குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 04, 2020

குரு அகத்திய காயத்ரி சாதனியும் நவக்கிரக தோஷங்களும்

வணக்கம் ஐயா,
நான் தங்களின் blog ஐ தொடர்ந்து படித்து வருகிறேன். நான் நவகிரக காயத்ரி சாதனை - சந்திர காயத்திர மந்திர சாதனை துவங்க ஆவலாய் உள்ளேன். தினமும் சந்திர ஓரையில் சாதனை பண்ண இயலாவிட்டால் வேறு உகந்த நேரத்தில் பண்ணலாமா ? அல்லது சந்திர ஹோரையில்தான் கட்டாயம் சாதனை புரியவேண்டும் ?

அன்பரே,
சாதனை மூலம் எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்பது உண்மை! ஆனால் அது நாமாக பொதுவாக நம்பிவரும் நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்ட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒழுக்க முறை. இதன் அடிப்படை குறித்த சில காலத்திற்கு (மாதங்களுக்கு, வருடங்களுக்கு) சிரத்தையாக தினசரி சாதனை செய்யும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.
தற்போதைய fast food யுகத்தில் இருக்கும் எமக்கு அதைப்போன்ற துரித பரிகாரங்கள் போன்று எமது மனம் விரும்பிய விஷயங்களை நம்பிச் செய்யும் முறை அல்ல சாதனை.
சாதனைக்கு என்று ஒரு ஒழுங்கு இருக்கிறது, அதன்படி எமது அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்) கட்டியமைக்கப்படும் போது நாம் அந்த பரம்பொருளின் பேரோளியை ஏற்றுக்கொள்ளும் பண்பும், ஆற்றலும், வலுவும் உள்ளவர்களாக இருப்போம்.
இந்தப்பரம்பொருளின் பேரோளி எம்மில் சேரத்தொடங்க நாம் முதலில் எமது மனதின் பிடியிலிருந்து வெளிவருவோம். பிறகு புத்தி தெய்வ உருமாற்றம் பேறுவதால் சித்த விருத்தியின் பிடியிலிருந்து வெளிவருவோம். இந்த இரண்டும் சரியாக நடைபெறும்போது எமது பிராண சக்தி இழப்புக் குறைந்து விடுவதால் உடல் அதிக உயிர்ப்புடன் நோய்கள் குணமாகும்.
இப்படி நடைபெறுவதற்கு ஒவ்வொருவருடைய அந்தக்கரணத்தின் அமைப்புக்கு ஏற்றவகையில் சாதனையின் காலம் வேறுபடும். பலரும் அதிக ஜெபத்தின் மூலம் துரிதமாக தமது அந்தக்கரணங்களை மீளமைத்துக்கொள்ள முடியும், பிரச்சனைகளில் இருந்து மீண்டு விட முடியும் என்று நம்புகிறார்கள். இது முழுமையான உண்மை அல்ல!
எமது மனம்-புத்தி-சித்தம் உடனடியாக சாதனையினை ஏற்றுக்கொள்ளாது; அதிக சந்தேகங்கள், குழப்பங்கள், அதிஆவல், அதிஆசை, பயங்கள், உணர்ச்சிகளும் சாதனயுடன் போராடத்தொடங்கும். இந்தப்போராட்டத்தில் வெற்றிபெற சீரான நீண்டகால தினசரி சாதனை அவசியம்! இப்படி நீண்டகால தினசரி சாதனையினூடாக எம்மை நிலை நிறுத்திக்கொண்டு குறித்தளவு ஜெப எண்ணிக்கையையும் பூர்த்தி செய்யும் போது எமது வாழ்கைப் பிரச்சனைகளுக்கு சாதனை தீர்வினைத் தரும்.
இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை!
இனி அந்தக்கரணங்களை சமப்படுத்தினால் எமது 90% பிரச்சனை தீர்ந்தாலும் எமக்கு வெளிச்சூழல் சில பாதிப்புக்களைத் தரும், இவற்றுள் முக்கியமானவை நவக்கிரக தோஷங்கள் எனப்படுபவை. கிரங்கள் எமக்கு எந்தப்பலனையும் தாமாகத் தருவதில்லை; நாம் செய்த கர்மத்தை கணக்கு வைத்துக்கொண்டு அதற்குரிய பலனைச் சரியாகச் செய்யும் பணியைத்தான் அவை செய்கிறது.
காயத்ரி உபாசனையில் நவக்கிரகங்கள் நவக்கிரகங்கள் எட்டாவது ஆவரணத்திலிருப்பவை! காயத்ரியின் சவிதாவின் பேரோளி மத்தியில் இருக்க நவக்கிரகங்கள் எட்டாவது ஆவரண சக்தியாக இருக்கிறது.
ஆகவே ஒரு சாதகன் காயத்ரி மந்த்ரித்தை முதலில் சாதகம் செய்து பின்னரே ஆவரண தேவதைகளுக்கு வரவேண்டும். எனவே நவக்கிரக காயத்ரி சாதனை என்பது ஒரு சாதகன் குறித்தளவு குரு அகத்திய காயத்ரி சாதனையின் பின்னர் கிரக பிரபாவங்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் நவக்கிரக சாதனை செய்யலாம்!
ஆனால் ஜனாதிபதியின் ஆணையைப் பெற்ற ஒருவன் கிராம அலுவலகரின் உதவியை உடனடியாகப் பெறுவதைப் போன்றதே இது!

ஆகவே சிரத்தையாக காயத்ரி சாதனையில் கவனம் வையுங்கள்! அதன் பிறகு நவக்கிரக சாதனை தேவையா இல்லையா என்பது பற்றி வழிகாட்டல் கிடைக்கும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...