குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 04, 2021

ஒரு சாதகரின் மனம் சித்தம் கனவு பற்றிய அனுபவம்

யோக தத்துவத்தின் படி மனம், புத்தி, சித்தம் ஆங்காரம் ஆகிய நாலும் எப்படி செயற்பட்டும், புறச்சூழல் எப்படி சித்தத்தை தூண்டும் என்பதன் அனுபவ விளக்கம்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

****************************************************


வணக்கம் குரு‌..நம் உரையாடல் படி எனது நேற்றைய அனுபவத்தை அப்படியே பதிவு செய்துள்ளேன்.

-------------------------------------+

காயத்ரி சாதனையை தொடர்ந்து 4 வருடங்களாக  செய்து வரும் ஒரு தீவிர  சாதகன் நான். மேலும் சிருஷ்டியின் மாணவன்..

காயத்திரி சாதனையாலும், சிருஷ்டியின் வகுப்புகளாலும் நான் பெற்ற பலன்கள் மிக அதிகம். இதனால் தான் கடந்த 5 வருடங்களாக எந்தவித தீய  பழக்கமும் இல்லாத ஒரு‌  Teatotaller ஆக மாறினேன்...மனசலனங்கள் குறைந்து சமச்சீரான மனநிலையில் எப்பொழுதும் உணர்சிவசப்படாமல் எதையும் ஏற்கும் பக்குவமும், கோபதாபங்களில இருந்து விடுபட்டு அமைதியான மனதுடன் வாழம் பக்குவமும் அதிகரித்து கொண்டே உள்ளது. 

சிருஷ்டியின் வகுப்புகளால் மனம்‌, உடல், பிராணண் ஆகியவற்றிற்குள்ள தொடர்பு என்பதை புரிந்து கொள்ள முடிந்தது . மற்றும் சாதனையின் போது  மேற்கூறியவைகளை பயிற்சி மூலம் பகுத்து அனுபவ பூர்வமாக உணரும் ஆற்றலும் கிடைக்கபெற்றேன்.

5 வருடத்திற்கு முன்பு என் கதையே வேறு.‌மனம்போன போக்கில் புலனுக்கு அடிமைப்பட்டு அனைத்து கீழான ஆசைகளுடன்  வாழ்வின் நோக்கமும் அர்த்தமும் தெரியாமல் வாழ்ந்து வந்தவன்..

இந்த நிலையில் நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் மூலம் சித்தம் எவ்வளவு வலிமையானது என்பதை உணர முடிந்தது‌‌.. ஏன் சிரத்தையான தினசரி  சாதனை முக்கியம் என்பதும் தெரிய வந்தது.

நீண்ட நாள் நண்பரை சில காலங்கள்  கழித்து ஒரு நட்சத்திர விடுதியில் சந்திக்க   சந்திக்க நேர்ந்தது.. நலம் விசாரிப்புகளுக்கு பின்பு  He invited me for the Drings..

அப்படியே நடந்த உரையாடல்களை பகிர்கிறேன்.

Friend : Hey Man, I'm so deliged for our meet, let's celebrate ..!! Common,Lets have drings.

Me : Sorry dear..I'm a Teatotaller now. I can Provide u company  but have only moktail and sure BIGNo to Alhacol.

Frined: Is this u 😂...Man really unbelievable...It's ok..Insted of juices Why can't u take non alhoic beer. it is Just  a mocktail. Hope U r fine if I place an order..

Me: Just thought for a while and I don't want to disappoint him .I Said yes and had 2 Non alaholic beer..The taste and smell of the beer is exactly like a real one but with NO alhakol.

We had a good time and lovely conversation with  dinner , I returned back  home..

பிறகு வீடு வந்து  உறங்க சென்றேன்...திடிரென நள்ளிரவில் ஒரு நெடிய கனவு வந்தது...கல்லூரி நண்பர்களுடன் அதே நட்சத்திர விடுதியில் அதே இடத்தில் நண்பர்களுடன் நான் அமர்ந்து Drings order செய்கிறோம்... 

