குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 22, 2019

அர்த்த சாஸ்திரம் - முதல் ஸ்லோகம்

ஓம் நம; சுக்கிர ப்ருஹஸ்பதிப்யாம் 
சென்ற பதிவில் ஓம் ஏன் என்ற விளக்கம் பார்த்தோம்! 
ஓம் இற்கு அடுத்து சுக்கிரனும் பிரஹஸ்பதியும் வணங்கப்படுகிறார்கள்
சுக்கிரனையும், பிரஹஸ்பதியையும் ஏன் குறிப்பிடப்படுகிறார் என்றால் அர்த்த சாஸ்திரத்துடன் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். ரிஷி பரம்பரையில் இந்த பிரபஞ்சத்தின் "அர்த்தம் எனும் பொருள் உடைய வாழ்க்கையை - செல்வத்தை அடைய இரண்டு வழிகளே உண்டு. அவை
நல்ல வழி - பிரபஞ்ச மூல இயக்கத்துடன் ஒத்திசைந்து பெறுவது நல்வழி. 
தீய வழி - பிரபஞ்ச மூல இயக்கத்தை எதிர்த்து பலம் பெறுவது தீய வழி. 
நல்வழி கடைப்பிடிபோர் தேவர் என்றும், தீயவழி கடைப்பிடிப்போர் அசுரர் என்றும் கூறப்பட்டனர். 
ஆனால் இது நன்மை, இது தீமை என்று எப்போதும் தெளிவாக கோடிட்டு பிரித்து விட முடியாது. நன்மையில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும். நல்லவர் தீயவராகவும், தீயவர் நல்லவராகவும் மாறி மாறி மனதின் பிடியில் மாறிக் கொண்டிருப்பதே இயல்பு வாழ்க்கை!
ஆகவே வாழ்க்கையை நடத்த எது சரி எது பிழை எனக் கூற ஞானம் பெற்ற குரு அவசியம். நல்லவை மட்டுமே அர்த்தத்தை அடைய வழிகாட்டுவோம் என்ற வைராக்கியமுடைய நல்லவர்கள் பிரஹஸ்பதி என்ற தேவகுருவால் காட்டப்படுகிறார்.
கெட்டவரும் ஒரு நாள் நல்லவராவார் என்ற உயர்ந்த மனப் பண்புடன் வழிகாட்டும் குரு சுக்கிரனாக காட்டப்படுகிறார். 
சுக்கிரன் பிரம்மாவின் பேரன், பிருகு மகரிஷியின் மகன். சிறு வயதில் பிரகஸ்பதியின் தகப்பனான அங்கிரஸ் மகரிஷியின் கீழ் பிரகஸ்பதியும் சுக்கிரனும் கல்வி கற்கின்றனர். பின்னர் அங்கிரஸ் மகரிஷியின் தன் மகன் மீதான ஒரு தலைப்பட்சமான கவனிப்பால் கௌதம மகரிஷியிடம் கற்று தனது தவத்தின் மூலம் சிவபெருமானிடம் சஞ்சீவனி மந்திர உபதேசம் பெறுகிறார். பின்னர் அந்த உயர்ந்த வித்தையை தனது போட்டியாளனான பிரஹஸ்பதியின் மகனான கசனுக்கு, அவனது தகுதி கண்டு உபதேசிக்கிறார்.
இப்படி நன்மையும் தீமையும் போட்டியிடும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவு சக்தியே சுக்கிரனும், பிரஹஸ்பதியுமாக சுட்டிக் காட்டப்படுகிறார்கள். இந்த அறிவு சக்தியை பிரயோகித்தே மனித சமூகம் வளர்ந்திருக்கிறது. தீயதை செய்பவனை தனது சஞ்சீவினி வித்தையின் மூலமும் எல்லாம் வல்ல சிவனின் அருளாலும் நல்ல நிலைக்கு கொண்டுபோகின்றவர் சுக்கிரன். ஆக சுக்கிரன் அனைவரிலும் கருணை கொண்டவர். 
நல்ல நிலை எனப்படும் தேவ நிலை அடைந்த பின்னர் அந்த நிலையை தவறவிடாமல் இருக்க உதவுபவர் தேவ குரு பிரஹஸ்பதி!
ஆக சுக்கிரனும் பிரஹஸ்பதியும் மனித வாழ்க்கையில் நிகழும் நன்மையை வழி நடத்தும் அறிவு சக்திகள்! ஆகவே அர்த்த சாஸ்திரத்தை ஓம் என்ற பிரபஞ்ச சக்தியின் அதிர்வுடன் ஒத்திசைந்து, மனித மனதில் நிகழும் நன்மை, தீமைகளை வழி நடத்தும் அறிவு சக்திகளான சுக்கிரன், பிரஹஸ்பதியை நினைத்து அர்த்த சாஸ்திரத்தை தொடங்குகிறார்.
இதுவே இந்த ஸ்லோகத்தின் மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனாகிய எமது அபிப்பிராயம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...