குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 16, 2018

சித்த யோக பாட தீட்சை கேள்விகளும் பதிலும்


இது தொடர்பான பாடம் : இங்கே



1.உடலில் சில உறுப்புகள் 24 மணிநேரமும் இயங்கி கொண்டு உள்ளன... நுரையீரல், இதயம் முதலியன. இவற்றை முறைப்படுத்த முடியுமேயன்றி ஓய்வெடுக்க வைக்க முடியாது‌ எனில் ஓய்வெடுத்தலின் அர்த்தம் என்ன??

- கிருஷ்ணா, சென்னை - 

ஓய்வு என்பது  நாம் உடலை வேலை எதுவும் செய்யாமல் வைத்திருப்பதைத்தான் பொதுவாக கூறுகிறோம். ஆனால் எமது பிராண சக்தியின் பெரும் பகுதி மனதின் இயக்கத்தால் வீணாக்கபடுகிறது என்பதையே யோக சித்த விருத்தி நிரோதம் என்று சொல்லுகிறது. 

அடுத்து இயக்கம் இன்றி உயிர்ப்பு இல்லை என்ற யதார்த்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். 

ஆகவே மனிதன் தனது இதயம், உள்ளுறுப்புகள் அனைத்தின் இயக்கத்தை நிறுத்தி ஓய்வு எடுக்க முடியாது. 

இதனை ஒரு நிறுவன முகாமைத்துவத்தின் உதாரணம் மூலம் விளங்குவோம். ஒரு நிறுவனம் இயங்குவதற்கு அடிபபடை செலவு என்பது அந்த நிறுவனம் இலாபம் ஈட்டினாலும் சரி, நஷ்டமடைந்தாலும் சரி செய்யவேண்டியவை. உதாரணம் வேலையாள் சம்பளம், அலுவலக வாடகை என்பவை, இதற்குமேல் அதன் இயக்கத்துக்கு தேவையான operational cost,

அடுத்தவை கேளிக்கை செலவும், வீண்பயணம் போன்ற செலவுகள், இத்தகைய செலவுகளால்  நிறுவனத்தின் இலாபம் குறையும். 

இதேபோல் உடல் இயங்குவதற்குரிய அத்தியாவசிய உறுப்புகளின் பிராண செலவுகளை நாம் நிறுத்த முடியாது, ஆனால் தேவையில்லாமல் செலவழிக்க கூடாது. இதையே நாம் உறங்குவதன் மூலம் அடைய நினைக்கிறோம். ஆனால் எமக்கு இருக்கும் மனதினதும், எண்ணங்களினதும் இயக்கம் நாம் உறங்கினாலும் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும். இது எப்படி என்றால் நிறுவனம் குழப்பமாக இருக்கிறது என்று மூடினாலும் அதன் உழியர்களின் ஆவேசத்தால் வெளியில் இருந்து கல் எறிதல் போன்ற குழப்பங்களை செய்வது போன்றது. 

ஆகவே உண்மையான ஓய்வை அடைய விரும்புபவன் தனது மனதின் இயக்கத்தை சரி செய்ய வேண்டும். மீண்டும் மனதைக் கட்டுப்படுத்துவதால் இதை செய்ய முடியாது. மனதின் எண்ணங்களை கவனிக்காமல் இருப்பதால் எமது பிராண சக்தி வீணாகுவது தடைபடும். இது எப்படி நிகழ்கிறது என்பதை விளங்க இன்னும் சற்று ஆழமாக மன - உடல் - நரம்புத்தொகுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். அல்லது நீங்களே பயிற்சித்துப்பார்த்து அறிந்து கோள்ளவேண்டும். இரண்டாவது முறையே சரியானது. 

ஆகவே நீங்கள் கேட்ட ஓய்வெடுத்தலின் அர்த்தம் என்ன என்பதற்கான பதில்: யோக முறையில் ஓய்வெடுத்தல் என்பதன் விளக்கம் உடலை பரிபூரண ஓய்வில் வைத்து அதனிலும் நுண்மையான மனதினது, சித்தத்தின் உணர்ச்சிகளில் தூண்டலில் இருந்து விலகி சாட்சி பாவமாக இருக்க பழகுவதன் மூலம் மேலும் அதிக பிராண சக்தி சேமிக்கப்படும். இதனால் மேலும் ஆழமான ஓய்வினை அடையலாம். அதற்குரிய எளிய பயிற்சியையே இந்த பாடம் குறிப்பிடுகிறது. 

