குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 22, 2023

வாசிப்பின் முக்கியதுவம்

அண்மையில் Nadesapillai Sivendran சமுகவலைத்தளத்தில் ஒரு மனிதன் இறப்பதற்குள் வாசித்து முடிக்க வேண்டிய 100 நூல்கள் என்று அவருடைய நண்பர் பகிர்ந்த ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்; அவற்றுள் நான் படித்த நூல்களை பதிந்த போது அவற்றை சரியாக குறிப்பிட்டு எனது அனுபவத்தைக் எழுதச் சொல்லியிருந்தார்; இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு பணியாக எனக்குப் பட்டது தமிழ் வாசிப்பு இன்று அருகிவிட்டது; ஆகவே இத்தகைய பதிவுகள் ஆர்வத்தைத் தூண்டும். நாம் வாசிப்புக் கலாச்சாரத்தை மெருகேற்றலாம். 

இது கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பது பொருத்தமற்றது. அது ஒவ்வொருவொருவருடைய வாழ்க்கையின் அறிவுத் தேடல் சார்ந்த இலட்சியத்தைப் பொறுத்தது; என்னைப் பொறுத்தவரையில் இறப்பதற்குள் தமிழ்ச் சித்தர் பாடல்கள் எல்லாவற்றையும் படித்து அதில் கூறப்பட்ட வாத, வைத்திய, யோக ஞானத்தைப் புரிந்து உணர்ந்து மற்றவர்களுக்கு புரியும் படி சொல்லிவிட்டு போக வேண்டும் என்று சங்கல்பித்திருக்கிறேன்; இதற்கே தற்போது 300 க்கும் மேற்பட்ட சித்தர் நூல்கள் (?10000) பாடல்களாக சேகரித்து வைத்திருக்கிறேன். இந்தப்பணி எப்போது முடிவுறும் என்று தெரியாது! 

இதை விட நான்கு வேதங்கள், பதினெட்டுப் புராணங்கள், தேவி உபாசனையுடன் தொடர்புடைய தந்திரங்கள், ஆகமங்கள், ஆயுர்வேதத்தில் சரகர், சுசுருத சம்ஹிதை, தமிழில் பதினெண் கீழ்கணக்கு, சித்தாந்த சாத்திரங்கள், தொல்காப்பியம், நன்னூல், மணிமேகலை, இசை இலக்கண நூல்கள், யோக சாத்திர நூல்கள் என ஏகப்பட்ட கற்கை இலட்சியம் இருக்கிறது. 

ஆகவே இந்த 100 நூல்களைப் படிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நான் ஏற்கவில்லை. இதற்கு மேல் எவ்வளவோ நல்ல நூல்கள் இருக்கிறது. எனவே வாசகர்கள் எவரும் இந்த நூறு நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று சிந்தனையில்லாமல் நேரத்தை வீணாக்கக் கூடாது. 

உங்கள் வாழ்க்கை இலட்ச்சியத்திற்கு தேவையான 100 நூல்களை எடுத்து ஒவ்வொன்றாக ஆழ்ந்து, அகன்று, நுணுக்கி படித்து முடியுங்கள். 

சைவத்தைப் பற்றி உரையாடி முக நூலில் சண்டை பிடிக்க முதல் சித்தாந்த சாத்திரத்தைப் படித்து முடியுங்கள்.

எதைப்பற்றியும் கருத்துச் சொல்ல முதல் அதைப்பற்றிய முக்கிய நூல்களைப் படித்து சிந்தித்து உங்கள் புரிதலைப் பகிருங்கள். 

இந்தப் பரிந்துரையில் நான் ஒரு வேக வாசிப்பாளன் என்ற அடிப்படையில் ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புகளூடாக இந்த 100 புத்தகங்களில் 34 புத்தகங்கள் படித்துள்ளேன்; நூறு நூல்களும் மின்பிரதியாகவும், தமிழ் மொழிபெயர்ப்பு அச்சுப்பிரதிகளாகவும் இருக்கிறன; தமிழ் மொழிபெயர்ப்புகளில் மஞ்சுள் பப்ளிகேஷன் மூலம் வெளிவரும் நாகலக்ஷ்மி சண்முகம், அவர் கணவர் குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மூலத்தின் உயிரோட்டத்தைத் தருபவை. 

இவற்றில் பலவற்றின் மொழிபெயர்ப்பை நான் எனது பல்கலைக்கழக மாணவர்களுக்கான career guidance விரிவுரைகளில் பரிந்துரையாகவும் தந்திருக்கிறேன். என்னுடன் தொழில் பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாவிட்டால் இந்த நூல்களில் சிலதை வாசிக்கச் சொல்லி அதன் மூலம் உரையாட மனதைத் திறந்திருக்கிறேன். 

தரப்பட்ட 100 நூல்களில் நான் வாசித்த 34 நூல்கள் வருமாறு: 

01, 02, 04, 06, 08, 10, 14, 19, 20, 21, 22, 23, 24, 27, 29, 39, 43, 49, 50, 51, 52, 56, 60, 61, 63, 69, 70, 72, 77, 78, 80, 82, 94, 100 

Total 34/100 

இந்தப் பதிவின் கீழ் இந்த நூல்களில் சிலதைப் படித்தவர்கள் உரையாடலை ஆரம்பியுங்கள்; நான் படித்த நூல்களில் உள்ள எனது ஞாபகத்திலிருக்கும் சுவாரசியமானவற்றை காலத்திற்கு காலம் ஒவ்வொன்றாக எனது அனுபவத்துடன் பகிர்கிறேன்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...