குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 07, 2020

திருமூலர் கூறிய வைரவ தியானம் - 01

இன்று கால பைரவ - வைரவ அஷ்டமி

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வீட்டிற்கொரு வைரவர் வைத்து வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு! 

வேள்வி எனும் ஆட்டுப் பலி வைரவருக்கு படையலிடும் கலாச்சாரமும் தொன்று தொட்டு இருந்து வருகிறது! 

வைரவர் அகச் சத்துருக்களையும், புறச் சத்துருக்களையும் அழிக்கும் சிவமாகிய அறிவின் -விழிப்புணர்வின் அமிசம்! 

வைரவரை தியானிக்கும் முறையை திருமூலர் 1291 - 1295ம் பாடல் வரை கூறுகிறார். 

அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு

அறிந்த அச் சத்தமி மேலிவை குற்ற

அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக

அறிந்து, வலம்அது வாக நடவே.

இந்தப் பாடல் வைரவரை ஆன்ம, வித்யா, சிவ தத்துவங்களான முப்பத்தாறு தத்துவங்களில் எப்படி யந்திரமாக்கி - வைரவச் சக்கரமாக்கி தியானிக்கும் முறையைக் கூறுகிறது. இது குருமுகமாகப் பயில வேண்டிய சாதனை என்பதால் விளக்கம் தரப்படவில்லை! அவரவர் குருவை அண்டித் தெளிவு பெறுக.!

நடந்த வயிரவன் சூல கபாலி

கடந்த பகைவனைக் கண்ணது போக்கி

தொடர்ந்த வுயிரது உண்ணும் பொழுது

படர்ந்த வுடல்கொடு பந்தாடலாமே.

மேற் குறித்த முறையில் வைரவச் சக்கரம் அமைத்து எமக்குள்ளேயுள்ள தத்துவங்களில் வைரவரை நிறுத்தி தியானிக்கும் போது அந்த வைரவர் சூல கபாலியாக தோற்றம் பெறுவார். 

திரிசூலம் எமக்குள் இருக்கும் மும்மைகளை (இடகலை, பிங்கலை, சுழுமுனை, சூரியகலை, அக்னி கலை, சந்திரகலை, தாமசம், ராஜசம், சத்துவம்) ஒடுக்கி உயிரை சிவத்தை நோக்கிச் செலுத்தும் ஆயுதம், சிவத்தை அடையவிடாமல் எம்மைத் தடைப்படுத்துவது அகங்காரம் என்ற ஆணவம் - இது கபாலத்தில் இருக்கும் வரை சிவயோகம் சித்தியுறாது! ஆகவே வைரவரின் சூலத்தின் துணையுடன் கபாலத்தில் உள்ள ஆணவத்தை பிளக்க வேண்டும். அகப்பகைவர்களில் முதன்மையானது ஆணவம் - இது கபாலத்தால் குறிக்கப்படுகிறது. இது வைரவரால் கொய்யப்படும். 

இப்படி ஆணவம் கொய்யப்பட்டால் இந்த ஆணவமலம் ஏற்படுவதற்கு மூல காரணம் தவறான பார்வை! மயக்கமான பார்வை! அடுத்து வைரவர் அகப் பகைவர்கள் உருவாக முதன்மையாக இருக்கும் தவறான பார்வையை நீக்குவார்! 

இப்படி வைரவரை தியானிக்க அவர் ஆணவத்தை நீக்கி, சிவத்தை அடையவெண்ணாமல் செய்யும் மனதின் தவறான பார்வையை நீக்கி, அகப் பகைவர்களை எல்லாம் அழித்து உயிரை சிவமாகிய ஒளியை உண்ணச் செய்விப்பார். 

கடைசி வரியை பலரும் எதிரியின் உடலைப் பந்தாடுவார் என்று பொருள் கொள்வார்கள். திருமந்திரம் சிவயோக நூல் என்ற பிரமாணத்தில் கீழ்வருமாறு சொற்பிரித்தால்,

படர்ந்த - சிவ ஒளி படர்ந்த

உடல் - உடலை

கொடு - கலப்பை (பிங்கல நிகண்டு)

பந்தாடலாமே - உழமுடியும்

இந்தக் கடைசி வரி வைரவர் சிவயோக சாதனையில் என்ன சித்தியினைத் தருவார் என்பதை விளக்குகிறது. சிவ ஒளி படர்ந்த இந்த உடலை சிவயோக சாதனை எனும் கலப்பையால் (கொடு) உழ வைரவர் அருள் வேண்டும். 

ஆக ஒருவன் தனது ஆணவ மலத்தை அழித்து, சிவயோகத்தில் சித்தி பெற வைரவர் அருள் பெற வேண்டும் என்பது இந்தப் பாடலால் கூறப்பட்டது. 

அடுத்த பாடலில் ஷட்புஜ பைரவர் எனும் அறுகர வைரவரின் உருவ விளக்கம் வருகிறது. 

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்

ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு

ஆமே தமருக பாசமும் கையது

ஆமே சிரத்தொடு வாளது கையே.

கபாலம், சூலம், உடுக்கை, பாசம், கொய்யப்பட்ட தலை, வாள் ஆகிய ஆறு ஆயுதங்களை ஏந்தியபடி இருக்கும் வைரவரை தியானிக்கும் படி கூறப்படுகிறது!

மிகுதி நாளை!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...