குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 25, 2021

காயத்ரி சித்தரின் வழிகாட்டலில் - 11

முற்பகுதிகள்
பகுதி - 10



சாமி காலையில் எழுந்தவுடன் தேனீர் கொடுத்துவிட்டு தண்ணீர் சுடவைக்க ஹீட்டரை குளியல் அறையில் போட்டு தேனீர் குடிக்கும் வரை ஏதாவது சிறு உரையாடல் நடக்கும். பொதுவாக அன்றைய நிகழ்வு, ஆசிரம முரண்பாடுகள் ஏதும் இருந்தால் அதுபற்றியதாக இருக்கும். இல்லை என்றால் சாமி அமைதியாக தேனீர் குடிக்கும் போது ஏதாவது சாதனை பற்றிய கேள்விகளைக் கேட்டால் அதற்கு பதில் அமைதியாகச் சொல்லுவார். அதன் பிறகு சாமி எழுந்து குளிக்கச் செல்ல, நான் தேனிர் கோப்பையை எடுத்துக்கொண்டு கதவை மூடிவிட்டு வந்து விடுவேன். சாமி குளித்த பின்னர் தியனத்திற்கு அமர்வார். தியானம் முடிவதற்குள் நான் குளித்து தயாராகி காத்திருப்பேன். 

வெளியே வந்து அன்றை தோட்ட வேலையாட்களுக்குரிய உணவு, வேலை ஆகியவற்றை திட்டமிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு கோயிலிற்கு போய் கணபதி, ம்ருத்யுஞ்ஜெய தேவன், முருகன், காயத்ரி, அகத்தியர், இராமர், மகாவிஷ்ணு, விஸ்வாமித்திரர், ராதா கிருஷ்ணர் என்று எல்லோரையும் வணங்கி விட்டும், காளி, வெங்கடாஜலபதி சன்னதிக்குச் சென்று விட்டு ஆசிரமத்திற்கு வந்து உணவருந்துவார். உணவருந்தும் போது எமக்கு உணவு போட்டுத்தந்து விட்டு எம்மைச் சாப்பிட உட்காரவைத்துவிட்டுத்தான் தான் அருந்துவார். பொதுவாக ஆசிரமம், ஆன்மீகம் என்றால் உபவாசம் என்று எண்ணுபவர்களுக்கு சாமியிடம் சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும்! மூன்று நேரமும் வயிறாற சாப்பிட வைப்பார். 

உணவு முடிந்தவுடன் கதிரையில் வந்து அமர்ந்தால் உரையாடல் தொடங்கும். இப்படி ஒரு நாள்; சரியாக சாமி சமாதியாகுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் இப்படி காலை உணவு உண்டபின்னர் அமருந்திருக்கும் போது, சாமி தனக்கே உரிய சிரிப்புடன் "தம்பி, குரு நாதர் விசா கொடுத்துவிட்டார் அப்பா! எல்லா  வேலையும் கெதியா (விரைவாக) முடிக்க வேண்டும் அப்பா" என்றார்.  நான் பதட்டத்துடன் "என்ன சாமி?" என்றேன். 

அதற்கு சுவாமி "இன்று தியானத்தில் குரு நாதர் மூன்று விரல்களைக் காட்டி காலம் முடிந்துவிட்டு தயாராகு என்று சொன்னார் அப்பா" என்று தனது மூன்று விரல்களைக் காட்டி குறும்புச் சிரிப்போடு சொன்னார். 

அதன் அர்த்தம் என்ன சாமி என்றேன்? 

போக வேண்டிய நேரம் வந்தாயிற்று என்றார். 

அப்படியென்றால் மூன்று விரல் காட்டியதன் அர்த்தம் என்ன சாமி என்றேன்.

தெரியவில்லை அப்பா, மூன்று நாளோ, மூன்று மாதமோ, மூன்று வருடமாகவோ இருக்கலாம் என்றார்! 

அப்படிச் சொன்னவுடன் எனக்கு கண்கள் பனித்து அழுகை வந்து விட்டது. எனக்கு பேச்சு நின்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்றவுடன் சாமி ஆறுதலாக "வந்த வேலை முடிந்தால் செல்லவேண்டியதுதானே அப்பா, இந்த உடலில் என்ன பற்று?" என்றார். 

இல்லை, சாமி, உங்களின் ஆயுள் 77 என்று கண்ணைய யோகியார் கணித்திருக்கிறார். நீங்கள் சொல்லும் கணக்குப் படி பார்த்தால் அது பிழையாகிறதே என்றேன். 

தெரியவில்லை அப்பா! குரு நாதருக்கே வெளிச்சம் என்று அந்தப் பேச்சினை முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு பேச்சிற்கு சென்று விட்டார். 

இதற்குப் பிறகு துரிதமாக பல வேலைகள் தந்தார்; பதிப்புக்கு வராத பல யோக நூற்கள் பதிப்பித்தோம். சாதனை செய்யச் சொன்னார். 

இதே போல் இன்னுமொரு நாள் அமைதியாக அமர்ந்திருக்கும் போது கடல் கடந்த தேசத்தில் தான் எனது உயிர் பிரியும்" என்று அமைதியாகச் சொன்னார். 

சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு, சென்னையில் அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...