குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 25, 2023

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்

எமது புதுவருட சங்கல்பத்தில் நாம் வாழும் மாத்தளைச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது என்று சங்கல்பித்து 25 நாட்களுக்குள் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் முன்னெடுக்கும் இந்த வருடம் க. போ. த சாதாரண தரப் பிரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணிதச் செயலட்டைகளை வழங்கும் பணியில் ஒருபகுதியை எனது சிருஷ்டி நிறுவகம் மூலம் நிதி வழங்கி இந்தப் பணி நிறைவேறப் பங்காளராகியுள்ளது. இன்னும் பலர் இந்தப் பணிக்கு உதவியுள்ளார்கள். 

சிருஷ்டி புராதன ஞானத்தினை நவீன மனங்களுக்கு எப்படி கொண்டு செல்வது என்பதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று உலகெங்கும் உள்ள சில நூறு மாணவர்களுடன் சிறப்பாக இயங்குகிறது. 

மாத்தளையின் கல்வி வளர்ச்சிப் பணியில் பாரிய பங்களிப்பினை களத்தில் செய்து வரும் சுபீட்சம் அறக்கட்டளை Velayutham Sutharshan அண்ணா அவர்கள் இந்தப் பணியை தனிப்பட தொடர்பு கொண்டு பாராட்டினார். அவருக்கு எமது நன்றிகள்! எதிர்காலத்தில் சுபீட்சத்தின் பணிகளை நடைமுறைப்படுத்த என்னால் இயன்ற ஆலோசனைகளையும் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கள உதவிகளையும் செய்விக்கலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. 

அனைத்துப் பாடசாலை அதிபர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த செயலட்டைகள் தமது மாணவர்களுக்கு உதவும் என்ற மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செயலாளர் Dr. Nishānthan Ganeshan, இயக்குனர் சபை உறுப்பினர் Sathasivam Luxsmi Kanth ஆகியோர் களத்தில் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப் படுத்துகிறாரகள். இந்தத் திட்டத்தின் அச்சாணி STEM-Kalvi நிறுவனர் Dr. Kumaravelu Ganesan அண்ணா அவர்கள்! அவருக்கும் எமது நன்றிகள்! 

பலர் விடுபட்டிருக்கலாம், அவர்களை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale தனது அறிவிப்பில் நன்றி தெரிவிக்கும் என்று நம்புகிறேன்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...