குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, September 08, 2021

தலைப்பு இல்லை

கொரோனாவில் உலகம் ஆடிக்கொண்டிருக்க அமேசன் நிறுவனர் Jeff Bezos தனது வாழ்நாளை நீட்டிக்க வழி தேடுகிறாராம்! 

https://interestingengineering.com/jeff-bezos-is-funding...

இதைத்தானே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னராக சித்தர்கள் உடலை காயம் ஆக்கி - காயம் என்றால் அக்கினி - கல்ப காலம் வரை இருத்த வேண்டும் என்று சொன்னார்கள். 

அம்ருதம் என்ற சொல்லை அ+ம்ருதம் என்று பிரிக்கலாம். ம்ருத என்றால் மரணம் என்று அர்த்தம். அம்ருத என்றால் மரணமற்ற என்று அர்த்தம். 

ம்ருத்யு என்றால் மரணம் என்று அர்த்தம் ம்ருத்யுஞ்ஜெய என்றால் மரணத்தை வெல்லுதல் என்று அர்த்தம். சிவ உபாசனையில் ம்ருத்யுஞ்ஜெய என்று அர்த்தம். 

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் நானிருந்த வீட்டு தாத்தாவிற்கு வயது 95; அவரது நீண்டகால ஆயுளிற்கு இரகசியம் என்னவென்றால் காலை நாலு மணிக்கு எழுந்து, தியானம் செய்து, பஞ்சாட்சரம் ஜெபித்து திருவாசகம் படித்து விட்டு, எழுந்து கோயிலிற்கு சென்று வணங்கி வருவார்; தினசரி மண்வெட்டி பிடித்து புல்லு செதுக்குவார். எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்! வாரம் இரண்டு மூன்று நாள் அவரின் பழங்காலத்து கதை கேட்பது வழக்கம்! அவன் பெரிய ஆளாக வருவான் என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுவாராம்! இறுதியாக 104 வயதில் சிவபதம் அடைந்தார். 

மற்றொருவர் எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியாரிடம் உபதேசம் பெற்ற யோகி, சுப்பிரமணியம் ஐயா அவர்கள். 94 வயதில் பூரண ஆரோக்கியத்துடன் திடமாக வாழ்ந்து வருகிறார். மது, மாமிச உணவு தவிர்த்தல், தினசரி தீர்க்க சுவாசமும், புருவமத்தி தியானமும் செய்து வருதலும் மாத்திரமே தனது ஆரோக்கியமும் நீண்ட ஆயுளினதும் இரகசியம் என்று கூறுகிறார். இவரை அண்மையில் எமது மாணவர் ஒருவர் சென்று புத்தகங்கள் கொடுத்து ஆசிபெற்று வந்தார். 

எம்மிடமும் தொலைபேசியில் "எமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உள்ளது, அது அனைவரையும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறது, அதனுடைய ஆசிகள்" என்று ஆசி கூறினார். 

அதேபோல் ஸ்ரீ கண்ணைய யோகியார் பல்லாண்டு காலம் வாழும் வழி என்று போதித்து அதன்படி 108 வருடங்கள் வாழ்ந்து காட்டினார். 

 ஹதயோக பிரதீபிகை மூச்சினை கும்பித்து, சித்த சலனமற்று, புருவமத்தியில் விழியினை செலுத்துவாரை காலன் தீண்டமாட்டான் என்று சொல்கிறது. 

ஆகவே Jeff Bezos இற்கு நம்முடைய பக்கமும் நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற நிறைய விஷயம் இருக்கிறது என்று ஒரு மின்னஞ்சல் எழுதலாம் என்று நினைக்கிறேன்! 

   


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...