குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 06, 2011

விபாசனா ஒரு அறிமுகம்


விபாசனா - இது கௌதம புத்தர் உலகிற்கு தந்த பிரதான தியான முறையாக இன்று பிரபலமாகியுள்ளது. விபாசனா என்பதனை "அகத்தியானம்" எனலாம். புத்தர் தனது தியான சாதனையின் மூலம் உணர்ந்த பெருண்மை, மனிதன் தனது உண்மையான சொருபத்தினை அறிவதன் மூலம் தனது துன்பங்களை இல்லாதாக்கலாம் என்பது. அதாவது தன்னையறிதல்.அதாவது உண்மையான இன்பம் புற உலக தாக்குலால் பாதிக்கப்படாதது என்பதாகும்.

இதன் சிறப்புத்தன்மை என்னவென்றால் ஒருவர் தனது மனக்காரணிகளையும், மனதினையும் ஆறிவார்ந்த முறையில் சுத்திகரித்துக் கொள்வதே. இந்த நுட்பத்தில் எந்தவித சார்பு மனப்பான்மையும் இல்லை, அதாவது கடவுளை பணிதல், தேவதைகளை வணங்கள், குருவை நாடல் என்பதெல்லாம் இல்லை. ஒருவர் தனது சொந்த முயற்சியால், பயிற்சியால் அனுபவத்தினால் சுயத்தினை அடையும் முறையே "விபாச‌னா" ஆகும்.

விபாச‌னாவின் அடிப்ப‌டை ம‌ன‌ம் என்ப‌து 'நிலைய‌ற்ற‌து' 'திருப்திய‌டையாத‌து''எத‌னையும் குறிப்பாக‌ எடுத்துக்காட்டாத‌து(சார்ந்த‌த‌ன் வ‌ண்ண‌மான‌து), இந்த‌ அக‌த்தியான‌மான‌து ம‌ன‌தை புற‌ப்ப‌ற்றுக்க‌ளில் இருந்து மெதுவாக‌ மீட்டெடுத்து, பாச‌ங்க‌ள், அறியாமையை நீக்கி ம‌ன‌தை தூய்மைப்ப‌டுத்துகிற‌து.

புத்த‌ரின் க‌ருத்துப்ப‌டி துன்ப‌த்திற்கான‌ கார‌ண‌ங்க‌ள் இர‌ண்டு ஆசையும் அறியாமையும், இவையிர‌ண்டையும் ம‌ன‌திலிருந்து நீக்கும் போது ம‌ன‌ம் இன்த‌ மாறுகின்ற‌ உல‌க‌த்தால் பெறும் மாற்ற‌முடைய‌ இன்ப‌ துன்ப‌ங்க‌ளிலிருன்து நீங்கி நிலையான‌ ஒன்றில் நிலைக்கிற‌து. அந்த‌ நிலை பேரான‌ந்த‌முடைய‌தாகிற‌து, பாலி மொழியில் இத‌னை "நிப்பானா" என்பார்க‌ள்.

இந்த‌ அக‌த்தியான‌த்தின் அடிப்ப‌டை நிக‌ழ்கால‌த்தில் இருப்ப‌து, நிக‌ழ்கால‌த்தில் இருப்ப‌து ஒன்றே அதிக‌ இன்ப‌மாய் இருப்ப‌த‌ற்கும், ஆசைக‌ளை குறைப்ப‌த‌ற்கும் உரிய‌ ஒரே வ‌ழி. இத‌ன் நுட்ப‌ங்க‌ள் உட‌லினையும் ம‌ன‌தினையும் விழிப்புணர்வுடன் அவ‌தானிப்ப‌தாகும்.

விபாச‌னா என்ப‌த‌னை "வி" "பாசனா" என‌ இர‌ண்டு சொற்க‌ளாக‌ பிரிக்க‌லாம். பாச‌னா என்றால் "காணுத‌ல்" என‌ப்பொருள் ப‌டும். வி என‌ப‌து ஆழ‌மாக‌, விழிப்புண‌ர்வு என‌ப் பொருள்ப‌டும். விபாச‌னா எனும் இந்த‌ தியான‌ முறை "ம‌ன‌தினை ஆழ‌மாக‌ பார்க்கும்" ஒரு செய்முறையாகும்.

இந்த‌ தியான‌முறையின் முழுப்பெய‌ர் "விபாச‌னா பாவ‌னா" என்ப‌தாகும். பாவ‌னா என்ப‌த‌னை ஞானத்தினை அடைவதற்கான ம‌ன உருவ‌கித்த‌ல் என‌ பொருள் கொள்ள‌லாம்.

