குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 18, 2023

யோகாசனமும் உடற்கூறியலும்

ஆசனம் செய்கிறோம் என்று உடலை விதம் விதமாக வளைத்து வித்தை காட்டுவதை ஹடயோகம் என் கிறோம். இன்றைய நிலையில் சிலவாரங்கள் ஹடயோக கற்கை கற்றுவிட்டு தாம் ஹடயோக ஆசிரியர்கள் என்று தம்மிடம் ஆசனம் பழகவருபவர்களை இயந்திரத்தனமாக ஆசனம் பழக்கி பின்னர் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலி என்று வரவைத்துவிட்டு மாணவன் இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் அதற்கு நீங்கள் ஒழுங்காக பயிற்சி செய்யவில்லை என்று மழுப்பி மாணவர்களை குழப்பும் ஹட யோக ஆசிரியர்களைக் காண்கிறேன். பலர் என்னிடம் இதற்குத் தீர்வு வேண்டி வருகிறார்கள். 

நாம் ஒரு அறிவினை முழுமையாகக் கற்க வேண்டும்; அதற்குப் பொறுமை வேண்டும்; ஆசனம் செய்யப்போகிறோம் என்றால் உடற்கூற்றியல் பற்றி அடிப்படை அறிவு இருக்க வேண்டும். இதைக் கற்பதற்கு பொறுமையான பயிற்சியும் அவதானமும், நீண்ட் அனுபவ கற்கையும் வேண்டும்; இப்போது படிக்கும் எல்லோருக்கும் instant noodles மாதிரி ஹதயோக ஆசிரியராகிவிடவேண்டும்; எவருக்கும் பயிற்சி செய்து சுய அனுபவ அறிவு பெற நாட்டமில்லை. 

மனிதன் இருப்பதற்கும் நடப்பதற்கும் அடிப்படையானது புவியின் ஈர்ப்பு புலத்தில் தன்னை எப்படி சம நிலையுடன் வைத்திருப்பது என்பது. 

ஹடயோகப் பயிற்சி என்பது எமது உடலை புவியீர்ப்பினூடன் சம நிலைப் படுத்துவதால் எமது உடலிற்குள் பிராண ஓட்டத்தைத் தூண்டும் முறையாகும். 

புவியீர்ப்புப் புலம் இல்லாத வானவெளியில் விண்வெளி ஓடத்திற்குள் ஓடத்துடன் தம்மைப் பிணைக்காமல் ஆசனங்கள் செய்ய முடியாது; 

ஆகவே ஹடயோக ஆசனங்கள் பயிற்சிக்க விரும்பும் ஒரு சாதகன் தான் புவியீர்ப்புடன் சம நிலைப்படுத்தி உடலில் குறித்த பகுதியில் பிராண ஓட்டத்தினை அதிகரித்து, குறைத்து, நிறுத்தி அந்தப்பகுதியை வலிமையுறவைக்க முயல்கிறேன் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். 

யோக ஆசனம் பயில்பவர்கள் தாம் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது விளங்கிக்கொள்ள வேண்டியது; ஒவ்வொரு அசைவும் புவியீர்ப்புப் புலத்தால் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது என்பதும்; 

1) எப்படி எமது எலும்புத்தொகுதி உடலை அசைவிக்கிறது

2) இப்படி அசையும் போது எலும்பைச் சூழ உள்ள தசைத் தொகுதியை எப்படி நரம்புத்தொகுதி கட்டுப்படுத்துகிறது

3) இதன் மூலம் அந்த அசைவின் மூலம் கட்டுப்படுத்தப்படும் திசுக்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி விளங்கியிருக்க வேண்டும். 

இப்படி விளங்கியிருந்தால் மாத்திரமே ஆசனம் நாம் சரியாகச் செய்கிறோமா, பிழையாகச் செய்கிறோமா, ஆசனம் செய்யும் போது ஏன் உடலில் வலிவருகிற்து என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

ஆசனம் செய்வது என்பது மிருகத்தனமாக உடலை வருத்துவதல்ல; உடலிற்கு இன்பம் தரக்கூடிய ஒரு சுய உடல் அழுத்தல் (self massage) செயற்பாடு.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...