குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 17, 2020

அண்டவெளி தந்த COVID-19

அண்ட உயிரியலில் (Astro-biology) ஒரு கருதுகோள் (Hypothesis) இருக்கிறது, இதை Panspermia என்று கூறுவார்கள். Pan என்றால் "எல்லாம்" Spermia என்றால் விதை என்று கிரேக்க மொழியில் பொருள். இந்த பிரபஞ்சத்தின் அனைத்து மூலைகளுக்கும் அண்டத்துகள்கள் மூலம் உயிரினத்தின் கூறுகள் (மூலங்கள்/விதைகள்) கடத்தப்படுகிறது என்பதுதான் அது! 
இந்தக் கருதுகோளை சந்திரா விக்கிரமசிங்க என்ற இலங்கை விஞ்ஞானி Fred Hoyle விஞ்ஞானியுடன் 1974 இல் முன்வைத்தனர்!
அண்டவெளியில் பரவும் இந்தத் துணிக்கைகள் விண்கற்களின் மூலம் பூமிக்கு வருவதாகவும் பூமியின் கொள்ளை நோய்கள் இத்தகைய விண்கற்கள் விழுந்த பின்னர் உருவாகுவதாகவும் ஆராய்ந்து அனேக நூல்களை எழுதியிருக்கிறார். 
COVID-19 என்பது 11 October 2019 அன்று சீனாவின் Jilin Province இல் உள்ள Sonjyan City இல் விழுந்த விண்கல்லில் வந்த உயிர்கொல்லி வைரசு என்று கூறுகிறார். இந்த விண்கல் வான மண்டலத்தில் பரவியதால் ஏற்பட்ட வைரசு நச்சுத்தான் உலகெங்கும் இவ்வளவு துரிதமாக இது பரவ காரணம் என்கிறார். இந்த விண்கல்லின் தாக்கம் நிறைந்த நகரங்களே அதிக மரணத்தைச் சந்தித்தது என்கிறார். 
Panspermia என்பது சோக்கிரடீஸுக்கு முன்னைய அநக்ஸகோரஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி (கி.மு 05) அண்டவெளியில் இருந்துதான் உயிர்களுக்கான மூலம் பூமியையும், அண்டத்தின் மற்றைய பகுதிகளையும் வந்தடைகிறது என்று கூறிய கருதுகோள் விக்கிரமசிங்கவும் அவருடைய ஆய்வு மேற்பார்வையாளராலும் 1972 இல் விண்கற்களில் காணப்பட்ட சேதனப்பதார்த்தங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. 
புராணங்கள் இத்தகைய நூற்றுக்கணக்கான அண்டங்கள், அவற்றிலுள்ள மனிதர்களை விட மேம்பட்ட தேவர்களின் பூமியின் வருகை பற்றிக்குறிப்பிடுகிறது. 
நவீன Panspermia நுண்ணியிரிகளையும், வைரசுகளையும் பற்றி ஆராய்கிறது. ஆனால் புராணங்கள் அனேக higher intelligence உயிரினங்களைப் பற்றிப் பேசுகிறது. 
ஆகவே எல்லாவற்றையும் ஏளனமாகவும், கேலியாகவும் அறிவிலிகள் பார்த்துக்கொண்டிருக்க, உண்மை அறிவியல் பயின்றவர்கள் பழைய கதைகளில் சாத்தியங்கள் இருக்கலாம் என்று அறிவைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...