குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 01, 2020

சாதனா மூலம் எங்களுக்கு தேவையானதை வேண்டுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

ஒரு சாதகரின் கேள்வி:
அண்ணா, சாதனா மூலம் எங்களுக்கு தேவையானதை வேண்டுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

  1. எமக்கு தேவையானதைப் பெற இறைவன் எமது மனம், புத்தி, உடல் என்பவற்றைத் தந்திருக்கிறான்.
  2. இவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு எம்மைப் பயிற்சிப்பதே காயத்ரி சாதனையின் நோக்கம்.
  3. காயத்ரி சாதனையின் மூலம் மனம், புத்தி, பண்புகள் நுண்மையடைவதாலும் பிராண ஆற்றலும், அதிர்வும் அதிகரிப்பதால் எமக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்குரிய ஆற்றல் உள்ளவர்களாக நாம் சக்தி பெறுவோம்.
  4. எமது தேவை என்பது தர்மத்திற்கு உட்பட்டதாகவும், பேராசை அற்றதாகவும், அடிப்படையானதாகவும், வாழ்வில் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்வதற்கானதாகவும் இருக்க வேண்டும்.
  5. எமது அடிப்படைத்தேவைகளில் அதி முக்கியமான மூன்று தேவைகளை மாத்திரம் சாதனையின் முடிவில் வேண்டுதலாக வைக்கலாம். 
  6. இப்படி வைப்பதால் தேவியே செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வாள் என்று நம்பிக்கொண்டு செயலற்று சோம்பேறியாக இருக்கக்கூடாது. இப்படிப் பிரார்த்திக்க அது நிறைவேறுவதற்குரிய சூழலை மெதுவாக உருவாக்கும், அதை நாம் புத்திக்கூர்மையால் உணர்ந்து செயலில் ஈடுபட வேண்டும். 
  7. நாம் வைக்கும் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அந்தக்கோரிக்கை உங்கள் முன்னேற்றத்திற்கானது இல்லை, தற்போதைய காலத்தில் சாத்தியமில்லை என்பதை அறிந்த பிரபஞ்ச ஞானசக்தி அவற்றைத் தடுக்கலாம்.
  8. இப்படி நடைபெறவில்லை என்பதால் மனம் சோர்ந்து சாதனையைத் தவறவிட்டால் நாம் வைரச்சுரங்கத்தில் கடைசி அடி மண்ணை வெட்டாமல் சென்றவர்களாவோம்.
  9. நாம் எங்கு தவறு விடுகிறோம் என்பதை எமது புத்தியால் கூர்ந்து கவனித்துத் தீர்க்க வேண்டும், மீண்டும் மீண்டு முயற்சி செய்யவேண்டும். அதற்குரிய காலம் சரியாகி எமது பக்குவமும் சரியாக இருக்கும் போது காரியம் நடைபெறும்.
  10. குரு-அகத்திய-காயத்ரி சாதனா முறை வாழ்வின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து எம்மை பரிணாமத்தில் படிப்படியாக உயர்த்தும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...