குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 30, 2020

தலைப்பு இல்லை

இலக்கினை நிர்ணயிப்பவன் அடைகிறான். இலக்கு எதுவென்று தெரியாதவன் தடுமாறுகிறான்! படிக்கும் பிள்ளைகளுக்கு தாம் அடைய வேண்டிய இலக்கு என்னவென்பதை மனதிற்குத் தெரியப்படுத்தாமல் படிப்பில் கவனம் செல்லாது! 

சாதாரண தரம் படிக்கும் பிள்ளைக்கு அதற்குப் பிறகு உள்ள அடைவுகளைப் பற்றி தெளிவிக்கும் போது கல்வியில் இன்னும் ஆர்வம் பிறக்கும்! 

இந்த அடிப்படையில் இன்று பாக்கியம் தேசிய கல்லூரி சாதாரண தர மாணவச்செல்வங்களுக்கு கல்வியின் அடுத்த நிலை என்ன என்பது பற்றிய எனது சிறிய உரை ஒன்று மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் "Digital education project" இன் ஒரு பாகமாக இன்று நடைபெற்றது. 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஆலோசகர் என்ற அடிப்படையில் FTGM என்ன இலக்கிற்காக பணிபுரிகிறது? FTGM என்ன வலிமையை மாத்தளை வாழ் தமிழ் மாணவர்களின் கல்வியில் செய்ய முடியும் என்பது பற்றிய விளக்கத்தையும் கூறினேன்! 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியல் பீட சிரேஷ்ட விரிவுரியாளர் Dr. Nava Navaratnarajah zoom வழியாக கலந்துக் கொண்டு அருமையான ஒரு உத்வேக உரையை ஆற்றியிருந்தார்!

ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி நிசாந்தன் திட்டத்தை எப்படி மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற படிமுறைகளை விளக்கினார்! பொருளாளர் லக்ஷ்மிகாந் தொகுத்து வழங்கினார்!

ஆசிரியர்களுக்கும், அதிபரிற்கும் வலுச்சேர்க்கும், அவர்களது பிரச்சனைகளைப் புரிந்து மாணவர்கள் கல்வி மேம்பட உதவிசெய்யும், உத்வேகப்படுத்தும் ஒரு அமைப்பாக மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தனது இலக்கைக் கொண்டுள்ளது. சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தில் ஆழமான அக்கறை கொண்டுள்ளது!

நிசாந்தனும் குழுவினரும் உண்மையான செயலிலும், விளைவிலும் (action & impact) கவனம் செலுத்துகிறார்கள்! வழமையாக பாடசாலைக்கு உதவுகிறோம் என்றால் கணனி வாங்கிக்கொடுத்தோம், விளையாட்டு உபகரணம் வாங்கிக் கொடுத்தோம், படம் எடுத்தோம் என்ற மேலோட்டமான உதவி இல்லாமல் கொடுக்கப்படும் இலத்திரனியல் பாடங்களை எப்படிப் பயன்படுத்துவது? பெற்றோருக்குரிய அறிவுறுத்தல்கள்? அவர்களுக்குரிய தெளிவுபடுத்தல் என்ற வகையில் திட்டத்தை வடிவமைத்திருப்பது மிகச்சிறப்பு!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...