குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 15, 2019

தலைப்பு இல்லை

ஜோதிடக் கலையின் நோக்கம் என்ன? 
இன்று எதிர் காலத்தைக் கணிக்க, நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா என்று அறிய என எமது பிரச்சனைக்குரிய தீர்வினை காணும் ஒரு உத்தியாகவே ஜோதிடம் கருதப்படுகிறது. 
ஆனால் இதன் உண்மை நோக்கம் பற்றி மூல நூற்கள் கூறும் விஷயம் அற்புதமானது. மறையியல் சார்ந்தது. இந்தப் பௌதீகத்தைத் தாண்டிய நுண்ணுலக வாழ்க்கையுடன் தொடர்புபட்டது. 
ஜோதிடத்தின் ஆதி நூற்களில் ஒன்று பராசர ப்ருஹத் ஹோரா சாஸ்திரம் என்பது. இதன் முதலாவது அத்தியாயத்தில் பராசர முனிவரும் அவரது மாணவர் மைத்திரேயரும் சம்பாஷிப்பதாக உரையாடல் வருகிறது. 
ஜோதிடத்தை மனிதன் அறிய வேண்டியதன் நோக்கம் தன்னுள் உள்ள தெய்வத் தன்மையை அறிந்து தன்னை யார் என்று அறிவதற்கான நோக்கத்திற்காக என்று பராசரர் வகுக்கிறார். 
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளும் தமக்குள் ஜீவாத்ம அமிசத்தையும், பரமாத்ம அமிசத்தையும் கொண்டிருக்கிறது. 
இவற்றுள் தேவதைகளும், கிரகங்களும் பரமாத்ம அமிசங்கள் உடையவை. பூமியில் இருக்கக் கூடியவைகளில் ஜீவாத்ம அமிசமே அதிகமாகவும் பரமாத்ம அமிசம் குறைவாகவும் இருக்கிறது. 
ஆகவே பூமியின் பிறந்த மனிதன் தான் எப்படி பரமாத்ம அமிசம் பெறுவது என்ற வழியினைப் பெறுவதற்கு எமக்கு அருகில் இருக்கும் பரமாத்ம அமிசங்களான கிரகங்களின் துணையைப் பெற வேண்டும். 
பிரளயத்தின் இறுதியில் அனைத்தும் பரம் பொருளுடன் ஒன்றும். 
இந்த இரகசியங்களை அறிய ஜோதிஷ சாஸ்திரம் அவசியம் என்று கூறி இரண்டாவது அத்தியாயத்தை முடிக்கிறார். 
ஆக பராசரரின் முடிவின் படி ஜோதிஷம் தன்னை அறியும் (self realization) இற்கான ஒரு உப அறிவு (வேதமாகவே) கருதப்பட்டிருக்கிறது. 
தற்போது ஜோதிடத்தை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோமா என்பதே சிந்திக்க வேண்டிய விஷயம். 
மூல நூற்களைக் கற்காமல், அதன் நோக்கம் என்னவென்று புரியாமல் அவரவர் வசதிப்படி அறிவினை வளைத்துக் கொள்வது பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்பது ஜோதிடக் கலையின் மூலம் புரிந்துக் கொள்ளலாம். 
மூல நூல் ஆசிரியரான பராசர ரிஷி கிரகங்களை பரமாத்ம அமிசம் என்கிறார். ஆனால் இன்று சனி குடியைக் கெடுக்கிறான், ராகு வாழ்க்கையைப் புரட்டுகிறான் என்று சொல்வது ஜோதிடத்தின் அடிப்படை விதிகளுடன் முரண்படுகிறது. 
ஜோதிஷத்தின் உண்மைப் பயன் என்னவென்று அறிய மூல நூற்களை கற்றுப் புரிதல் அவசியமான ஒன்று என்பதைக் கூறவே இந்தப் பதிவு.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...