குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, September 09, 2021

தலைப்பு இல்லை

இன்று யோகம் பழகுகிறோம் என்று பலரும் ஆசனம், பிராணாயமத்திற்குள் சென்று சிக்கிக்கொண்டு ஆன்ம முன்னேற்றம் பெறமுடியாமல் தவிப்பதையும், குழப்பமடைவதையும் காண்கிறோம். 

உயர்ந்த வேதாந்தம், சித்தாந்தம் பேசும் பலருக்கு சாதனை அனுபவம் இருப்பதில்லை. இதற்குக் காரணம் சாதகர்கள் தகுந்த இச்சா சக்தியும், பிராண பலமும் விழிப்படையாமையே!

இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் தனது தினக்குறிப்பில் எழுதிவைத்துள்ளதன் சாராம்சம் வருமாறு:

(யோக) சாதனையின் சரியான முறைக்கு எதிரான வழியிலேயே அனேகர் தமது சாதனையைத் தொடங்குகிறார்கள். ஆசனம், பிராணன், சித்தம், மனம், புத்தி இப்படி ஒவ்வொன்றாக சுத்தி செய்து சித்தி செய்து இறுதியாக புத்தி விழிப்பையும், இச்சா சக்தியை அடையலாம் என்று முயற்சிக்கிறார்கள். 

ஆனால் உண்மையான சாதனை இதன் மறுதலை வடிவானது; இச்சா சக்தியுடன் (will power) ஆரம்பிக்கப்பட வேண்டியது. ஒருவன் இச்சா சக்தியுடன் சாதனை ஆரம்பித்தால் ஆசனம், பிரணாயாமம், கும்பகம், சித்த சுத்தி, ஏற்பாடுகள், தயாரிப்புகள் நியமங்கள் இவை எதுவும் தேவையில்லை. 

இராமகிருஷ்ணர் யோகம் பயிலவேண்டும் என்று எவராவது கேட்டால் "முதலில் ஸக்தி உபாசனை செய்" என்பார், முதலில் ஸக்தியைப் பேறு பிறகு அவள் "சத்" - உண்மையினைக் காட்டுவாள் என்பார். 

ஒரு யோகியின் முதல் நிபந்தனை இச்சா சக்தியும், ஸக்தியும்.

இதற்குத் தேவையானது மூன்று நிபந்தனைகள்

முதல் நிபந்தனை உன்னை நீ நம்புவது

இரண்டாவது நிபந்தனை உனக்கு மேல் இறைவன் இருக்கிறான் என்பது, 

மூன்றாவது அனைத்தையும் ஸக்தி - காளி இயக்குகிறாள் என்பது. 

உன்னை நம்பி முதலில் உன்னில் இச்சாசக்தியை விழிப்படைய வைக்க வேண்டும்; பிறகு இறைவனை நம்பி ஞானத்தினை செயற்படுத்த வேண்டும்; பிறகு ஞானத்தைக் கொண்டு சித்தம், மனம் என்பவற்றை சுத்தி செய்து பிராணனையும் மனதையும் அமைதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் உடலை அம்ருதத்துவம் செய்ய வேண்டும். 

இதுவே உண்மையான யோகம்; இதுவே மஹாபந்தம், உண்மையான தாந்திரீகம்! வேதாந்தம் புத்தியிலிருந்து யோகத்தை ஆரம்பிக்கிறது! தாந்திரீகம் ஸக்தியிலிருந்து யோகத்தை ஆரம்பிக்கும்! 

Record of Yoga", pp. 1371-1397


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...