2. இந்த ஓய்வு என்பது ஸ்தூல உடலுக்கு மட்டுமா? சூட்சும , காரண உடலுக்கு எவ்வாறு இது பொருந்தும்??

மேலே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சூக்ஷ்ம சரீரம் எனபது மனதும், சித்தமும் இயங்குவது, ஆகவே மேற்குறித்த வகையில் ஓய்வெடுப்பதால் சூக்ஷ்ம சரீரத்திற்கு ஓய்வு கிடைக்கீறது, அல்லது மேற்குறித்த்த பயிற்சி உண்மையில் சூக்ஷ்ம சரீரத்திற்கான ஓய்வு எனலாம். 

காரண சரீரம் என்ன வென்பது சில பயிற்களிற்கு பின்னர் என்னவென்று அறியலாம்

 3. மனம் என்பது சுவாசத்திற்கு தொடர்புடையது  எனில்  மன ஓய்வு என்பது எதனை குறிக்கும்??

மன ஒய்வு என்பது தேவையற்ற எண்ணங்களை குறைப்பது. இதை சாதிப்பது எமது எண்ணங்களை கூர்ந்து கவனிப்பதன் மூலமும், தொடர்ச்சியான மந்திர ஜெபத்தினாலும் சாதிக்கலாம். 

கூர்ந்து கவனிப்பதால் எண்ணங்களின் தோற்றமும், முடிவும் அனுபவபூர்வமாகிறது. இதனால் எண்ணம் உருவாகும்போதே கட்டுப்படுத்தும் ஆற்றல் சாதகனுக்கு உண்டாகிறது. 

மந்திர ஜெபத்தல் மனம் குறித்த ஒரே எண்ணத்தை மட்டும் உருவாக்குவதால் மற்றைய எண்ணங்கள் உண்டாகாமல் எண்ணங்கள் குறைக்கப்படுகிறது. 


4. ஆக உடலை எப்போதும் parasympathetic  நிலையில் வைப்பதுதான் மனதை ஒழுங்கு படுத்த உதவும் வழியா ?? எண்ணங்களுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை இந்த  parasympathetic நிலை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

இப்படி நேரடியாக நரம்பியலுடன் தொடர்பு படுத்தி கூறுவது அறிவியலின் நெறிமுறைகளுக்கு (Scientific ethics) ஏற்ப சரியானதல்ல. இவற்றை இப்படியான கருதுகோளாக எடுத்துக்கொண்டு முறையான் ஆய்வின் பின்னரே கூறமுடியும். 

எனினும்  parasympathetic என்பது உடல் அதிக உழைப்பிற்கு பின்னர் ஓய்வுக்கு கொண்டுவருவதற்கான உடலின் ஏற்பாடு. 

நாம் யோகத்தின் மூலம் ஒருவிதத்தில் எமது நரம்பு இயக்கங்களை மனதினை, பிராணனினை, சித்தத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் முயற் சிக்கிறோம். இதை இக்காலத்து robots இனை வைத்து விளங்கலாம். robot மனித உடல் என்றால் அதை இயக்கும் Program மனம், சித்த்தம், இவற்றின் எண்ணங்கள். Robot இன் இயக்கம் எளிமையாக இருப்பதால்  மனிதன் algorithm  இனை மாற்றுவதன் மூலம் Robot இனை கட்டுபடுத்தலாம், இயக்க்கலாம். ஆனால் மனிதன் தனது சொந்த algorithm இனை மறந்து விட்டதால் மீண்டும் அதை பெறும் முயற்சியே யோகம் - அஷ்டாங்க யோகம் என்று சொல்லலாம். 

இதுவே சுருக்கமான விளக்கம், மேலும் நேரம் கிடைக்கும்போது விரிவாக் கூறுவோம். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...