குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 21, 2020

தலைப்பு இல்லை

நேற்றைய நாள் முழுவதும் முக நூலில், வாட்ஸப்பில், தொலைபேசியில், குறுஞ் செய்தியில் என பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அன்புள்ளங்கள் அனைவரிற்கும் எனது இதயப் பூர்வமான நன்றிகளும் அன்பும்!    
வாழ்வில் கொண்டாடுவதும், திண்டாடுவதும் ஆக இரண்டும் மாறிக்கொண்டிருப்பது! கொண்டாட்டம் என்று வந்தால் பிறகு திண்டாட்டமும் வரும் என்பது உலக சுழற்சியின் நியதி! 
மனதைச் சமநிலையாக வைத்துக் கொண்டு எம்மைச் சூழ உள்ளவர்கள் மனதை மகிழ்விக்கும் செயலாக கொண்டாட்டம் இருக்கலாம் என்பது சரியாக இருக்கலாம்! 
விளையாட்டாக விமலாதித்தனிடம் உங்கள் பிறந்த நாள் வெகுமதியாக எனக்குத் தரவேண்டியதற்கும், நீங்கள் எனக்குத் தரவேண்டிய பிறந்த நாள் பரிசிற்காகவும் இல்லற யோகம் நூலை மெய்ப்பு பார்த்து நூலாக்குங்கள் என்று கேட்க அதை ஏதோ ஒரு உத்வேகம் வைத்துக் கொண்டு செய்து தந்துவிட்டார்! 
எமது எழுத்துக்களும் செயலும் மற்றவர்களுக்கு ஆனந்தமும், அமைதியும் முக்கியமாக தெளிவும் தரவேண்டும்! எழுதுவது என்னிடமுள்ள அறிவினை பகிர்ந்து கொள்வதற்காகவே! அறிவு ஒளி மிகுந்தது! தன்னைச் சூழ உள்ளவர்களுக்கும் வழிகாட்டும்! 
எனது குருநாதர் "Share the knowledge with All" என்று கூறினார்; இதை எப்படிச் செய்வது என்று தெரிவில்லை ஒன்பது பத்து வருடங்களுக்கு முன்னர் வலைத் தளமாகத் தொடங்கி, தெரிந்தவற்றை எழுதினேன்! நூலாக உருப்பெற்று எழுத்து அனேக சொந்தங்களைப் பெற்றுத்தந்தது! 
பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு "குறைவாகப் பெறு; அதிகமாகக் கொடு" என்று கூறியபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாழ்க்கை இனிமையானது! எம்மிடம் உபரியாக இருக்கும் எதுவும் எமக்கானதல்ல! மற்றவர்களுக்கு கொடுக்க நம்மிடம் தரப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் வேண்டும் என்றார்! 
அனேகர் வழிகாட்டல் பெற்றார்கள்; பயன் பெற்றார்கள்; அதனால் அன்பு மிகுதியால் என்னை குரு என்கிறார்கள்; அதற்குரிய தகுதி என்னிடம் இருக்கிறாதா என்பதை நான் தினமும் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறேன்! நான் எவருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை! எனது குருவிற்கு நல்ல சீடனாக எப்போதும் இருக்கவே விரும்புகிறேன்! அது இலகுவானது! இன்பமானது! குரு என்ற தத்துவம் அறியாது ஒருவரைப் பார்த்து குரு என்று விளிப்பதும், தகுதி அற்றவர் மற்றவர்களுக்கு நான் குரு என்று எண்ணுவதும் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழி விழுமாறே என்ற நிலை வந்து விடக்கூடாது; இந்த எண்ணங்கள் வீண் அகங்காரத்தையும், ஜம்பத்தையும் கூட்டி குழிபறிக்கும். எவருக்காவது குருவாக நான் தெரிந்தால், அவர்களை அந்த எண்ணம் முன்னேற்றுகிறது என்றால் அது அவர்களுக்கு நல்லது! ஆனால் அதை என் தலையில் ஏற்றிக் கனமாகக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்! 
வாழ்க்கையில் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தில் செயலாற்றுவதால் அனேகர் என்னைத் தொடர்பு கொண்டாலும், கொள்ள விரும்பினாலும் தட்டச்சு செய்திகளை தவிர அனேகரிடம் உரையாட முடியாத தொழில் வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறேன்! என்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் செலவழிக்கக்கூடிய நேரத்தினை நான் பெற்றிருக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது! 
மீண்டும் அனைவருக்கும் உளப்பூர்வ அன்பும் நன்றிகளும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...