குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 06, 2023

தலைப்பு இல்லை

STEM-Kalvi இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் .பொ. சாதாரண தர கணிதப் பாடத்தில் சித்தியடைவதற்கான செயலட்டை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த செயலட்டையின் அடிப்படை இதைப் பயிற்சிக்கும் மாணவன் தான் ஒரு சாதாரண சித்தியைப் பெறுவதற்கு கட்டாயம் கணிதத்தில் தெரிந்திருக்க வேண்டிய அனைத்து அமிசங்களையும் தெரிந்து கொள்வான்.

இது ஒரு இலக்குச் சோதனை முறையாகும்; ஒவ்வொரு வினாத்தாளினை செய்யும் போதும் தனது கணிதத் திறனை வளர்த்துக்கொள்வான்.

மேலும் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தனது அங்கத்தவர்களில் (பொறியியலாளர்கள், கணித, விஞ் ஞான பட்டதாரிகளிடம்) தமது நேரத்தை ஒதுக்கி தேவைப்படும் மாணவர்களுக்கு இவற்றை விளங்கப்படுத்தி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

எமது இலக்கு மாத்தளை தமிழ் பாடசாலைகளில் கணிதப்பாடம் 100% சித்தியைப் பெற வேண்டும் என்பதாகும். அனைத்து அதிபர்களும் மனமுவந்து ஒத்துழைப்புத் தருகிறார்கள்.

இதை மாத்தளை மாவட்டத்தில் உள்ள 17 தமிழ் பாடசாலைகளுக்கு STEM-Kalvi இனது ஆலோசனையுடன் அச்சிட்டு வழங்கும் பணியை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.

இந்த செயலட்டையை அச்சிடுவதற்கு தேவையான பாதித் தொகையை எனது நிறுவனமான SRSTI வழங்குகிறது. மாத்தளையின் கல்வி வளர்ச்சிக்கு இந்தப் பணியில் உதவ ஆர்வமுள்ளவர்கள் ஒன்றியத்தின் செயலாளர் Dr. Nishānthan Ganeshan இனைத் தொடர்பு கொள்ளலாம்.

கணிதத்தில் சித்தியுறுவது என்பது ஒரு மாணவனின் வாழ்க்கையில் கல்வியின் அடிப்படைத் தகுதிகளின் ஒன்றாகும்! இதன் மூலம் நாம் எமது சமூகத்தில் தொழில் நுட்ப அறிவு, விஞ்ஞான அறிவு உள்ளவர்களை உருவாக்க முடியும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைக்கு மாத்திரம் இதைப் PDF ஆகப் பெற்று நீங்கள் அச்சிட்டுக் கொடுக்க முடியும்; ஆனால் எமது சமூகத்தில் இதை அச்சிட்டுக் கொடுக்க முடியாத வசதியற்ற பெற்றோர்களும் இருக்கீறார்கள்; ஆகவே அனைத்துப் பிள்ளைகளுக்கும் இந்த வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்த இந்த திட்டத்திற்கு இயலுமான ஒத்துழைப்பினை வழங்குங்கள்.

Nishānthan Ganeshan இனது உள்பெட்டியில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறுங்கள்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...