நான் : கனவில் நான் முழு விழிப்புணர்வு நிலையில் இருந்தேன்.. என் அந்த காரணங்களின்  நிகழ்ந்த சம்பாவனைகள் மற்றும் உணர்வுகள் அப்படியே

என் புத்தி :நீ எப்படி இங்கு.??நீ குடிப்பதை விட்டுவிட்டாயே? எதற்கு நண்பர்களுடன் மீண்டும் இங்கு குடிப்பதற்கு வந்து இருக்கிறாய்..இது சரியில்லையே!! இது நிஜமா பொய்யா ? நீயா இது ?

என் மேல் மனம் : இதுல என்ன இருக்கு...நீ இப்படி தான் இருந்த..அங்க பாரு எல்லோரும் உனக்கு தெரிஞ்சவங்க..பல வருட நீண்ட நண்பர்கள்..எவ்வளவு சந்தோஷமா இருக்க...You born for enjoying the life...சும்மா விடுடா.. புலனாம்..அடக்கமாம்😂

என் புத்தி : அது சரி.. உன் நிலை 5 வருடங்களுக்கு முன்பு வேறு.. இப்போது வேறு..புரிந்து கொள் என்று மன்றாடி  எனது ஆங்காரத்தை துணைக்கு கூப்பிட்டது.

என் ஆங்காரம் : புத்தி சொல்வது சரிதான் . நீ ஒரு காயத்ரி சாதகன்..புலன் ஆசைகளில், தேவையற்ற இச்சைகளில  இருந்து விடுபட்டு வாழ பழுகி இருப்பவன்..இது 2021 ..எதற்கு இப்போது இது..புத்தி சொல்வதை உடனே கேள் ..எழுந்து செல்‌‌..இன்னும் 5 நிமிடத்தில் நீ குடிக்கபோகிறாய்.

என் புத்தி :  அதே தான் சொல்கிறேன்.. நீ மட்டும் இதை செய்தால் உன் சாதகன் என்ற  ஆங்காரம் அழியும்..அப்படி அழிந்தால்  அந்த அனுபவ அறிவு மூலம் பெற்ற புத்தியாகிய நானும்  அழிவேன்.  உனக்கு இது தேவையில்லை ..எழுந்து செல்..

என் மேல் மனம்: இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மேல் மனம் புத்தியுடன் பேரம் பேசாமல்  உடனே தனது துணைக்கு சித்தத்தை கூப்பிட்டது.. 

என் சித்தம் : எனது   அனைத்து அனுபவங்களின் கருவூலம்..அமைதியாக எனது குடிகாரன் என்ற ஆங்காரத்தை எனது சித்தம் விழிபித்து கொண்டு, சாதகன் என்ற ஆங்காரத்தை மறைய செய்து மனதுடன் சேர்ந்து கொண்டு  என்னுடைய புத்தியை தாக்கியது...பழைய சூழ்நிலையை மீண்டும் தயார் செய்தது. அதற்கு ஏற்றவாறு நண்பர் ஒருவர்..

நண்பர்1 : மச்சி ..KingFisher உன்னோட Favorite Brand..அதே தான இப்போதும்😭

நண்பர் 2: அவன் எப்பவுமே ஒரே  Standard ..இத்தனை வருமும் அப்படியேதான்..ஒரே Brand தான்..எனக்கும் அதே சொல்லுடா..

என் புத்தி : வேண்டாம் ! வேண்டாம் என்று மன்றாடுகிறது..

என் ஆங்காரம் : மனதுடனும் , சித்தத்துடனும் இப்போது சேர்ந்து கொள்கிறது.. அது தனது சாதகன் என்ற ஆங்காரம்  மறந்து...குடிகாரன் என்ற ஆங்காரத்தை விழிப்பிக்கிறது.. இப்போது ஆங்காரம் மற்றும் மனம் மற்றும் சித்தத்துடன் சேர்ந்து  இறுதி முடிவெடுக்கிறது 

என் புத்தி : அனைத்தும்‌ தெரிந்து செய்வதறியாமல் ஒற்றை ஆளாய்‌ பலமற்று குடிக்க வேண்டாம் வேண்டாம்  கூறுகிறது... அது எதுவும்  செய்ய இயலாமல் என்னை பாக்கிறது.பிறகு சித்தமும்‌ மனமும் ஆங்காரமும் எகத்தாளமாக புத்தியை பார்த்து சிரிக்கின்றன..புத்தியும் கடைசியில் குடிகாரன் என்ற ஆங்காரத்தின்‌ முன்பு‌ மண்டியிட்டு முடங்குகிறது.

