குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 01, 2020

சாதனையின் ஒழுங்கு முறையின் பயன் என்ன?

சாதகர்களின் கேள்விகள்;

எனக்கு காயத்ரி மந்திரம் மாத்திரம் பிடித்திருக்கிறது, நீங்கள் கூறும் ஒழுங்கில் இல்லாமல் தனியே காயத்ரி மந்திரம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன்? பலன் கிடைக்குமா? அல்லது நீங்கள் கூறிய சித்த வித்யா குருமண்டல நாமாவளி, அகத்திய மூல குரு மந்திரம், ஜெப சங்கல்பம், காயத்ரி மந்த்ர ஜெபம், சித்த சாதனை, துதி என்ற இந்த ஒழுங்கை கட்டாயம் பின்பற்றவேண்டுமா?

எமது பதில்;
உங்கள் சித்தம் (ஆழ்மனம்) தூய்மையாக இருந்தால் உடனடியாக நிச்சயம் பலன் தரும்! ஆனால் இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை!
ஆகவே அனைவருக்கும் பயன் தரும் வகையில் சாதனை கட்டமைக்கப்பட வேண்டும்.
நாம் எமது தாழ் இயல்புகளில் இருந்து வெளியேறி உயர் தெய்வ குணங்களுக்கு செல்ல அதை அடைந்தவர்களுடைய உதவியும், பயணப்பாதையும் அவசியம். இதற்கு நாம் குருமண்டலத்துடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இதனால் சித்த வித்யா குருமண்டல் நாமாவளி சாதனை ஒழுங்கில் முதலாவதாக இணைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள அனைத்து குருமார்களும் ஒளி நிலை அடைந்த உயர் தெய்வ சக்திகள்! இது ஒரு மண்டலமாக பேரொளி நிலையில் வழிகாட்டும் சக்திகள்!
நீங்கள் சாதனை புரியும் குருபரம்பரையின் மூல குரு அகத்திய மாமகரிஷி! குருதேவர் அனைவரையும் உயர் நிலை அடைவிக்க ஆவல் கொண்ட தேவி ஸ்வரூபம் (அகஸ்தியமயி) அடைந்த தேவியின் ஆற்றல். ஆகவே அவரை மூலகுரு மந்திரத்தின் மூலம் தொடர்பு கொள்வது எமது பயணத்தின் இறுதி இலக்கில் இருந்து மாறாமல் இருக்க உதவி செய்யும்.
இவற்றை முடித்த பின்னர் அடுத்து வரும் சாதனையின் அங்கம் அந்தக்கரணங்களை சுத்தி செய்பவை.
எந்த ஒரு செயலும் நடைபெற ஒரு மையம் (center) அவசியம். அந்தக்கரணத்தில் அதை ஆங்காரம் என்று சொல்லுவோம். இந்த ஆங்காரத்தை கட்டமைத்தால்தால் மனம் இயங்கும். ஆகவே நாம் செய்யும் சாதனைக்கு ஏற்ற ஆங்காரம் கட்டமைக்கப்படுவதற்கு சங்கல்பம் அவசியம்.
அதன்பிறகு மனமும், புத்தியும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சலனிக்கும் மனம் ஒழுகாக்க காயத்ரி மந்திர ஜெபம் செய்விக்கிறோம். தொடர்ச்சியான ஜெபம் மனதை ஒழுங்கு படுத்தும். அந்த ஜெபம் உருவாக்கும் ஒளி புத்தியைத் தூண்டி பரம்பொருளுடன் இணைக்கும்.
அடுத்த அந்தக்கரணத்தின் பாகம் சித்தம் கடைசியாக இருக்கும் சாதனையின் அங்கமான சித்த சாதனை இதை ஒழுங்குபடுத்தும்.
ஆக சாதனையின் முழு அங்கங்களையும் தரப்பட்ட ஒழுங்கு முறையில் செய்ய அந்தக்கரணங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு தெய்வ உருமாற்றம் நிகழும்.
இறுதியாக எமது வாழ்விற்கு தேவையான 16 செல்வங்களையும் துதியாக செய்து சாதனையைப் பூர்த்தி செய்கிறோம்.
ஆகவே அன்பரே இந்த சாதனையின் ஒழுங்கு ஆழமான யோக நுணுக்கத்தை அடைப்படையாகக் கொண்டது. ஆகவே உங்கள் மனப்போன போக்கில் சாதனை செய்யாமல் உபதேசிக்கப்பட்ட ஒழுங்கில் சாதனையைச் செய்து வாருங்கள்.
துரித பலனும் முன்னேற்றமும் காண்பீர்கள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...