குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 25, 2020

மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 08

கர்மச்சக்கரம் என்றால் என்ன என்று சிலர் கேட்டிருந்தார்கள். 

எம்முடைய ஒவ்வொரு எண்ணமும் எமது ஆழ் மனதில் - சித்தத்தில் பதிவினை ஏற்படுத்துகிறது. இந்தப் பதிவுகள் மீண்டும் மீண்டும் செயற்பட இரண்டு காரணிகள் இருக்கிறது. 

முதலாவது எமது இச்சை; இச்சையினூடாக எமது சித்தத்திலுள்ள பதிவுகள் தட்டி எழுப்பப்படுகிறது. இச்சையின் வடிவங்கள் பல

விருப்பு - வெறுப்பு 

பற்று - எரிசல்

அன்பு - வெறுப்பு

குரோதம் - அதிபற்று

அகங்கரம் - ஆணவம் 

இப்படி எல்லா வித உணர்ச்சிகளும் எமது சித்தப் பதிவுகளைத் தூண்டி எம்மை மீண்டும் செயலில் தள்ளிக் கொண்டிருக்கும். 

இரண்டாவது காரணி சூழல்; எமக்கு குறித்த ஒரு அனுபவம் ஏற்பட்ட சூழலிற்குள் நாம் மீண்டும் போகும் போது எவ்வளவு தான் எம்மைக்கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் சித்தப் பதிவுகள் தூண்டப்பட்டு நாம் அந்தச் செயலைச் செய்து விடுவோம். போதைக்கு அடிமையானவன் எவ்வளவு தான் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் குடிக்கும் சூழல் உருவாகியவுடன் சித்தம் தூண்டப்பட்டு மீண்டும் குடிகாரனாகிவிடுவான். 

ஆக எமது சித்தப் பதிவுகள் தூண்டப்படுவது; 

முதலாவது இச்சையும் அதனூடாக எழும் உணர்ச்சிகளும்,

இரண்டாவது எமக்கு ஆழமான அனுபவத்தைத் தந்த அதே சூழல் மீண்டும் எம்மைச் சூழ உருவாகினால் அது எமது சித்தத்தை தூண்டி எண்ணங்கள் எழுந்து அதற்குள் சிக்கிக் கொள்வோம். 

இப்படி மீண்டும் மீண்டும் அவை நடக்கும் போது மிக நுண்மையாக இருந்த பதிவு வலுப் பெற்று வலிமையான பதிவாக மாறி எம்மை ஆட்டிவைக்கத் தொடங்குகிறது. எமது பழக்கவழக்கங்கள் ஆகிறது. 

எமது தொடர்ச்சியான செயல்கள், பழக்கவழக்கங்கள் ஆக மாறுகிறது. எமது பழக்கவழக்கங்கள் எமது நடத்தையைத் தீர்மானிக்கிறது. இந்த நடத்தை எமது ஆளுமையாகிறது. இப்படி தொடர்ச்சியாக வலிமை பெற்ற பதிவுகளை யோக மொழியில் சம்ஸ்காரங்கள் என்று கூறுவோம். 

இப்படி எமது அனுபவம் - சித்தப்பதிவு - மீண்டும் மீண்டும் ஒரே அனுபவம் - வலிமையான சித்தப்பதிவு - பழக்க வழக்கம் - நடத்தை - ஆளுமை என்று எமது அக உலகம் கட்டியமைக்கப்படுகிறது. 

அடுத்த பதிவில் சம்ஸ்காரம் என்பதைப் பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்! அதன் பிறகு கர்மச்சக்கரம் எப்படி நடைபெறுகிறது என்பது புரியும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...