்ளுவர் நட்பினைப் பற்றி மொத்தம் 17 அதிகாரத்தில் 170 குறள்களில் விரிவாக விரித்துரைத்திருக்கிறார். 

புத்தர் குறிப்பிடும் போற்றத்தக்க நண்பன் ஒருவனின் மனதை தூயவழியில் செலுத்தக் கூடிய ஆற்றல் உள்ள நண்பன் பற்றி கீழ்வருமாறு கூறுகிறார்:

எவன் ஒருவன் முழுமையாக ஸ்திர புத்தியை பின்பற்றுகிறானோ, எவன் ஒருவன் சீலத்தில் நிலைபெற்று சீலத்தில் முழுமையாக நிலைக்கிறானோ, எவன் ஒருவன் விவேகத்தில் நிலை பெற்று விவேகத்தில் நிலைக்கிறானோ, எவன் ஒருவன் நம்பிக்கையில் நிலை பெற்று நம்பிக்கையில் நிலைக்கிறானோ, கருணையில் நிலைபெற்று கருணையில் நிலைக்கிறானோ, அத்தகைய ஒருவனின் நட்பினைப் பெற்று ஒருவன் அவன் மூலம் இந்தப் பண்புகளை வளர்த்தெடுப்பதே கல்யாண மித்ரம் - போற்றத்தக்க நட்பு என்கிறார்!

இத்தகைய நட்பிற்கு ஏழு பண்புகளை பௌத்த தியான மூல நூலான விசுத்தி மார்க்கம் அட்டவணைப்படுத்துகிறது:

1) அன்புடமை - நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்பார் வள்ளுவர். நண்பனிடம் உண்மையான அன்பிருக்க வேண்டும்! இந்த அன்பு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவன்/அவள் நல்ல நிலை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரம் இருக்க வேண்டும். 

2) மதிப்புடன் இருத்தல் - ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புடன் அணுகுதல். 

3) வணங்குவதற்குரிய தெய்வீகப் பண்புகளைக் கொண்டிருத்தல். 

4) எந்தத்துன்பத்திலும் தகுந்த சரியான ஆலோசனையைப் பெறக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்.

5) ஒருவரின் பிரச்சனையை நன்கு செவிமடுக்கக்கூடிய பொறுமை உடையவனாக இருத்தல்.

6) எந்தச் சந்தேகம் வந்தாலும் அதை முழுமையாக விளக்கி மனதை உறுதி நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் உடையவர். 

7) தேவையற்ற, பயனற்ற விடயங்களை உரையாடி மனதினைக் குழப்பாதவராக இருக்க வேண்டும். 

இந்த ஏழு பண்புகள் உடைய ஒருவரை நட்பாகப் பெற்றால் அத்தகையவன் தனது மனதினை அறிந்து, உண்மையைப் புரிந்து துன்பங்களிலிருந்து விரைவில் வெளிவருவான். 

நாம் ஒவ்வொருவரும் மற்றவர் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆத்ம நண்பர்களாக கல்யாண மித்ரர்களாக மாற 2021 ஆண்டில் சங்கல்பித்துக் கொள்வோம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...