குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, May 05, 2020

தலைப்பு இல்லை

புத்தக அட்டைப்படச் சவாலில் ஆறாவது நாள், 

தேவியும் குருவும் (The Goddess and the Guru: A Spiritual Biography of Sri Amritananda Natha Saraswati) 

இந்த நூல் எனது குருநாதரின் வாழ்க்கை வரலாறு! 

இந்திய அணுத் திட்டத்தின் தந்தை எனக் கூறப்பட்டும் ஹோமி பாபாவினால் உருவாக்கப்பட்ட Tata Institute of Fundamental Research ஆய்வுமையத்தின் ஆரம்பகால அணுவிஞ்ஞானி (Nuclear scientist) எப்படி தனது அக அனுபவத்தின் பின்னர் ஒரு தேவி உபாசகர் ஆனார் என்ற வாழ்க்கை வரலாறு! 

ஒரு தடவை என்னை வந்து சந்தியுங்கள் என்று 1000 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து கொண்டு எனக்கு மின்னஞ்சலில் செய்தி அனுப்பினார், வேலை செய்யும் கம்பனி லீவு தரமாட்டோம் என்று கூற வேலையை ராஜினாமா செய்து விட்டு அவரைச் சந்திக்கச் சென்றது தான் எனது முதல் இந்தியப் பயணம்! 

குரு நாதரின் பௌதீகவியல் பேராசிரியர் (Physics Professor) குண்டலினி யோகம் புரிந்த ஞானானந்தர் என்ற சாது! 

சித்தர் இலக்கியத்தில் இருக்கும் ஸ்ரீ வித்யா குண்டலினி யோக நுணுக்கங்களைப் பற்றி ஆராயுங்கள், தேவி உள்ளிருந்து வழிகாட்டுவாள் என்று அவர் கூறிய ஆசி எனது முதல் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் வெளிவரக்காரணமாகியது. 

எனது நூலிற்குத் தான் அவர் தனது ஸ்தூல உடலை விடுவதற்கு முன்னர் கடைசியாக எழுதிய ஆசிச் செய்தி!

ஜாதி, மதம், ஆண், பெண் என்று எவருக்கும் ஸ்ரீ வித்யா உபதேசம் தேவி உபாசனை செய்யத் தகுதியானவர்கள் என்ற கொள்கை உடைவர்கள்; எவர் கேட்டாலும் உபதேசம் அளித்த பெருந்தகை! பல பாரம்பரிய குருமார்களிலிருந்து மாறுபட்டவர்! 

கட்டாயம் படித்துப்பாருங்கள்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...