பொதுவாக‌ எந்த‌ தியான‌ முறைக‌ளையும் இருவ‌கையாக‌ பிரிக்க‌லாம், அக‌த்தியான‌ம், புற‌த்தியான‌ம் என‌, இவ‌ற்றை பாலி மொழியில் "விபாசனா பாவ‌னா", "ச‌ம‌த்த‌ பாவ‌னா" என்ப‌ர்.

புற‌த்தியான‌ம் என‌ப்ப‌டும் ச‌ம‌த்த‌ பாவ‌னா அமைதியாக‌ புற‌ப்பொருள் ஒன்றில் ம‌ன‌தினை ஒருமுக‌ப்ப‌டுத்துத‌லாகும். இவ்வாறு ம‌ன‌தினை புற‌ப்பொருளில் ஒருமுக‌ப்ப‌டுத்தும் போது ம‌ன‌ம் ஒருமை நிலை அடையும் (இத‌னை யோக‌சாத‌னையில் தார‌ணை என்ப‌ர், ம‌ன‌ம் இவ்வாறு ஒரு நிலைய‌டையும் போது ம‌ன‌தில் அழுக்குக‌ளான‌ கோப‌ம், பொறாமை என்ப‌ன‌ அழுத்தி அட‌க்க‌ப்ப‌டுகின்ற‌ன‌, நீண்ட‌கால‌ப்ப‌யிற்சிக‌ளால் இவை மெது மெதுவாக‌ ம‌ன‌தில் செய‌ல் நிலைக்கு வ‌ராம‌ல் த‌டுக்க‌ப்ப‌ட்டு இல்லாதாக்க‌ப்ப‌டுகிற‌து.

அக‌த்தியான‌ம் என‌ப்ப‌டும் விபாசனா பாவ‌னாவில் ம‌ன‌தினை உள் நோக்கி செலுத்தி விழிப்புண‌ர்வுட‌ன் ம‌ன‌தினை ப‌டிப்ப‌டியாக‌ ம‌ன‌தின் துன்ப‌த்திற்கு கார‌ண‌மான‌ 'நிலைய‌ற்ற‌து' 'திருப்திய‌டையாத‌து''எத‌னையும் குறிப்பாக‌ எடுத்துக்காட்டாத‌து (சார்ந்த‌த‌ன் வ‌ண்ண‌மான‌) த‌ன்மைக‌ளை விழிப்புண‌ர்வுட‌ன் அறிந்து கொள்ளும் செய‌ல் முறையாகும். அதாவ‌து இந்த‌ முறையில் ம‌ன‌தின் எந்த‌வொரு செய‌லையும் அட‌க்காம‌ல் விழிப்புண‌ர்வுட‌ன் அவ‌தானித்த‌லால் ம‌ன‌தின் குறைக‌ளில் இருந்து வெளிவ‌ரும் பொறிமுறையாகும்.

இந்த‌ விழிப்புண‌ர்வுட‌ன் கூடிய‌ தியான‌முறையில் ம‌ன‌ம் ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு பார்வையாள‌னாக செய‌ற்ப‌டும். அதாவ‌து புற‌த்தியான‌த்தில் ஏற்ப‌டும் ம‌ன‌ஒருமை அள‌வை விட‌ விபாச‌னாவில் ம‌ன‌தை ஒருமைப்ப‌டுத்தும் அள‌வு குறைவான‌தாகும்.

புற‌த்தியான‌த்தில் ம‌ன‌தினை ஒருமைப்ப‌டுத்துவ‌த‌ன் மூல‌ம் குறுகிய‌ கால‌ இன்ப‌ம், ஆன‌ந்த‌ம், ம‌ன‌ம் சார்ந்த‌ சித்திக‌ள் கிடைக்கும். அக‌த்தியான‌மாகிய‌ விபாச‌னாவினால் கிடைக்கும் ஆன‌ந்த‌ம், துன்ப‌ங்க‌ளிலிருந்தான‌ விடுத‌லை என்ப‌ன‌ நிர‌ந்த‌ர‌மான‌ "நிப்பான‌" என‌ப்ப‌டும் நிலையாகும்.

2 comments:

  1. சிறப்பான தியான முறை விளக்கங்கள். ஆனால் இதை ஒரு குரு மூலம் கற்றலே சிறப்பு..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. @ Sankar Gurusamy
    நிச்சயமாக குரு தொட்டுக்காட்டா வித்தை சுட்டுப்போட்டாலும் வராது என்பது பழமொழி, விளக்கங்களை வெளிப்படுத்தும் போது யாராவது ஆர்வமுறுவர் என்பது எமது எதிர்பார்ப்பு!

    கருத்துக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...