நான் : வந்த Beer ஐ குடிக்கிறேன்..ஆராவாரமாக சப்தமடுகிறேன்...பயங்கரமாக Enjoy செய்கிறேன்..

சப்த நாடியும் ஒடுங்கி வியர்த்துப்போய் எழுகிறேன்..அப்போதுதான்‌ நடந்தவை அனைத்தும் கனவு என்று தெரிந்து என்னை ஆசுவாச படுத்திகொள்கிறேன்..தவறு‌ செய்யாமல் திரும்பி விட்டோம் என்ற ஒரு நிம்மதியான உணர்வு.

 ஒருவருடைய‌ சித்தத்தில் சேகரித்த அனுபவங்கள் எவ்வளவு வலிமையானது என்று நன்கு உணர்ந்தேன்.. சித்த பதிவுகள் புத்தி உட்பட அனைத்தையும் எப்படி  முறியடிக்கும் என்பதையும் மற்றும் ஏன் தினசரி சாதனை மற்றும்  சித்தசாதனை மிக மிக முக்கியம் என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

எனது புரிதலின் படி மனமானது புலன்வழி அறிவால்  தினசரி குப்பையாகிறது. அது ஒரு வெள்ளை நிற உடை..தினசரி அதனை Soap கொண்டு  Wash செய்யாவிடில்  அந்த வெண்ணிற உடை அழுக்காகிவிடும்.. 

சில சமயங்களில் அந்த வெண்ணிற உடையில் பெரியகறை ஏற்படலாம். அதனை Stain Remover இல்லாமல் Soap  மட்டுமே  கொண்டு நிச்சயமாக சுத்தம் செய்ய முடியாது.

இங்கு மனம் என்பது வெண்ணிற உடை.  Soap என்பது தினசரி சாதனை..Stain Remover என்பது குரு பாதம் மற்றும் குருவின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் ..

ஒரே நிகழ்வு பல விளைவு! எனது பழைய அனுபவம் ( சித்தம் ), அறிவு(புத்தி) வேறுபடுகிறது. இந்த புத்தி “குடிக்க வேண்டாம் ” என்று அறிவுரை சொன்னாலும் எனது  அஹங்காரம் (ego) இறுதி முடிவு எடுக்கிறது. 

” கண்ணா! லட்டு திங்க ஆசையா!” என்று ஆசையைத் தூண்டுகிறது. இதில் பழக்கத்தினாலும் முயற்சியினாலும் புத்தி  சித்தம் வலுப்பட வலுப்பட அஹங்காரம் ego செயலிலக்கிறது!

இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றவரை gentleman  என்கிறோம். ஆனால் நான்‌ இதில் Gentle மேனாக இல்லை ( கனவாக இருந்தாலும்)

குரு அடிக்கடி சொன்‌ன ஒரு விடயம் நன்கு புரிந்தது.பயிற்சியாலும் நல்லவர் தொடர்பாலும் தீய ego வை வலுவிலக்கச் செய்வதே வக்கிரங்கள் மறைய வழி!  அதற்கு தினசரி சாதனை தான் ஒரே வழி என்பது புலப்பட்டது..

வெப்பத்தைத் தனித்தால் நீர் ஆவியும் ஆகாமலும், உறையாமலும் அமைதியான மனக்குளம் ஆகிறது. இந்நிலையில் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற வேறுபாடு இல்லாததால் “ஒரு மனப் படுகிறது”!  

There is no conflict among Ego,Intellect and Past experience based memory/wisdom! இதைத் தான் ” மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” என்பதன் அர்த்தம் என்று உணர்நதேன்

வக்கிரம் மறைய மனதைப் பண்படுத்தும் உடல் மற்றும் மனப் பயிற்சி தேவை. இதைத்தான் ஆசனம் தியானம் என்று குரு‌ குறிப்பிட்டார்கள் என்ற நிதர்சனம் நன்கு புரிந்தது. 

நன்றிகள் குரு..உங்களாலும் குரு மண்டலத்தாலும் நான் கற்றதும்‌பெற்றதும் மிக அதிகம்..

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...