குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 07, 2019

ஆங்காரம் - அகங்காரம் -ஆணவம் -அசூயை

யோக சாதனையில் இந்த நான்கு சொற்களும் வெவ்வேறு நிலைகளை விளக்கப் பயன்படும் சொற்கள். இவற்றை சரியாகப் புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் தம்மைத் தாமே புரிந்து கொள்ள வழிவகுக்கும். 
மனிதன் தனது உணர்வுக்கு (Consciousness) இடும் முகமூடியினை அல்லது அடையாளத்தை ஆங்காரம் என்று சித்தர்கள் யோக வழக்கில் சொல்வார்கள். ஆங்காரத்தை பொது வழக்கில் அகங்காரம், ஆணவம், அகந்தை என்றெல்லாம் கூறுவார்கள். எனினும் இவை செயற்பாட்டில் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. 
ஆங்காரம் என்பது மனம் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் மையம். இதை அடிப்படையில் "நான்" என்று சொல்லலாம். 
நான் மருத்துவன் ஆக வேண்டும் என்ற ஆங்காரம் இருந்தால் மருத்துவத்தைக் கற்க வேண்டும்,  நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற அளவில் ஆங்காரம் உருவாகி மனம் ஒழுங்குபடும். 
இப்படி நான் எனும் ஆங்காரம் உருவாவதிலிருந்து எமது மனம், புத்தி, சித்தம் என்ற ஒழுங்கு அமைகிறது. 
ஆங்காரத்தினால் அந்த ஆங்காரத்திற்குரிய விஷயங்கள் மனதில் சேர்க்கப்பட்டு "நான் மருத்துவன்" என்ற ஆங்காரம் உருவாகுவதால் நாம் சிறந்த மருத்துவராக இருப்போம். 
இப்படி நான் மருத்துவர் என்ற ஆங்காரத்தில் நன்கு சேவை செய்ய, எல்லோரும் இவர் நல்ல மருத்துவர், வல்ல மருத்துவர் என்று புகழ "ஆகா, நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரம் உருவாகிவிடும். கவனிக்க, ஆங்காரம் இப்போது அகங்காரமாகிவிட்டது. இந்த "நான் நல்ல மருத்துவர்" என்ற அகங்காரமும் மற்றவர்களுக்கு நன்மை தான் செய்யும், நான் பெற்ற நற்பெயரைக் கவனமாக காப்பாற்ற நல்ல மருத்துவராக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் அவரை நல்ல மருத்துவராக வைத்திருக்க உதவும். 
அதே போல் அதன் தீய பாகம் "நான் "தான்" நல்ல மருத்துவர்" என்று எண்ணத் தொடங்கும் போது அகங்காரம் ஆணவமாகத் தொடங்குகிறது. 
ஆணவத்தின் காதலி அசூயை, ஆணவம் ஏற்பட்டவுடன் நாம் அசூயையைக் காதலிக்கத் தொடங்கிவிடுவோம். 
அசூயை என்றால் மற்றவர்கள் மேல் ஏற்படும் பொறாமை உணர்ச்சி, நான் தான் நல்ல மருத்துவர் என்று எண்ணி மற்றவர்கள் என்னை விட தரங்குறைந்தவர்கள், அறிவிலிகள், மற்ற மருத்துவரையும் என்னைப் போலவே மதிக்கிறார்கள், அவருக்கென்ன தகுதி இருக்கிறது" என்ற மனம் வெம்பும் குணம். 
ஆணவம் என்ற காதலன் அசூயை என்ற காதலியுடன் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அகந்தை. இவனைச் சரியாகப் புரிந்து கொள்ள ஆங்கிலத்திலுள்ள arrogance என்ற சொல் பொருத்தமானது. அகந்தை வந்தால் மற்றவர்களை அவமதிக்கத் தொடங்குவோம். 
ஆக எமது மனம் செயற்பட ஆங்காரம், அகங்காரம் கட்டாயம் தேவை, ஆணவம் ஏற்படும் போது சற்றுக் கவனம் தேவை, ஆணவம் அசூயையைக் காதலிக்காமல், காதலித்தாலும் அகந்தை என்ற துஷ்டனைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 
பொதுவாக மனம் பற்றி உரையாடும் போது அனேகருக்கு மற்றவர்கள் மனதை ஆராய்ந்து குறை காணும் இயல்பே பொதுவானது. ஆனால் யோகத்தில் தன்னை ஆராய்தலே வேண்டப்படுவது. 
யோகத்தில் ஆங்காரத்தையும் தூய்மையாக்கி உண்மையான பார்வையினைப் பெறுவதே இலக்கு. இதற்கு இவற்றின் இயல்புகள் தெரிந்திருத்தல் மிக அவசியமானது! 
இந்த நுண்மையான ஆங்கார அகங்கார ஆணவ அகந்தை அமைப்பினைப் புரிந்துக் கொள்ள இன்றைய காலைப் பொழுதில் இந்த உரையாடலைத் தொடங்கி வைத்த அன்பு நண்பருக்கு நன்றிகள் பல!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...