குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 11, 2019

தலைப்பு இல்லை

நான் எழுதுவது வித்தகச் செருக்கில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் இல்லை! அனைவரையும் ரட்சிக்க வந்த மேய்ப்பர் என்ற நினைப்பும் இல்லை! எல்லையற்ற ஆர்வத்துடனும் (curiosity) பேரார்வத்துடனும் (passion) உலகில் பயணிக்கும் பயணி அவ்வளவு தான்! 

எழுதுவது மனதிற்கு மிகுந்த இன்பம் தரும் செயல், சிந்தனையை ஒழுங்குபடுத்தி, எண்ணங்களைச் சொற்களாக்கி, சொற்களை கோர்த்து, எழுத்தில் கொண்டு வரும் போது மனம் ஒருவித சந்தத்தில் ஒருமைப்படும். இப்படி ஒருமைப்படும் மனம் எப்போதும் இன்பமாக இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் எழுத்து ஒரு இன்பத்திற்கான வழி! 

தனி நபர்களைப் பற்றிய விமர்சனமோ, கருத்தோ, நன்மை தீமைகளைப் பற்றி எப்போதும் விலகியே இருக்கிறேன். ஏனென்றால் இவை தேவையற்ற உணர்ச்சிகளை எம்மில் உருவாக்கி எமது மூளையின் சம நிலையைக் குலைக்கும்!

நான் மனிதர்களை எண்ணங்களாகவே பார்க்கிறேன், எண்ணங்கள் கணத்துக்கு கணம் மாறும், ஆகவே இப்போது இருக்கும் நபர் அடுத்த கணத்தில் இருப்பதில்லை, ஆகவே ஒருவரைப் பற்றி ஏதாவது முத்திரை குத்தினால் அடுத்த கணம் அவர் அந்த முத்திரையிலிருந்து மாறியிருப்பார். ஆகவே மாறிக்கொண்டு இருக்கும் எண்ணங்களை வைத்து ஒருவரை அடையாளப்படுத்தி அவர் மீது விருப்பு, வெறுப்பு ஏற்படுத்தும் செயலை நான் எப்போதும் செய்ய விரும்புவதில்லை! 

அதைப் போல் எவரையும் அறிவாளி என்று மெச்சுவதோ எவரையும் அறிவிலி என்று பரிகாசிப்பது கிடையாது! அறிவு என்பது அனுபவத்தினால் வருவது! அனுபவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவு வாய்ப்பதில்லை! 

அடிப்படையில் அனைத்தும் அன்பு என்ற தங்க இழையினால் பிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தும் அன்பினைப் பகிர்வதற்கான ஒரு வழியும் கூட.... 

ஆகவே என் வழி கணியன் பூங்குன்றனார் வழி;    

எல்லா ஊரும் எம் ஊர் 

எல்லா மக்களும் எம் உறவினரே

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமையில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை

வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல

இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று

தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்

ஆதலினால், பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

(புறநானூறு: 192)


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...