குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 10, 2011

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 01


பகுதி -01

ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

கோரக்க நாதர் விபூதியிலிருந்து பிறந்தவர் என்பது அவரது வரலாறு, அதாவது சாதாரண காமத்துடன் கூடிய ஆண் பெண் சேர்க்கையில்லாமல் ஞானத்தில் (தாந்திரீக முறையில் காமத்தை வென்று ஞானம் பெறும் முறைகள் உண்டு) பிறந்தவர் என்பதே உண்மை விளக்கமாகும். விபூதியிற்கு ஞானம் என்றும் அர்த்தம் உண்டு.

தமிழ் சித்தர்கள் வரிசையில் கோரக்கர் எனவும், வட நாட்டு நாத சம்பிரதாயத்தில் கோரக்க நாதர் என நாத சம்பிரதாய தலைவராகவும் கருதப்படுகிறார். இவர் பௌத்த தாந்திரீகத்திலும் முக்கியமான குரு ஆவார். மந்திர சாஸ்திரம், ஹட யோகம், தாந்திரீகம், இரசவாதம், காயகல்பம் என்பவற்றில் பெரும் சித்தர்.

அவர் வட மொழியில் அருளிய நூல் "கோரக்க போதம்" என்பதாகும். இது கோரக்க நாதரிற்கும் அவரது குருவான மச்சேந்திர நாதரிற்குமிடையிலான சம்பாஷணை வடிவில் உள்ள ஒரு அரிய குண்டலினி யோக, தாந்திரீக ஞான நூலாகும்.  இந்த பதிவில் இதன் மொழி பெயர்ப்பை மாத்திரம் பதிவிடுகிறோம். இன்று கோரக்க நாதரது ஜயந்தி தினமாகும், இவர் எமது குருபரம்பரையின் ஆதிகுருக்களில் ஒருவர் என்பதனால் அவரது ஆசிகள் அனைவருக்கு கிடைக்க வேண்டி பிரார்த்தித்து பதிவிடுகிறோம்.

முக்கிய குறிப்பு: இந்த பதிவு வெறும் மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.

