குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, September 21, 2021

தலைப்பு இல்லை

 Velu Varadhan புருஸ் லீயின் இந்தக் கருத்தினை,

“You must be shapeless, formless, like water. When you pour water in a cup, it becomes the cup. When you pour water in a bottle, it becomes the bottle. When you pour water in a teapot, it becomes the teapot. Water can drip and it can crash. Become like water my friend.”

இன்னும் எளிமையாக விளக்கச் சொல்லிக் கேட்டிருந்தார். 

இங்கு கூறப்பட்டிருப்பதை எளிமையாக விளக்குவதாக இருந்தால் பொதுவாக நாம் உடல் ஆரோக்கியம், உடல் பலம் என்பவற்றை நேரடியாக உடலின் தசைகளை வலுப்படுத்துதல் என்று ஆசனங்களாகவோ, உடல் பயிற்சிகளாகவோ ஆரம்பிக்கிறோம். 

இப்படி ஆரம்பிக்கப்படும் பயிற்சிகளால் உடலின் தசைகள் அழகாகும், வனப்பாகும், ஓரளவிற்கு வலிமை பெறும். 

ஆனால் புருஸ்லீயின் ஆராய்ச்சி மனித உடலிற்கு அதியுச்ச ஆற்றலை எப்படிக் கொண்டுவருவது என்பதைப் பற்றியதாக இருந்தது. குறிப்பாக ஆற்றல்களை முஷ்டிக்கு கொண்டுவருவது எப்படி என்பதே அவரது ஆராய்ச்சி; இதனால்தான் தனது பயிற்சி முறைக்கு Jeet Kune Do என பெயரிட்டார். இதன் அர்த்தம் Way of the Intercepting Fist. 

கைகளுக்கு, உடலிற்கு அதீத ஆற்றலைக் கொண்டுவர வேண்டும் என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்து வரும் பாதைகளில் இறுக்கம், தடைகள் இருக்கக் கூடாது. உடலிற்கு ஆற்றல் அதிகமாக வரவேண்டும் என்றால் மனம் தூய்மையாக, வெறுமையாக இருக்க வேண்டும். 

இதையே புருஸ்லீ மனதை வெறுமையாக்கி நீரைப்போல் பாய்ந்தோடச் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து பிறகு உடல் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இப்படிச் செய்யும் போது மனதின் முழுமையான ஆற்றலை உடலிற்கு கொண்டு வரமுடியும் என்று நம்பினார். 

கோபம், பொறாமை, எரிச்சல், குழப்பம், கவலை இவை எல்லாம் மனம் திரவமாக ஓடுவதற்கு எதிரான இறுக்க நிலைகள். இந்த உணர்ச்சிகளை மனதிலிருந்து நீக்குவதன் மூலம் மனதை நாம் நீர்போன்று ஓடச்செய்ய முடியும். அதியாற்றல் உள்ளதாக்க முடியும். இப்படி செம்மைபடுத்தப்பட்ட மனதுடன் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உடல் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...