குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 30, 2019

வேதங்களின் இரகசியம்

The secret of the Veda எனும் நூல் ஸ்ரீ அரவிந்தரின் வேதங்கள் மீதான புரிதல் பற்றிய நூல். 
வேதங்களுக்கு இதுவரை கூறப்பட்ட விளங்கங்களில் யதார்த்தப் பூர்வமான ஆழமான வியாக்கியானம் இதுவெனக் கூறப்படுகிறது. இந்த நூலைக் கற்றதில் அறிந்த சுருக்கங்களை தமிழில் பதிவது இந்தப் பதிவின் நோக்கம். 
முதலாவது அத்தியாயம் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் என்ற தலைப்பில் வேதங்களில் கூறப்பட்ட விஷயங்களுக்கு அர்த்தம் காண்பதில் உள்ள பிரச்சனைகளை ஆராய்கிறது. 
முதல் கேள்வி வேதங்களில் உள்ளவை எல்லாம் இரகசியங்களா? அல்லது இன்னும் இரகசியம் என்று ஏதும் இருக்கிறதா என்று ஆரம்பிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர். 
தற்காலத்தில் பழங்கால மர்மங்கள் அனைத்தும் பொதுவில் வெளிப்படுத்தப்பட்டு அனைவரும் அறியும் படி வெளியிட்ட பின்னர் உண்மையில் இரகசியம் என்ற ஒன்று எங்கிருக்கிறது என்று கேட்டபடி நூலைத் தொடங்குகிறார். 
முதல் பந்தியில் வேதங்கள் பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: 
1. வேதங்களில் உள்ள பாடல்கள் ஆதி காலத்து, நாகரீகத்தின் தொடக்க காலத்தில் வாழ்ந்த மனித சமூகத்தின் இயற்கையின் சக்தி பற்றிய, சடங்குகள் அவற்றின் சினத்தைத் தணிக்கின்ற, தியாகப் பாடல்களின் தொகுப்பு.
2. இவற்றில் குழப்பமான அரைகுறையான நம்பிக்கைகளும் வானியல் சார்ந்த தகவல்களும் உள்ளடங்கி இருக்கிறது. 
3. பிற்காலத்தைய வேத மந்திரங்களில் மட்டுமே ஆழமான உளவியல் கருத்துக்களும், திராவிடர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சிந்தனைகளும், வேதங்களைப் வெறுத்தவர்களைச் சபிக்கும் பாடல்களும் காணப்படுகிறது. 
அடுத்து தான் அந்த நூலில் தான் எடுத்தாளப் போகும் முறை பற்றிக் கூறுகிறார்;
இந்த நூலில் எனது நோக்கம் இந்த பழைய பிரச்சனைக்கு எப்படி புதிய பார்வையைத் தருவது என்பது, ஏற்கனவே இருக்கும் தீர்வுகளைப் பற்றி எதிர்மறையாகக் கூறி அவற்றை அழித் தொழிக்கும் கருத்தைக் கூறுவது எனது நோக்கமல்ல, ஆனால் எளிய, நேர்மறையான, ஆக்க பூர்வமான பயன் தரத்தக்க, இடைவெளியை நிரப்பக் கூடிய கருதுகோளை முன் வைத்து அதன் மீது புதிய ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் பழைய சிந்தனைக்கும் கலாச்சாரத்தின் மீதும் உள்ள பற்றாக்குறையான கோட்பாடுகளில் இருக்கும் சாதாரண விதிகளின் மூலம் அறிந்துகொள்ள கஷ்டமானவற்றை புரிந்து கொள்ளும் முயற்சி என வரையறுக்கிறார். 
தொடரலாம்….

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...