இனி 

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை

  1. கோரக்கர்: குரு நாதா! எனக்கு சற்குருவானவரே, சீடரான நான் எனது சந்தேகம் தெளிய கேள்வி கேட்கலாமா? அதற்கு நீங்கள் தயை கூர்ந்து பதிலளிப்பீர்களா? இந்த சம்பாஷணையினை ஆரம்பிப்பதற்காக கேட்கிறேன்! ஒரு உண்மையான ஆன்ம சாதனையினை விரும்பும் மாணவனின் இலக்கணம் என்ன?
  2. மச்சேந்திர நாதர்: பற்றுக்கள் அனைத்தையும் துறந்து அவதூத நிலையினை அடைய எண்ணும் மாணவன் வீதியோரங்களிலோ, காட்டிலோ, மரத்தடியிலோ, வாழுவது பற்றி எந்தவித விருப்பு வெறுப்பையும் கொள்ளலாகாது.  அவன் முதலாவதாக தன் மனதில் பற்று, வன்மம், பேராசை, மூட நம்பிக்கை, காம, குரோத, மத, மாச்சரியங்களை ஆகிய அறியாமைகளான மாயையினை நீக்க பயிற்சிக்க வேண்டும்.   அவன் அனந்தமான பரம்பொருளை எப்போதும் பாவிக்கவேண்டும். சிறிதளவு பசிக்காக உண்ணவேண்டும். சிறிதளவு தூக்கம் வேண்டும், இதுவே ஆன்ம வித்தை அறியவேண்டிய மாணவன் முதலாவதாக செய்ய வேண்டியது.
  3. கோரக்கர்: அவன் எதனை பார்க்க வேண்டும்? எதனை பாவிக்க வேண்டும்? எதனை சாரமாக அறிந்து கொள்ள வேண்டும்? எப்போது அவன் தலையை மழித்துகொள்ள வேண்டும்? பிறவிப் பெருங்க்கடலினை எதனைக் கொண்டு கடக்க வேண்டும்?
  4. மச்சேந்திர நாதர்: அவன் தன்னை அறிய வேண்டும், எல்லையற்ற பரம்பொருளை பாவிக்க வேண்டும், அந்த பரம்பொருளே உண்மையின் சாரம் என்பதனை அறிய வேண்டும், சத்குருவிடமிருந்து தீட்சை உபதேசம் பெற்றபின்பு ஆணவத்தினை துறந்து விட்டதற்கு அடையாளமாக தலை முடியினை மழித்துக்கொள்ளவேண்டும்.  பிரம்ம ஞானத்தின் உதவி கொண்டு பிறவிப்பெருங்க்கடலினைக் கடக்க வேண்டும்.
  5. கோரக்கர்: குருதேவா எமது குருபரம்பரையின் உபதேசம் என்ன? சூன்யம் எனும் நிலை எங்குள்ளது? சப்தம் எனும் ஒலியின் குரு யார்?
  6. மச்சேந்திர நாதர்: எல்லையற்றது எதுவோ அதுவே குருவின் உபதேசமாகும், சூன்யம் எமக்குள்ளேயுள்ள நிலையாகும், உணர்ந்தறிந்து வெளிப்படும் சொற்கள் வார்த்தைகளின் குருவாகும் (அதாவது அனுபவித்து மற்றவருக்கு சொல்லும் வார்த்தையே குரு உபதேசமாகும்.)
  7. கோரக்கர்: மனதின் உருவம் என்ன? பிராணசக்தியின் இருப்பு என்ன? தச பிராணங்களின் திசைகள் தான் என்ன? எந்த கதவு இந்த தசபிராணங்களையும் கட்டுப்படுத்தும்?
  8. மச்சேந்திர நாதர்: சூன்யம்தான் மனதின் இருப்பு, பிராணசக்தியின் இருப்பு கண்ணுக்கு தெரியாதது, தச பிராணங்களது திசை கூறமுடியாதது, பத்தாவது துவாரம் இவையனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.
  9. கோரக்கர்: இருப்புக்கு எது மூலம்? எது கிளை? யார் குரு? யார் சீடன்? எந்த நிலையில் ஒருவன் தன்னிலையான சுயத்துடன் செல்ல முடியும்?
  10. மச்சேந்திர நாதர்: மனமே அனைத்திற்கும் மூலம், பிராணனே அனைத்து செயல்களின் கிளையாகும், சப்தமாகிய (மந்திர) ஒலியே குருவாகும், சிரத்தையுடையவன் சீடனாகும். ஆன்ம விடுதலை அடைந்தவன் தன்னிலையான சுயத்துடன் தனியாக செல்ல முடியும்.
அடுத்த பதிவில் தொடரும்...


4 comments:

  1. அற்புதமான விஷயங்களை அழகாக, எளிமையாக கூறி இருக்கிறார்கள். குருவருள் கூடிவந்து அனைவரும் ஞானம் பெற வேண்டுகிறேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    தங்களின் பதிவுகளனைத்தும் மிகவும் மேன்மையாக உள்ளன. இவைகளை தறவிறக்கவோ அல்லது எமக்காக சேமிக்க விழைகின்றேன். வாய்ப்புகளிருப்பின் ஞானும் பயன்பெற உதவவும்.
    மிக்க நன்றியுடன்
    ஆதிமூலம்

    ReplyDelete
  3. நிச்சயமாக உண்டு ஐயா! பலமுறை PDF widgets இணைத்துப் பார்த்தேன், தமிழ் Fonts இற்கு பொருத்தமானது கிடைக்கவில்லை! பதிவின் முடிவில்தொகுத்து அனைவரும் தரவிறக்குமாறு இணைக்கிறேன்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.
    ஆதி

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...