குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 24, 2020

மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 06

மனதின் இயல்பு விருத்திகள் என்று என்று முன்னைய பதிவில் பார்த்தோம். மனம் தொடர்ச்சியாக எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கும். இப்படி உருவாக்கிக் கொண்டு இருக்கும் எண்ணங்கள் ஒருவனை சூழச் சூழ அவன் அதற்குள் அகப்பட்டுக் கொள்கிறான். 

மகாபாரதத்தின் அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும் போது நாரதரின் உபதேசப் பிரகாரம் சக்கர வியூகத்திற்குள் செல்வதற்கு மட்டும் கேட்டுக் கொண்டதால் வெளியே வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டு இறப்பதைப் படிக்கிறோம். இதே போல் எல்லோருக்கும் எண்ணங்களை விருத்திகளாக - அலைகளாக எழுப்பி கற்பனை மாத்திரமே காணும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படி தாம் படைத்த எண்ணச் சுழல்களான கற்பனை ஆற்றலில் சிக்கிக் கொண்டு மீண்டு வரத் தெரியாமல் மாட்டிக் கொண்ட அபிமன்யுக்களே அனேகர். 

மனம் எண்ணத்தை உருவாக்கி கற்பனை காணும் ஆற்றலை விகல்பம் என்று யோக மொழியில் கூறுவர். இந்த விகல்ப ஆற்றலே மனதின் ஆராய்ந்து அறிவினை உருவாக்கும் ஆற்றல்; ஆனால் அளவிற்கு மிஞ்சிச் செல்லும் போது அதுவே மனிதனை ஒரு சக்கர வியூகமாக சிக்க வைத்து விடும். இதிலிருந்து மீள அவன் மனதின் மற்றைய ஆற்றலான சங்கல்ப சக்தியைப் பயன்படுத்த வேண்டும். சங்கல்ப சக்தி என்பது விகல்பத்திற்கு எதிரானது. மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றல். 

மனமானது எதிர் எதிரான இரண்டு ஆற்றல்களை தன்னிடம் வைத்திருக்கிறது. எப்படி அதிக விகல்பம் கூடாதோ அதே போல் அதிக சங்கல்ப சக்தியுடன் செயற்பட்டாலும் அது நன்மையைத் தராது. 

ஒரு விஷயத்தை ஆழமாக அவதானிக்க, செய்ய நீண்ட சங்கல்ப சக்தி தேவை. இப்படி நீண்ட நேரம் ஒரே எண்ணத்தில் இயங்கினாலும் மனம் சோர்வடைந்து விடும். ஆனால் இப்படி இயங்கும் போது அந்த மனம் பலமுடையதாக இருக்கும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போன்றது சங்கல்ப சக்தியுடைய மனம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...