குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 27, 2023

ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்

ஸ்ரீ அரவிந்தர் யோக இலக்கியங்கள் சிருஷ்டியின் வகுப்பாக நடைபெறுகிறது. இந்த வகுப்பில் உரையாடப்பட்ட ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடும் சைத்திய புருஷன் என்ற சொல்லின் விளக்கக் குறிப்புகள். 

_______________________________________

A. சைத்திய புருஷன் / psychic being

1) சைத்திய புருஷன் என்பது எமது ஆன்மாவில் இருக்கும் இறையின் ஒரு தீப்பொறி போன்ற ஒரு கூறு. இந்தக் கூறு வளர்ச்சியடைந்து ஒரு முழுமையை அடைய முடியும். அதாவது ஒரு சிறிய பொறியாக எல்லோரிலும் இருக்கும் இந்தக் கூறு படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஒரு முழுமையை அடையும் போது இதை நாம் சைத்திய புருஷன் என்று கூறுகிறோம்.

2) சைத்திய பகுதி தெய்வீக கூறாக இருந்தாலும் அளவில் சிறியதாக இருப்பதால் இது தெய்வ சக்திகளைக் கொண்டிருப்பதில்லை; இந்தப் பகுதி வளர்வதன் மூலம் தான் மனிதன் தெய்வமாகிறார். 

3)இந்தக் கூறு இருப்பதால் தான் மனிதன் தெய்வத் தன்மையுடையவனாக ஆவலுடையவனாகிறான். சத்தியத்தையும், ஒளியான தன்மையையும் கொண்டு தெய்வ உணர்வு நோக்கி எமக்குள் உந்தித் தள்ளும் பகுதி சைத்தியக் கூறு எனப்படுகிறது. 

4) சைத்திய புருஷன் என்பதை வரையறுக்க முடியுமா என்று ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டதற்கு கீழ்வருமாறு பதிலுரைத்தார்; அப்படி வரையறுக்க முடியாது என்று பதிலளித்தேன். விலங்குகளிலோ அல்லது பெரும்பாலான மனிதர்களிலோ உள்ள சைத்திய புருஷர் அதிமனதுடன் நேரடி தொடர்பில் இல்லை-எனவே அதை வரைவிலக்கணப்படுத்த முடியாது. ஆனால் இது அதிமனதுடன் தொடர்பு படுத்தப்பட்டால் எமது சாதாரண மனம், பௌதீக உடல், பிராணன் ஆகியவற்றை விட வலிமையான ஒன்றாக செயற்படும். மனம், பிராணன், உடல் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து துணையாகிச் செயற்படும். ஆனால் சைத்திய புருஷன் இப்படிக் கலப்பின்றி தூய்மையான நிலையில் இன்றி செயற்படக்கூடியது. தெய்வஉருமாற்றம் என்பது சைத்திய புருஷனின் விழிப்பின்றி சாத்தியமில்லை. 

5) சித்தமும் சைத்திய பகுதி என்பதும் ஒன்றல்ல; சித்தம் என்பது புற உணர்விலிருந்து, செயலிலிருந்து உருவாகும் ஞாபகங்களின் தொகுப்பு; சித்தத்தை அறிய நாம் மேற்பரப்பு, வெளிப்புற இயல்புகளைத் தாண்டி ஆழமாகச் செல்ல வேண்டியதில்லை. சித்தம் என்பது வெளிப்புற உணர்வின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்,


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...