குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 02, 2023

சைவசித்தாந்தத்தின் ஆய்வு முறை

சைவ சித்தாந்தம் இறைவன் உயிர் ஜடம் (பதி பசு பாசம் என்பது சிந்தாந்த மொழி) ஆகிய மூன்றின் தன்மைகளை தெளிவாக ஆராயும் அளவை முறையைக் கூறுகிறது.

ஒரு அறிவினை மேலோட்டமாக மொத்தம் பொதுவாக பேசுவது, அதனை அனுபவமாக அறிவது, பின்னர் நுணுக்கி சூக்ஷ்மமாக அறிவது, அதனிலும் அதிசூக்ஷ்மமாக அறிவது என்று நுணுக்க முடியும்.

பொது மொழியில் தண்ணீர் என்பதை சிறப்பான அறிவியல் மொழியில் H20 என்று சொல்ல முடியும்; இதன் பௌதீக, இரசாயன இயல்புகளை நுணுக்கிச் சொல்லமுடியும்; பின்னர் அது ஆக்கப்பட்டிருக்கும் ஹைட்ரஜன், ஒட்சிசன் ஆகிய அணுக்களின் உள்ளமைப்பு வரை ஆராய முடியும்.

இப்படியொரு ஆய்வு முறைய சைவ சித்தாந்தம் முன்வைக்கிறது;

இறைவனை பொதுவாக இயற்கை என்றும், சூக்ஷ்ம சக்திகள் என்று வேதங்கள் துதிக்க; அதை அனுபவமாக ஒருவன் பெற ஒழுங்குபடுத்திய முறைகளை ஆகமங்களாகவும் (சக்தி வழியாக இருந்தால் தந்திரங்கள்) இவற்றினால் பெற்ற இறை அனுபவங்களின் தொகுப்பாக நால்வருடைய தேவார திருவாசகமும், இன்னதுதான் சிவத்தைப் பற்றிய ஞானம் என்பதை சரியாக வரையறுத்து அளவை, பிரமாணம், சாதனையுடன் கூற சிவ ஞான போதமும் என்று கீழ்வரும் செய்யுள் சொல்லுகிறது.

வேதம் பசுவதன்பால் மெய்யா கம நால்வர்

ஓதுந் தமிழினினுள்ளுறு நெய் - போதமிகு

நெய்யினுறு சுவையா நீள் வெண்ணெய் மெய்கண்டான்

செய்த தமிழ் நூலின் நிறம்

வேதம் பசுவைப் போன்று பொதுவானது; இறைவனின் இலக்கணம் இன்னதென்று உறுதியாக அறியமுடியாது; ஆனால் கட்டாயம் பலன் தரக்கூடியது; பசுவில் இருந்து பலன் பெறவேவேண்டும் என்றால் பசுவை சரியாக வளர்த்து மடியில் பால் கறக்க வேண்டும். இந்த பால்கறக்கும் வழி ஆகமங்கள்; பசுவின் பால் போன்றது, சிறப்பானது; உடனடிப் பலன் தரக்கூடியது; சிவமாகிய இறைவனின் உண்மைத் தன்மையை அடையும் வழியை நன்கு தெரிவிப்பது; இப்படித் தெரிவித்த வழியால் வரும் அனுபவத்தின் கடைந்தெடுத்த அனுபவ பொக்கிஷம் நால்வரது தேவார திருவாசகம்; பாலில் இருந்து கடைந்த நெய்போன்றது; நெய்யில் இருக்கும் உறுசுவை போன்றது சிவ ஞான போதம்.

என்ன அருமையாக நுணுக்கி, ஞானத்தைப் பெறும் வழியை சைவசித்தாந்தம் தருகிறது.

சிவத்தைப் பற்றிய அறிவு ஞானம் நான்கு நிலை உடையது; பொதுவிற்குள் சிறப்பும் சிறப்பிற்குள் சூக்குமமும், சூக்குமத்தில் நன்கு வரையறுத்த அதிசூக்குமமும் இருக்கிறது; drilling down to subtlety - நுணுக்கம் வரை துளையிடுதல்

பொது அறிவு - பசு பலன் தரும்

சிறப்பு அறிவு- பசுவின் பால் தான் உடலிற்கு பலன் தரும்

சூக்குமம் - பசுவின் பாலின் நெய் தான் உடலிற்கு ஓஜஸினை ஒளியைத் தரும்.

அதிசூக்குமம் - இந்த பலன் கிடைப்பது நெய்யின் சுவையை உணர்வதினால்

என்று நான்கு நிலையில் நுண்மையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறது சித்தாந்தம்

தற்போதைய சைவத்திற்கு தேவையான அருமையான சிந்தனை!

படம்: சிவத்தின் தன்மை பொன்னார் மேனியன் என்று அறிவதற்காம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...