குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, December 11, 2019

சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?

என்னால் ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியவில்லை, அப்படி இருந்தால் வெறுமையாகவும் துன்பமாகவும் உணர்கிறேன்?

இப்படி பலசாதகர்கள் அனுபவமாக உணர்கிறார்கள்.

இந்த நிலை சரியானதா? பிழையானதா?

ஒருவிதத்தில் சாதனை மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறீர்கள் என்ற நிலையில்,

இன்னும் பரிபூரணமாக உங்கள் ஆளுமை தெய்வ ஆளுமையாக மாறவில்லை என்ற அளவில் நல்லது!

ஆனால் அடிப்படையில் குடிகாரனுக்கு சாராயம் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் ஒருவித போதை நிலைக்கு மனதை ஆழ்ப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்ற அளவில் நீங்கள் சம நிலையில் இல்லை என்றால் பிழையானது.

சாதனையைத் தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது என்பது மிக அவசியமான பண்பு, இதற்கு சிரத்தை என்று பெயர்!

ஆனால் நாம் உலகவாழ்க்கையில் இருக்கிறோம், பலவித கடமைகளைச் செய்கிறோம் என்ற அளவில் யதார்த்த நிலையினைப் புரிந்துகொள்ள வேண்டும். எமது தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் எமது சாதனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வீட்டில் பிள்ளைகள் உள்ள அம்மாவிற்கு அதிகாலை வேளை கணவனும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரிக்க வேண்டும், எட்டு மணிக்கு எல்லா வேலைகளும் முடிந்த பின்னர்தான் ஓய்வு கிடைக்கும் என்றால் அதற்கேற்றால் போல் நேரத்தை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும். இல்லாமல் எமது கடமைகளைத் தள்ளி வைத்து விட்டு சாதனை செய்கிறேன் என்று வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது சாதனையின் நோக்கம் தெரியாமல் இருக்கிறோம் என்று அர்த்தம்.

சிரத்தையும், சோம்பலும், இறைசக்தியும் இன்று துன்பப்படும் நாம் அவற்றை சாதனையில் கொண்டு வந்து பின்னர் அதை வாழ்வின் ஒவ்வொரு விஷத்திலும் குடும்பம், தொழில், நட்புகள் அனைத்திலும் கொண்டுவருவதே சாதனையின் நோக்கம்.

வாழ்வின் அடிப்படை சாதனை, அதற்கான எமக்கு கர்மத்தால் அமைந்த வாழ்வினை, கடமைகளை வலிந்து வெறுத்து ஓடக்கூடாது.

ஆகவே சாதனை தவறவிட்டால் அதற்கு மனம் வருந்துவது கூடாது, ஏன் தவற விட்டோம் என்பதை விழிப்புணர்வுடன் ஆராய வேண்டும். காரணத்தைக் கண்டுபிடித்து அதை உடனடியாக திருத்திக்கொண்டு அடுத்த நாளிலிருந்து சாதனையைத் தொடரவேண்டும்.

அதை விடுத்து அதிக மனவருத்தம் அடைகிறோம் என்றால் நாம் சம நிலையில் இல்லாமல் எம்மை நாமே வருத்துகிறோம் என்று அர்த்தம். மனதிற்கு தாழ்வுமனப்பான்மையினை ஏற்படுத்தும் எதைச் செய்வதும் ஆன்ம முன்னேற்றத்திற்கு எதிரானது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...