குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 10, 2019

ஸ்ரீ காயத்ரி சித்தரின் வழிகாட்டல் - 01

குருநாதரை நாம் அடைகிறோமா? குரு எங்களைத் தேர்ந்தெடுக்கிறாரா? என்பது பலருக்கும் விடைதெரியாக் கேள்வி!!

என்னைப்பொறுத்தவரையில் குருதான் எம்மைத் தேர்ந்தெடுக்கிறார், எமது பக்குவத்திற்குத் தக்க! 

எனது 13 வயதில் எனது தந்தையார் எனக்கு எனது குரு அகத்திய மகரிஷி என்று சொல்லித்தந்தது ஒரு அனுபவம். நான் சிறுவயது முதல் அம்மாவின் செல்லப்பிள்ளை! அப்பாவைப்பொறுத்தவரையில் ஒரு எடக்கு முடக்கானவன்! அவரது செல்லப்பிள்ளை எனது இரண்டாவது தம்பி! 

நானும் சிறுவயதில் இருந்து ஒருவித எதிர்ப்பு மன நிலை உள்ளவன். இலகுவில் எவருடனும் பழகிவிடமாட்டேன். அம்மாவைத்தவிர எவரிடமும் உணவு உண்ண மாட்டேன். அம்மாவைத்தவிர எவரும் எனது உடலைத்தொட்டு குளிப்பாட்டவோ, உடை உடுத்தவோ விட மாட்டேன், கோபம் அதிகமுள்ளவன். 

இப்படி இருக்கும் போது எனது தந்தையார் முருக உபாசகர், தினசரி காலை எழுந்து குளித்துவிட்டு கந்தர் சஷ்டி கவசம் படிப்பார். எதையும் பார்த்துப் படிப்பதில்லை. அவ்வளவும் மனப்பாடம். அவருடன் சேர்ந்து எனது தம்பியும் பக்தி வசமாக காலை வழிபாடு நடக்கும். நான் இதை கட்டிலில் புரண்ட வண்ணம் பார்த்து சில நேரங்களில் இருவரும் ஏதோ கூத்துக்காட்டுகிறார்கள் என்ற போக்கில் நக்கல் பார்வையுடன் பார்த்துக்கொண்டு இருப்பேன். 

எனது தந்தை வைத்தியர், மருந்து கொடுக்கும் போது எலுமிச்சம் பழம் கைகளில் வைத்து கண்களை மூடி சிறிது நேரம் வைத்திருந்து நோயாளிகளுக்கு கொடுப்பார். ஒரு நாள் நான் இதை அவரிடம் நேரடியாக ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள்? என்று கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டு இதில் விஷயமிருக்கிறது, வேண்டும் என்றால் உனக்கு இதை நிருபித்துக்காட்டுகிறேன் என்று கூறி என்னையே இரண்டு எலுமிச்சம் பழம் வாங்கி வரச்சொல்லிவிட்டு உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள், இருவரும் கைகளில் ஒரே அளவு நேரம் வைத்திருப்ப்போம், பின்னர் சாமித்தட்டில் வைத்துவிடுவோம், யாருடைய எலுமிச்சம் பழம் முதலில் வாடுகிறது என்று பார்த்து விட்டு அதன் பின்னர் நான் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பது பற்றி பேசுவோம் என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் கைகளில் வைத்து விட்டு சாமிப்படத்தின் முன்னால் வைத்துவிட்டோம். இரண்டும் நன்கு பழுத்த எலுமிச்சம் பழங்கள். குறைந்தது இரண்டு நாட்களில் வாடத்தொடங்கி விடும். 

