குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 01, 2020

சாதகர்களின் காயத்ரி சாதனை அனுபவங்கள்

குருமண்டலத்திடம் சாதனை பயிலும் சாதகர் ஒருவரின் லகு அனுஷ்டானக் அனுபவக் குறிப்பு;

******************************************************************


அன்பின் அண்ணா

இன்றுடன்  லகு அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு நாளை முதல் கல்ப சாதனை தொடங்குகிறேன். 


மார்ச் - ஏப்ரல் 2020 லகு அனுஷ்டானம் சாதனை அனுபவம்.

உங்கள் அறிவுறுத்தலின்படி நான் என்னில் கவனித்த குண மாற்றங்கள்

  • காலை எழுவது மிகவும் சிரமமாக இருக்கும். இந்த லகு அனுஷ்டானம் ஆரம்பித்தது முதல் காலை 3.30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். மேலும் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்து செயல்படுத்தும் தீர்மானம் இருக்கையில் அனைத்துதும் அனுகூலமாக அமைகிறது என்பதை உணர்ந்தேன்.

  • மனதில் எந்நேரமும் திருப்தியற்ற நிலை இருந்தது. அதனால் கோபம் எரிச்சல் போன்ற குணங்கள் வெளிப்பட்டன இதனிலிருந்து எவ்வாறு வெளிவருவது என யோசித்தேன். அப்பொழுது என்னில் ஒரு குரல் மறு நாள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்து செயல்படு என அறிவுறுத்தியது. அவ்வாறு செய்தவுடன் கோபம் எரிச்சல் குறைந்ததுடன் உற்சாகமாகவும் வேலை செய்ய முடிந்தது. அத்துடன் கோபம் எரிச்சலின் காரணமாக தவறு செய்ய நேரிட்டால் அதற்கு முன்னரே ஒரு குரல் என்னை தடுத்து மனதை திசை திருப்பிவிடுகிறது.
  • நான் காலை மாலை என பிரித்து லகு அனுஷ்டானம் செய்தேன். இம்முறை காயத்ரி அனுஷ்டானம் மாலை செய்கையில் வீட்டில் சத்தமாக பட்டு கேட்பது, பேசுவதுமாக இருந்தார்கள். எனக்கு சாதனை செய்ய சிரமாக இருந்தது. அப்போது எழுந்து அவர்களை நன்றாக திட்ட தோன்றியது. எனினும் சாதனை முடியும் வரை எழுவது இல்லை என சங்கல்பம் கொண்டிருந்தேன். ஆகையால் தேவியிடம் "அம்மா நான் இந்த சத்தத்தை தாண்டி மனம் ஒருமித்து சாதனை பக்குவத்தை இன்னும் அடையவில்லை தயவு கூர்ந்து என்னை வழிநட த்துவாயாக" என வேண்டினேன். சிறிது நேரத்தில் என் தாயார் அங்கு வந்து வீட்டில் உள்ளோர் எனக்கு சிரமம் தருவதை உணர்த்தினார். அன்றில் இருந்து சாதனை செய்யும்போது அமைதியாக இருக்கும்
  • தேவைக்கு அதிகமாக இணைய தளத்தில் இருப்பது, you tube பார்ப்பது என தேவையற்று நேரம் விரயம் செய்தேன். சில நாட்களாக என்னுள் ஒரு குரல் நீ இந்த நேரத்தை பலனுள்ளதாக செயல்படுத்தலாம் என கூறி செய்ய வேண்டிய காரியத்தையும் அறிவுறுத்துகிறது. இதனால் எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயன் தரும் செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கிறது.
  • செய்யும் காரியங்களில்  ஈடுபாடு அதிகம் ஆகிறது.  ஈடுபாட்டுடன் செய்வதால் திருப்தி அதிகரிக்கிறது. இதனால் நேர விரயமும் தவிர்க்கப்படுகிறது.
  • தீய எண்ணங்கள் ஏற்படுகையில், நான் எப்போதும் நல்லவற்றை எண்ணும்  கல்யாண குணம் உடையவள் என்று ஒரு குரல் எதிரொலிக்கும், அதை தொடர்ந்து அத்தகைய எண்ணங்களில் இருந்து மனதை ஒருவர் திருப்பிவிடுவதை உணர்ந்துள்ளேன். அத்துடன் தீய எண்ணத்தை நீக்கும் விதமாக நல்ல எண்ணம் ஒன்று பதிவிட்டது.
  • ஒரு காரியத்தை செய்யவேண்டும் என திட்டமிட்டபடி செய்து முடித்துவிடுகிறேன்.  தடைகள் இருப்பின் அதனை எவ்வாறு செய்வது என அறிந்து அதனை நீக்கும் வழிகளை கண்டறிந்து செயல்படும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது. 
  • பிறர்க்கு உதவி செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.  காயத்ரி சாதனைக்கு பின் நான் செய்யும் உதவிகள் அதிகரித்துள்ளது. அதுவும் தேடிச் சென்று உதவும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.  
  • செயல், பேச்சு மற்றும் எண்ணங்கள் யாரையும் பாதிக்கும் விதமாக இல்லாமல் நன்மை பயக்கும் விதமாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொ ள்கிறேன். என்னையும் மீறி ஒருவரை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் அது எனக்கு உணர்த்தப்படுவதுடன் மீண்டும் அவ்வாறு நடக்காமல் இருக்க வழியையும் காட்டுகிறது….
  • முன்பு ஒரு காரியத்தை செய்வதனால் அந்த காரியத்தை செய்வதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சிந்தித்து அதில் உள்ள சிரமங்களை காரணமாக கொண்டு அதை செய்வதை தள்ளிப்போட்டுவிடுவேன். இப்போது ஆராய்ந்து அந்த செயலில் ஈடுபடுவதால் தவறு இல்லை எனில் முயற்சி செய்து பார்க்கும் தைரியம் அதிகரித்ததுள்ளது.
  • முந்தைய லகு அனுஷ்டானகளின் போது உடல் உபாதைகள் இருந்தது இம்முறை அவ்வாறு எதுவும் ஏற்படவில்லை மனம் இலகுவாகவும் அமைதியாகவும் உள்ளது .
  • என்னுள் ஒரு வழிகாட்டி இருந்து என்னை வழிநடத்துவது போல் உணர்கிறேன்.
  • என்னை யாரேனும் நினைத்து தகவல் சொல்ல நினைத்தால் அது முன்னரே எனக்கு உணரத்தப்பட்டுவிடும். அன்று நீங்கள் கல்ப சாதனை செய்வதற்கு அனுப்பிய மெசேஜ் அப்படியே எனக்கு உணத்தப்பட்டது. சிறிது நேரத்தில் உங்களது மெசேஜ் வந்தது. அது போல் பல முறை நடந்து உள்ளது.

என்னால் உணர முடிந்த மாற்றத்தை இதில் பகிர்ந்துள்ளேன் அண்ணா. அத்துடன் சித்த சாதனையில் கவனம்  செலுத்தி அந்த பண்புகளை வளர்க்க முயற்சிகளை செய்கிறேன்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...