குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 23, 2020

மனதின் தன்மை பற்றிய யோக அறிவியல் - 05

கர்ம விதியின் இயக்கம் மனதின் இயக்கத்துடன் தொடர்புடையது. நாம் செய்த கர்மங்களின் ஞாபகங்கள் பதிவுகள் சித்தம் என்ற ஆழ்மனத்தில் பதிவாக அழியாமல் எப்போதும் இருக்கின்றது. 

இந்தப்பதிவுகளின் அடிப்படையிலேயே நாம் எமது அகவுலகத்தை அமைத்துக் கொள்கிறோம். இந்தப் பதிவுகள் எம்மை மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். எமது பழக்கவழக்கங்கள் என்பது சித்தத்தில் பதிவுற்ற ஆழமான பதிவினை நாம் மீண்டும் மீண்டும் எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் செய்து கொண்டிருக்கும் நிலை! இதனாலேயே பலர் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். 

உள்ளொளியை உணராத மனம் இந்த ஆழமான சித்தப் பதிவுகளில் சிக்கிக் கொண்டு அடிமையாக வாழ்ந்து வருவதில் சந்தோஷம் கொள்ளும். 

ஒரு எண்ணம் தோன்றி அது எம்மைச் செயலில் தள்ளுக்கிறது; முடிவுற்ற செயல் பதிவாக சித்தத்தில் பதிகிறது, இதை யோக மொழியில் சம்ஸ்காரம் என்போம். அடுத்த முறை இந்தப் பதிவு எம்மை குறித்த செயலில் தள்ளும்! 

இதை உதாரணம் மூலம் விளக்குவதானால் சாராயம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவனை அவனது நண்பன் வலிந்து குடி என்று எண்ணத்தைப் புகுத்துகிறான். அதை ஏற்றுக் குடித்தவன் மனதில் இப்போது அது நல்லது என்ற சம்ஸ்காரம் ஆழமாகப் பதிந்தால் அடுத்த முறை நண்பன் அழைக்காமல் தானே சென்று ஊத்திக் கொள்வான்! 

இப்படி எண்ணம் தோன்றுதல், பின்னர் ஆழமாகப் பதிதல், அந்த ஆழமாகப் பதிந்த பதிவு மீண்டும் எமது மனத்தைத் தூண்டி செயலில் ஈடுபடுத்தல், அது இன்னும் ஆழமாக பதிவினை ஏற்படுத்தல், மீண்டும் எண்ணம் தோன்றுதல் என்று வட்டமாகச் சென்று கொண்டிருப்பதை யோக மொழியில் வ்ருத்தி சம்ஸ்கார சக்ரம் என்பார்கள். 

இந்த வ்ருத்தி சமஸ்கார சக்கரமே கர்மவிதியின் அடிப்படைக் கோட்பாடும் ஆகும். 

இதை தடைப்படுத்தி செயல் முறையாக உள் நோக்கிச் சென்று உள்ளொளியை அடைவதையே யோக மார்க்கமும், தெய்வ உபாசனை மார்க்கங்களும் கூறுகின்றன.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...