குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 24, 2020

தலைப்பு இல்லை

அண்மைக் காலமாக யாழ்ப்பாணம் வெள்ளம் என்று ஒரு பகுதியில் உரையாடிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ரம்மியமான இயற்கைச் சூழல் என்ற விதத்தில் பலரும் கீழ்வரும் சரசாலை வாய்க்காலின் படத்தைப் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்! இன்னும் ஒரு படி மேலே சென்று சுற்றுலாத் துறைக்கு உகந்த இடம் என்றும் இப்போது பிரபலப்படுத்தத் தொடங்கிருக்கிறார்கள்! 

இனி இந்தச் சூழல் மாசடைதலை நோக்கிச் செல்லும்! வார இறுதியில் வாடா மச்சான் சரசாலை வாய்க்காலில் பார்ட்டி போடுவோம், புரியாணி சமைப்போம் என்று ஒரு கூட்டம் கிளம்பும்! 

வீட்டுக்குள்ள இருக்கிறது ஒரே stress என்று கொழும்பில் இருப்பவர் வார இறுதிக்கு இந்த வாய்க்கால் கரையோரம் குடும்பத்துடன் இன்பமாக இருக்க வெளிக்கிட்டு வருவார்! 

இப்படி வருபவர்கள் மென்பானமும் வன்பானமும் குடித்துவிட்டு வாய்க்காலில் எறுவார்கள்! புரியாணி பக்கட் வீசப்படும்! 

வாய்க்கால் அடைபடும்!

அடுத்த வருடம் சரசாலையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு என்று முகநூல் போராளிகள் புலம்புவார்கள்! 

வெள்ளம் வடிந்தவுடன் சரசாலை பிரதேசபை (??) பிளாட்ஸ்டிக் போத்தல்களை அள்ளும்! நாம் எல்லோரும் வெள்ளத்திற்கு முதல் பிரதேச சபை என்ன செய்துக் கொண்டிருந்தது? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்போம்! 

நண்பர்களே, இயற்கை உங்களை மகிழ்விக்க, மனக் களிப்பிற்குரிய இடம் என்றால் அதைப் பக்குவமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் உங்களுடையது! எங்கோ இயல்பாக இருக்கும் இயற்கையில் சென்று குப்பை கொட்டி அதை அழுக்காக்கி நிம்மதி பெறுவதை விட உங்களிடம் ஒரு சிறுதுண்டு காணி இருந்தால் அதில் ஒரு உணவுக்காட்டினை உருவாக்குங்கள்! நீரோட்டம், சிறுகுட்டை உருவாக்கி நீர் சேமியுங்கள்! மீன் வளருங்கள்! பறவைகள் உங்களைத் தேடிவரும்! நீங்கள் உங்கள் ஆற்றலுக்குள் இயற்கையை உருவாக்கி அதைப் பேணி இன்புறுங்கள்! 

எங்கோ இயற்கை அன்னை இயல்பாக உருவாக்கி இருக்கும் இடத்திற்குச் சென்று சுற்றுலா என்ற பெயரில் அதை அசுத்தப்படுத்தி இன்பம் காணாதீர்கள்! 

இயற்கை போகப் பொருள் அல்ல!! எம் மனம் போன போக்கில் அனுபவிப்பதற்கு! இயற்கை எம்மை வலிமைப்படுத்தும் எமது ஆதார சக்தி, எமது அறியாமையால் அதை அழித்தோம் என்றால் எமது எதிர்காலச் சந்ததிக்குரிய முதுசங்களை அழித்தவர்களாவோம்! 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...