குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 13, 2021

இரண்டு வேளை உணவு

இன்று காலையில் அம்மா செய்தியைப் பார்த்துவிட்டு "அமைச்சர் இரண்டு வேளை சாப்பிடப் பழகச் சொல்லுகிறார், நீ ஏற்கனவே இப்படித்தானே சாப்பிடுகிறாய்" என்றார். 

சிலகாலத்திற்கு முன்னரே யோக ஸாதனைக்காக காலையும், மாலையும் இரண்டு வேளை உணவு மிதாகாரமாக உண்பது என்று முடிவெடுத்து பின்பற்றிக்கொண்டு இருப்பது உடலுக்கும், மனத்திற்கும் ஆனந்தமாக இருப்பதால் "அமைச்சர், நல்ல விஷயத்தைத் தானே சொல்லுகிறார்; வீட்டிற்குள் முடங்கி உடலுழைப்பு இல்லை என்றால் அதிகமாக உண்டால் வியாதிதானே" என்று ஆமோதித்தேன். 

இப்படி ஒரு நிலை வந்தால் நான் ஏற்கனவே தயார் என்று எனது தீர்க்க தரிசன ஆற்றலையும் உள்ளுக்குள் மெச்சிக்கொண்டேன்! 

எப்படியிருந்தாலும் மனிதன் வாழ்வதற்கு அரைவயிறு உணவும், கால்வயிறு நீரும், கால்வயிறு வெற்றுவயிறாக இருக்க உணவு உண்ணப் பழகினால் இதை ஆரோக்கியமான மிதாகாரம் என்று சித்தர்கள் சொல்லுகிறார்கள். இப்படிச் சாப்பிட்ட அப்புவும், ஆச்சியும் தொண்ணூறு, நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். 

வீணாக பதட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு எமது ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் கிடைப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வாக வாழப்பழகுவோம்! 

என்னைப் பொறுத்தவரையில் கொரோனா என்பது ஆணவம் பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டும் ஒரு ஞான அஸ்திரம். வெற்றி மமதையிலிருந்தவர்களின் மமதை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்கிருமியிடம் தோற்றுப்போகிறது. 

இயற்கையின் விதியில் உச்சத்திற்கு செல்லும் எதுவும் மீண்டும் விழ வேண்டும் என்பது நியதி! இதை தாவோ வெற்றியின் அபாயம் என்று சொல்லும்! எவரையும் வெற்றி கொண்டு விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டால் அடுத்து தோல்வியை நோக்கி விழுகிறோம் என்பது மறைமுக அர்த்தம்! ஆகவே மமதை இல்லாமல் ஒத்திசைவுடன், ஒற்றுமையுடன் வாழ்வதே இன்பத்திற்கு வழி! 

அதுபோல் இதுவும் கடந்து போகும் என்பது இன்னொரு தத்துவம்! இப்போது உள்ள நிலையில் இந்த தத்துவங்கள் தானே எமக்கு அருமருந்து!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...