குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 12, 2023

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்

இன்று சுவாமி விவேகானந்தர் அவதரித்த நாள் - வீரமிகு இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற சங்கல்பம் கொண்ட ஒரு சிந்தனையாளரின் பிறந்த நாள்! படிக்கும் எவரையும் வசீகரிக்கும் ஆற்றலும், சிந்தனை மாற்றமும் செய்ய வல்ல ஆற்றல் மிகுந்தவர்.

சிறுவயதில் ஒரு விவாதப்போட்டியில் பெற்ற பரிசாக சுவாமி விவேகானந்தரின் நூல்களில் இரண்டு விடயங்கள் என்னை யோக சாஸ்திரத்தில் எனக்கிருந்த பூர்வ சம்ஸ்காரங்களை விழிப்படைய வைத்தது ஆர்வமுள்ளவனாக்கியது!

முதலாவது கல்வி என்பது மனித மனதின் இயக்கத்தையும், செம்மையையும், ஆற்றலையும் பற்றியது என்பதும்,

இரண்டாவது செம்மையுற்ற மனம் அனேகருக்கு ஓரிடத்திலிருந்து கொண்டு செயலாற்றலாம் என்ற விடயம். உடம்பால் செய்கின்ற உதவி ஒன்று தான் உதவி என்று நினைக்கிறாயா? உடம்பின் செயற்பாடுகள் எதுவும் இல்லாமல் சீரிய ஏகாக்கிரம் அடைந்த யோக சக்தி பெற்ற உயர்ந்த மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியும் என்ற உண்மை.

மனதைப் பற்றிய கேள்விக்கு எனது முதல் குருநாதர் ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் தனது குருவான ஸ்ரீ கண்ணைய யோகியாரின் மானச யோக விளக்கம், சித்தி மனிதன் பயிற்சி, பரிணாமத் துரித பிராண யோகம் என்றெல்லாம் விளக்கி நுணுக்கி வழிகாட்டினார்.

குருதேவர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர சரஸ்வதி, விசாகப்பட்டனத்தில் வசித்து வந்தவர்; ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் எனக்கு அடிக்கடி வரமுடியாது, எப்படி வழிகாட்டலைப் பெறலாம் என்ற கேள்விக்கு பதிலைத் தந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது;

ஐரோப்பாவின் கலாச்சாரம் இந்தியரை வசப்படுத்தியதன் ஆழமான காரணம் அது புறவயமான பொருண்மைய உலகின் மீது வீரியம், செயல்திறன், படைப்பாற்றால் உடையதாக கவர்ச்சிகரமாக இருந்து; மறுபுறம் இந்திய தத்துவங்கள் ஜடத் தன்மையுடன், ஒவ்வொருவரையும் பலவீனமாக்கும், முடங்கிப் போன செயலற்ற தற்காப்பு உணர்வினை உருவாக்கி மனித ஆற்றலை புறவயமாகச் செயற்பட முடியாத மூட நம்பிக்கைகள் நிறைந்த சமூகம் ஆகிவிட்டிருந்தது.

முதல் முதலாக சுவாமி விவேகானந்தர் இந்தியத் தத்துவங்களில் இருந்து ஐரோப்பிய மனங்களுக்கும் பொருளுலக மனோபாவத்தைத் தாக்கி புது வெளிச்சம் சமைத்தார் என்கிறார்.

அகவயமாக மூழ்கிப்போன இந்திய தத்துவமும், முழுமையாக பொருள் முதன்மையாகிப் போன மேற்கத்தேய நிலையும் மனித குலத்தின் ஆற்றலை ஒருங்கிணைக்க முடியாத நிலையுண்டாகும் என்று அறிந்து இதைச் சமப்படுத்தும் நிலையை ஏற்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்!

#SwamiVivekananda #swamivivekanandaquotes #swamivivekanandainspires

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...