குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 31, 2023

சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளின் மறையியல் கோட்பாடுகள் - 01

காரண சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரீரம் உருவாகி வன்மை அடைந்து ஸ்தூல சரீரத்தை உருவாக்குகிறது என்பதே சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளின் அடிப்படையாகும். 

இந்த காரண சரீரம் ஆன்ம ஒளியாக இறைவனிலிருந்தும் மற்றைய உப ஒளிகளாக கிரகங்கள் நட்சத்திரங்களின் ஒளியில் இருந்து உருவாக்குவது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை. 

இந்த நவக்கிரக - நட்சத்திர சக்திகளை பூமியின் உறைந்த உயிரற்ற வடிவமே தாதுவர்க்கம் எனப்படும் minerals. 

இந்த உயிரற்ற தாதுக்களை உயிருள்ள தன்மைக்குள் கொண்டு வருவதே தாவர வர்க்கங்களின் தொழில். இதனால் மூலிகை வர்க்கம் மருத்துவத்தில் பாவிக்கப்படுகிறது. தாது வர்க்கம் பாவிக்க வேண்டுமானால் தகுந்த புடத்தினால் அணுத் தன்மை உருவாக்கப்பட வேண்டும். இந்த மருந்துகளை செந்தூரம்/பஸ்பம்-சுண்ணம், கட்டு என்று சொல்லுவோம். அப்படியிருந்தும் அவை பாவிக்கப்படும் போது அளவும், பத்தியமும், துணை மருந்துகளும் அவசியம்.

விலங்குகளும், மனிதனும் தனது உடலைப் போசிக்கும் நவக்கிரக நட்சத்திர சக்திகளைக் கிரக்கிக்க வேண்டுமானால் அவற்றை தாதுக்கள் உறைவித்து பூமியில் சேமிக்க, அப்படிச் சேமித்தவற்றை தாவர வர்க்கம் உயிர்த் தன்மையுள்ளதாக்க விலங்குகளும் மனிதர்களும் பயன்படுத்துகிறார்கள். 

மேற்குறித்த தர்க்கத்தின் அடிப்படையில் தான் ஜோதிடம் மருத்துவத்திற்குள் வருகிறது. ஒருவன் பிறக்கும் போது அவனது சூக்ஷ்ம சரீரத்தில் அவன் ஏற்ற கிரக நட்சத்திர ஆற்றல்களின் வலிமை என்பதே ஜாதகம். இந்த இருப்பை வைத்துக் கொண்டு அவன் குறித்த கர்மங்களில் -செயல்களில் என்ன நிலையை அடைவான் என்பதை அனுமானிப்பதே!

சூக்ஷ்ம சரீரம் என்ற அமைப்பு காரண சரீரத்திலிருந்து உயிர்த் தன்மையை ஸ்தூல உடலுக்கு கடத்தும் வேலையைச் செய்யும் அதேவேளை உடலிலுள்ள திரவப் பதார்த்தங்கள் அனைத்தினதும் ஓட்டத்தினைச் செம்மைப் படுத்துகிறது. 

இந்த ஓட்டத்தை நாடி - பிராண ஓட்டம் என்று சித்த ஆயுள் வேதம் குறிப்பிடுகிறது. ஸ்தூல உடலில் இது இரத்த ஓட்டத்தினால் அறியப்படுகிறது. எனினும் நாடி என்பது இரத்த ஓட்டத்தினூடாக சூக்ஷ்ம உடலின் பிராண ஓட்டத்தினை அறியும் முறையாகும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...