குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 16, 2020

இன்று உலக இல்லற தினம் - International Day of Families

குடும்பம் என்பதை விட இல்லறம் என்பது சரியான சொல்! இல்லத்தில் அறம் இருந்தால் இல்லறம்! 
இல்வாழ்க்கை என்பது என்னவென்று வள்ளுவர் கூறுகிறார். 
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
இல்வாழ்வான் என்பவன் அறத்தின் வழி நிற்கும் இயல்புடைய அந்த மூவருக்கும் நல்ல செயல்களைச் செய்யத் துணை நிற்பவன் என்று வரையறுக்கிறார். இல்லறத்தான் துணை நிற்க வேண்டிய அந்த மூவர் யார்? 
மணக்குடவர், பரிமேலழகர் ஆகிய பழைய உரையாசிரியர்கள் அந்தக் காலத்து சமூக நிலையில் தனிமனித வாழ்க்கை நிலை வீடுபேற்றை இலக்காகக் கொண்ட நான்காக இருப்பதால்;
1)   பிரம்மச்சரியம் - அறவழியில் நின்று கல்வி கற்பவன்
2) இல்லறம் - மனைவி பிள்ளைகளுடன் அறவழியில் பொருளீட்டி அந்தப் பொருளை அறவழியில் செலவழிப்பவன், 
3) வானப்பிரஸ்தம் - இல்லறப்பொறுப்பிலிருந்து வெளிவந்து அறவழியில் தன்னை வீடு பேற்றினை நோக்கிச் செல்ல தயார்படுத்தலில் உள்ளவர்கள்.
4) துறவு - உலகப்பொறுப்புகள், பற்றுகளிலிருந்து விடுபட்டு அகவாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் அகத்தினை முன்னேற்றுவது சமூகத்தினை வழி நடத்துவதற்கான சமூகப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு! இதை வெறுமனே பொறுப்புகளை விட்டு விட்டு ஓடுவது என்று எண்ணக்கூடாது. தனது குடும்பத்திற்காக உழைத்தவன் உலகமே தன் குடும்பம் என்ற பார்வையை விரித்துகொண்டு தனது அகத்தில் இருந்து நிலைபெற்று சமூகத்தை வழி நடாத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுதல் என்று கொள்ளலாம்.
இதில் இல்லறத்திலுள்ளவர்களே மற்றைய மூன்று நிலைகளிலும் அறங்களை பாதுகாத்து வாழ்பவர்களுக்குரிய வசதிகளைச் செய்ய வேண்டியது என்பதை இந்தக் குறள் குறிக்கிறது என்று உரை கொள்ளுகிறார்கள்! 
ஆனால் சமூகம் நாற்புருடார்த்தங்களில் இறுதி இலக்காக வீடுபேறு இருக்கும் சமூகத்திற்கு பங்களிக்கும் அலகாக குடும்பம் இருக்கும் போது இது சரியான வியாக்கியானம் தான்! ஆனால் குடும்பம் என்பது தானும், தன் குடும்பத்தவர்களும் நலமாக வாழ இருக்கும் ஒரு தொகுதி என்ற என்ற சிறிய வட்டமாக இருந்தால் கருணாநிதி முதலானவர்கள் உரை கண்டது போல் பெற்றோர், துணைவி, மக்கள் என்ற சிறிய வட்டமாக இருக்கும்! 
இந்த பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்ற சிறிய வட்டத்தில் தனது மனதைப் விரித்து தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதைத் தாண்டி மற்றவர்களுக்காகவும் தனது வாழ்க்கை என்று மனதைப் பயிற்றுவித்து அனுபவம் பெற்றவன் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவனையும் தனது குடும்பத்தவர்கள் என்று உலகமே ஒரு குடும்பம் என்ற உணர்வு பெறுதலே வாழ்க்கை! துறத்தல் என்பது மேலானதைப் பெறுவதற்கு கீழான பொறுப்புகளை விட்டுவிடுதல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். 
ஆகவே வள்ளுவர் எல்லாக்காலத்திற்கும் வழிகாட்டக் கூடிய செழுமையான ஞானி என்பதற்கு இந்தக் குறளின் பொருள் கோடலே நற்சான்று! 
{காலையில் இந்தக்குறளை சிந்திக்கத் தூண்டிய Reshzan Thayaparan & Hari Arul ஆகிய இருவருக்கும் நன்றி}

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...