குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 04, 2019

தலைப்பு இல்லை

நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்
-----------------------
நாள் - 01
----------------------------------------
இந்த சவாலிற்கு என்னை இழுத்து விட்ட புண்ணியவான் Vimalathithan Vimalanathan, நல்ல விஷயம் ஆகவே கட்டாயம் பதிவோம் என்றால் வேலைப்பளுவிற்குள் நேரம் கிடைக்க வேண்டும். 
ஆகவே சவாலில் நாளிற்கு ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு, ஏற்கனவே சில குறள்களிற்கு எனக்கிருந்த புரிதலைப் பகிரலாம் என்று எண்ணுகிறேன். 
ஒவ்வொரு நாளும் ஒருவர் வீதம் இழுத்து விட வேண்டுமாம்! இதைப் பார்த்துவிட்டு ஆர்வமுள்ளவர்கள் எவரும் எனது அழைப்பாக எடுத்துக் கொண்டு பகிருங்கள்! 
*******************************************
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
Translation:
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.
ஒரு நல்ல தலைமை நிர்வாகி (Chief Executive Officer) அடிப்படையில் சில மனப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அகப் பண்புகள் இல்லாவிட்டால் எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும் நிர்வாகம் சிறக்காது. இந்த அடிப்படையில் அரசன் – எமது பார்வையில் தலைமை நிர்வாகி – கொண்டிருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் நான்கு;
அஞ்சாமை: நிர்வாகம் என்றாலே மனிதர் சார்ந்த இயக்கவியல், மனிதர் தொடர்புபட்ட அனைத்தும் அடிப்படையில் சிக்கல் தன்மை வாய்ந்தவை. முடிவுகள் எடுக்கும் போது அந்த முடிவுகள் சிலருக்கு பிடிக்காமல் போகும், அதனால் அதிருப்தி உண்டாகும். அதிருப்தி உண்டானால் வினைத்திறன் குறையும். கம்பனியில் எடுக்கப்படும் முடிவுகள் அதனுடன் சார்ந்த அனைத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்ள அஞ்சுபவன் சிறந்த முடிவுகளை எடுக்க முடியாது. முடிவுகள் எடுக்கும் போது மேலே கூறிய ஆறு புறக் காரணிகளிலும் அவை தாக்கத்தை செலுத்தி என்ன ஆகுமோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அந்த குழப்பத்திற்கு அஞ்சாத துணிவு தலைமை நிர்வாகிக்கு இருக்க வேண்டும்.
ஈகை: மன்னன் நாட்டை நிர்வகிப்பது மக்களின் சேவைக்காக, இந்த சேவையினை சரியாக செய்வதற்கு துணை புரிவது அவனது அமைச்சும், படைகளும். இவற்றை சரிவர நிர்வாகம் செய்ய அவனிற்கு இருக்க வேண்டிய பண்பு ஈகை எனும் தயாள குணம். இந்தக் குணம் இல்லாத தலைவனுக்கு அவனது படைகளும், அமைச்சரும் கட்டுப்படமாட்டார்கள். ஈகை குணம் அவனது படைகளையும், அமைச்சினையும் வசம் செய்யும். ஆக ஒரு தலைமை நிர்வாகி தனது ஊழியர்களிடம் ஈகை குணமுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவர் தனது குழுவினை வைத்துக் கொண்டு சிறந்த நிர்வாகத்தினை செய்து இலாபத்தினை ஈட்ட முடியும்.
அறிவு: அரசன் எப்போதும் தனது படைகளிடமும், அமைச்சுடனும் ஈகையுடன் இருந்தால் மட்டும் நிர்வாகம் சிறந்துவிடாது. ஈகைப்பண்பு அரசனை நோக்கி அவனது குழுவினரை ஈர்க்கும், அப்படி ஈர்க்கப்பட்ட குழுவினர் சரியாக பணியாற்ற தேவையான வழியை காட்ட அரசன் போதிய அறிவினைக் கொண்டிருத்தல் அவசியம். அரசன் மட்டும் அறிவினை கொண்டிருந்தால் மட்டும் நிர்வாகம் சிறக்காது, ஆகவே அவனது படைகளும், அமைச்சும் சிறந்த அறிவுத் திறனை கொண்டிருத்தல் வேண்டும். எமது பார்வையில் தலைமை நிர்வாகி, அவரது இயக்குனர்கள், முகாமையாளர்கள் என்ற முழு நிர்வாக குழுவும் சிறந்த அறிவுடன் தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்களாக இருத்தல் அவசியம்.
ஊக்கம்: சிறு பாராட்டு வார்த்தைகள் ஒருவனை எப்படி ஆர்வத்துடன் வேலை செய்ய வைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆகவே எப்போதும் அரசன் தனது படைகளையும், அமைச்சுகளையும், குடிகளையும் ஊக்கப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை செவ்வனே செய்ய வேண்டும். அரசன்/தலைமை நிர்வாகி எப்போதும் தனது படை/ஊழியர்கள், அமைச்சு/இயக்குனர்கள், குடி/வாடிக்கையாளர்கள் மூவரையும் ஊக்கப்படுத்தும் திட்டங்களை கொண்டிருக்க வேண்டும்.
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கு பண்புகளையும் அரசன், தலைமை நிர்வாகி குறைவில்லாமல் கொண்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...