குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 14, 2023

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale

ஏன் ஒரு சமூகம் முன்னேறுவதில்லை என்றால் அவர்கள் தமக்குள் ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதுவே அவர்கள் அடைய வேண்டிய வளர்ச்சி என்று நம்பிக் கொண்டு இருப்பதால். 

மாத்தளையில் கணித விஞ்ஞான தொழில் நுட்பத்தில் எமது பிள்ளைகள் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்றால் பல்கலைக்கழகம் எப்படி இருக்கும், அங்கு ஏன் செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டாக்கப்பட வேண்டும். 

அதற்குரிய உத்வேகத்தை ஏற்படுத்துவது எப்படி என்று சிந்தித்து மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale அப்படியொரு உத்வேகத்தைத் தரும் ஒருவர் எமது பிள்ளைகளுக்கு வழிகாட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது. 

மலையகத்தில் கணித விஞ்ஞான தொழில் நுட்ப கல்வியின் முன்னோடி, மலையக சமூகத்திலிருந்து கற்று இன்று பொறியியல் துறையில் சிறந்ததொரு ஆளுமையாக இருக்கும் கலாநிதி நவரட்ணராஜா Nava Navaratnarajah அவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர். 

அவர் நேற்று பாக்கியம் தேசிய கல்லூரியில் கணித விஞ் ஞான தொழில் நுட்ப கல்வி மாத்தளை இந்து தேசிய கல்லூரி, பாக்கியம் தேசிய கல்லூரி, இரத்தோட்டை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் பயிலும் கணித விஞ்ஞான தொழில் நுட்ப மாணவர்களுக்கு உயர்தரப் பரிட்சையில் STEM மாணவர்களுக்கு இருக்க வேண்டிய உத்வேகத்தினைப் பற்றியும் ஒரு சில தொழில் நுட்ப பாட அலகுகளையும் கற்பித்தார். 

மிக அதிகம் கற்றவர்களில் பலர் தமது சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தில் குறியாக இருக்கும் போது வெகுசிலரே சமூகத்திற்கு தமது நேரத்தையும், ஆற்றலையும் முதலிடுபவர்கள். அத்தகைய ஒரு அரிய சமூக அக்கறை கொண்ட மனிதர் கலாநிதி நவா அவர்கள்! அவருக்கு எங்கள் பிள்ளைகளுக்கு உத்வேகம் தந்து வழிகாட்டியமைக்கு மாத்தளைக் கல்விச் சமூகம் சார்பில் நன்றிகள்! 

இந்த நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பு தந்த பாக்கியம் தேசிய கல்லூரி அதிபர் திருமதி மஞ்சுளாதேவி அம்மையாருக்கு, பொறுப்பாசிரியர்கள், மாத்தளை இந்து தேசியகல்லூரி அதிபர், பொறுப்பாசிரிகள், இரத்தோட்டை இந்துக்கல்லூரி அதிபர் பொறுப்பாசிரிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...