குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 04, 2019

தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்

-----------------------

நாள் - 01

----------------------------------------

இந்த சவாலிற்கு என்னை இழுத்துவிட்ட புண்ணியவான் Vimalathithan Vimalanathan, நல்ல விஷயம் ஆகவே கட்டாயம் பதிவோம் என்றால் வேலைப் பளுவிற்குள் நேரம் கிடைக்க வேண்டும்.

ஆகவே சவாலில் நாளிற்கு ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு, ஏற்கனவே சில குறள்களிற்கு எனக்கிருந்த புரிதலைப் பகிரலாம் என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் இழுத்துவிட வேண்டுமாம்! இதைப் பார்த்து விட்டு ஆர்வமுள்ளவர்கள் எவரும் எனது அழைப்பாக எடுத்துக் கொண்டு பகிருங்கள்!

*******************************************

அரசியல்

இறைமாட்சி – Good governance!

******************************************

இங்கு எனது முயற்சி, திருக்குறளை நவீன தொழில், வியாபார நிர்வாகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்ற பார்வையில் வாசகர்களுக்கு கூறுதல். அரசியல் என்பதை நிர்வாகம் – Administration எனக் கொண்டால், இறைமாட்சி – Good governance என்றவாறு கொள்ளலாம். ஆக இந்த உரையில் பண்டைய அரசு என்ற கோட்பாட்டை கம்பனி நிர்வாகம் என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டு இங்கு உரையாடப்படுகிறது.

குறள் 381:

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

Translation:

An army, people, wealth, a minister, friends, fort: six things-

Who owns them all, a lion lives amid the kings.

சிங்கம் காட்டின் அரசன் என்பது உவமை, நாடு என்றும், அதற்கு ஒரு அரசு – நிர்வாகம் இருக்க வேண்டும் என்று கருதுபவன், சிறந்த அரசாக இருக்க ஆறு பண்புகள் அரசனுக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவையாவன: படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவை ஆறும் உள்ள அரசன் சிங்கம் போன்ற அரசன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இந்த அறிவுரையை எப்படி ஒரு வியாபார ஸ்தலத்தை நிர்வகிப்பதற்கு பயன்படுத்த முடியும். அரசன் – பிரதம நிறைவேற்று அதிகாரி (Cheif Excutive Officer), குடி – அவர்கள் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் (Customer), கூழ் – வளங்கள் (resource), அமைச்சு – நிர்வாக இயக்குனர்களும் அவர்கள் துறைகளும் (Directors & Departments), நட்பு – வியாபார உறவு (business relations), அரண் – பாதுகாப்பு (Securtity) தற்காலத்தில் financial security, information security, assets security என விரியும்.

ஆக ஒரு வியாபார ஸ்தலத்தின் நிறைவேற்று அதிகாரி அரசன், அவனது நிர்வாகம் வெற்றிகரமாக சிங்கம் போன்று இருக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள், தனது கம்பனிக்கான வளங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த வியாபார உறவு, வளங்கள், தகவல்கள், சொத்துக்களுக்கான பாதுகாப்பு என்ற ஆறு காரணிகளையும் சிறப்பாக வைத்திருக்க வேண்டும்.

இந்த ஆறும் ஒரு வியாபார நிர்வாகி கவனிக்க வேண்டிய ஆறு புறக்காரணிகள். இவற்றை எப்படி சிறப்பாக பாவிப்பது என்ற அறிவு இருந்தால் மட்டுமே ஒருவன் சிறந்த நிர்வாகியாக வர முடியும்.

ஸ்ரீ ஸக்தி சுமனன்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...