ஒவ்வொரு நாளும் எனது தந்தை அந்தப்பழத்தினை தனது வழிபாடு முடிந்தவுடன் கைகளில் எடுத்து சிறிது நேரம் கண்களை மூடி தியானித்துவிட்டு அதே இடத்தில் வைத்துவிடுவார். இரண்டு நாட்களில் நான் வைத்த பழம் அழுகத்தொடங்கி விட்டது. எனது தந்தை வைத்த பழமோ அப்படியே இருக்கிறது. ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல, ஒரு வாரத்திற்கு மேல்! எனக்கு பெரிய அவமானமாகி விட்டது! நான் தோற்றுவிட்டது போல் மனதிற்குள் கவலை ஆட்கொள்ளத்தொடங்கியது. அப்பாவிடம் தோற்று விட்டோம் என்று பெரும் கவலையும் கோபமும்! இரண்டு நாட்களின் பின்னர் அவர் சிரித்துக்கொண்டு " எமக்குத் தெரியாத அறியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது, அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்,  எமது பரம்பரை அகத்திய மகரிஷியை குருவாக கொண்ட பரம்பரை, குருமுகமாக வைத்தியம் கற்றுக்கொள்ள வேண்டும், அகத்திய மகரிஷியை குருவாக நினைத்து வழிபடு, அவர் உனக்கு வழிகாட்டுவார்" என்று கூறி அந்த வருட நவராத்ரியில் எனது கைகளால் வரைந்த மகாகுருவின் படத்தை வைத்து கற்பூராரத்தி காட்டி குரு மந்திரம் உபதேசித்து தொடர்ந்து வணங்கி வா உனக்கு தகுந்த குரு கிடைப்பார்" என்று கூறினார். 



நானும் தொடர்ச்சியாக குரு நாதரை வணங்கி வந்தபொழுது, எனது தந்தையார் கூறுவது போல் தினசரி பாராயணம் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனினும் நான் தோற்று விட்ட எனது தந்தையார் செய்வதையே செய்யக்கூடாது என்று உள்ளே ஒரு ஆணவமும் இருந்தது! ஆகவே வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியபொழுது 1894 ம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட பழைய நூலில் அகத்திய மாமுனியின் மனோன்மணி பூசை அகவல் என்ற தோத்திர நூலை தேர்ந்தெடுத்து தினசரி படிக்கத்தொடங்கினேன். 

இப்படி எனது ஆன்மீக வாழ்வு தொடங்கியது எனலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் எனது தந்தையிடம் தோற்றுவிட்டோம் என்ற உள்மனப் போராட்டமே இதனுள் தள்ளியது என்று கூடக்கூறலாம். 

எனது மனம் எப்படி எலுமிச்சம் பழம் நீண்ட நாள் இருந்தது என்பது பற்றி விளக்கம் தெரியாமல் தவித்துக்கொண்டே இருந்தது. சிறுவயதிலிருந்து புத்தகம் சேகரிப்பதும் படிப்பதும்தான் இருந்த ஒரேயொரு கெட்ட பழக்கம், இன்னும் தொடர்கிறது!

பாடசாலை நூலகத்திலிருக்கும் ஒரு புத்தகம் விடாமல் படித்திருந்தேன். தற்போது ஏற்பட்ட புதிய கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கையில் பாடசாலை நூலகத்தில் இருந்த "மனித காந்தம்" என்ற சிறிய நூல் கைகளில் கிடைத்தது. இந்த நூலைப் படித்துக்கொண்டு செல்ல எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இவ்வளவு நாள் எப்படி எனது தந்தை வைத்த எலுமிச்சம் பழம் வாடாமல் இருந்தது என்பதற்கு விடை கொடுக்கப்பட்டிருந்தது. எனது தந்தையார் எனக்கு செய்யச் சொன்ன அதே பயிற்சி ஒருவனுடைய பிராணசக்தி வலிமையாலும் தூய்மையாலும் ஏற்படுவது என்ற விளக்கம் இருந்தது. அதைப்படித்த பின்னர் மீண்டும் பெரும் கவலைக்கு உள்ளானேன், எனது பிராணன், காந்தம் தூய்மை இல்லை என்பதால்தான் இரண்டு நாட்களில் வாடி விட்டது என்று! பின்னர் அந்த நூலை எழுதியவரின் மற்றைய நூற்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தேன். 

அந்த நூற்களின் ஆசிரியர்தான் எனக்காக காத்திருந்த எனது முதல் குரு ஸ்ரீ காயத்ரி சித்தர் ஆர். கே. முருகேசு சுவாமிகள்! 

அவரது தொடர்பு எப்படி ஏற்பட்டது என்று இன்னொரு பதிவில் கூறுவோம்! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...