குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 19, 2019

புத்தரின் மூளை - 01

இந்த நூல் எமது மகிழ்ச்சிக்கும் மூளைக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை அழகாக விவரிக்கிறது. 
நான் கற்றவற்றின் அத்தியாயச் சுருக்கத்தை நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். 
இனி முதலாவது அத்தியாயத்தின் சுருக்கம் வருமாறு:
1. உங்கள் மனம் மாறும் போது உங்கள் மூளையும் மாறுகிறது. இந்த மாற்றம் காலத்துடனும், நீடித்து நிற்கக் கூடியதாகவும் இருக்கும். உங்கள் மூளையில் ஏற்படும் மாற்றம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும், அதே போல் மனதில் ஏற்படும் மாற்றமும் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனமும் மூளையும் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த தொகுதி. 
2. ஆகவே உங்கள் மனதின் மூலம் மூளையில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். உங்களை மாத்திரமல்ல உங்களைச் சந்திக்கும் அனைவரின் மனதிலும் மூளையிலும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். 
3. ஆழ்ந்த தியானப் பயிற்சியில் தம்மை நீண்ட காலம் பயிற்றுவித்துக் கொண்டவர்கள் மனதினை வெல்லும் ஒலிம்பிக் வீரர்கள். அவர்கள் தமது மனதை எப்படி பயிற்றுவித்துக் கொண்டார்கள் என்பதை அறிவதன், கற்பதன் மூலம் நாமும் மகிழ்ச்சி, அன்பு, ஞானம் என்பவற்றைப் பெறலாம். 
4. நீங்கள் பிழைத்து வாழ உதவுவதற்காக உங்கள் மூளை பரிணாமமுற்றுள்ளது. ஆயினும் பிழைத்து வாழ்வதற்கான அதனது மூன்று தந்திரோபாயங்கள் உங்கள் துன்பத்திற்கும் வழிவகுக்கின்றன. அவை 1) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உலகத்திலிருந்து, மற்றவர்களிலிருந்து பிரித்துக்கொள்வது, 2) மாற்றத்தினை கட்டுப்படுத்தி தனது அகச்சூழலை சம நிலையில் முயற்சி 3) வாய்ப்புகளை அடைவதற்காகவும், ஆபத்துக்களை தவிர்ப்பதற்காகவும் கடந்து கொண்டிருக்கும் இன்பங்களை பற்றிப் பிடித்துக் கொள்ளவும், தவிர்க்க முடியாத வலிகளிலிருந்து தப்பிக்கவும் மனிதன் உட்பட அனைத்து விலங்குகளும் தமது நரம்புத் தொகுதியால் முயல்கிறது. 
5. அறம், விழிப்புணர்வு, ஞானம் ஆகிய இந்த மூன்றும் ஒவ்வொரு நாளினதும் இன்ப வாழ்க்கைக்கும், தனிமனித வளர்ச்சிக்குமான பயிற்சியாகும். இந்த மூன்றும் அடிப்படை நரம்புத் தொகுதியை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சீரமைக்கின்றன.
6. அறம், விழிப்புணர்வு, ஞானத்துடன் கூடிட தொடர்ச்சியான சிறு முயற்சியும் மூளையின் நரம்புக் கலங்களில் புதுவித பாதையைத் தோற்றுவிக்கின்றன. உங்கள் தினசரி முயற்சி கட்டாயம் உங்கள் மூளையில் மாற்றத்தினை ஏற்படுத்தும். 
7. இப்படி அனேக மனிதரின் மூளையில் ஏற்படும் நல்ல மாற்றம் இந்த உலகத்தினை நலமான பாதையில் செலுத்தும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...